Wednesday, 28 May 2014

அஷ்டாவக்கிரன் கோணல் நிமிர்த்த

  1. வாராது போன இறைத்தூதுவன்
    மாட்டுக் கொட்டில் தேடுகிறான்
    பிரசவித்து அற்புதம் நிகழ்த்திட
    குடையாய் விரிந்து காத்த பாம்பு
    சட்டையுரிக்கும் அவசரத்தில்
    சுருங்கி நின்றதாம் மழை மறந்து
    அஷ்டாவக்கிர கோணல் நிமிர்த்த
    அணிவகுக்குது மனிதச் சங்கிலி!

இறுகி சொரசொரக்கும் மனப் பாறை

  1. இறுகிய சொர சொரக்கும் மனப்பாறை
    அதனடியில் புதையுண்டு யுகங்களாய்
    பதுங்கிக் கிடக்குது அழுக்குத் தேரை
    அருவருப்பை அசை போட்டபடி
    சரும ரேகையில் எல்லோர் முகமும்
    நசுங்கிப் பிதுங்கி நரம்புகள் புடைத்து
    சார்பியல் கொம்புகள் பக்கவாட்டில்
    மரபியல் தாடி சிலந்தி வலைபின்னி
    ஃப்ராய்டிசக்குறி ப்ரியாபிஸத்தில்
    ஷோக்காய் பின் நவீனத்துவ கண்ணாடி...
    தேரை எதன் குறி? பாறை எதன் குறி
    அதிர்வு கேட்டால் ஜந்து விஷ நீர் பீச்சும்
    இதுவரை ஜந்து ஜந்து தான் உருவில்
    நம் பரினாமப் பூரான் கால்கள் அதில் அடக்கம்.

பெட்டிக்கடை நாராயணனைத் தேடிப்போனேன்

  1. பெட்டிக்கடை
    நாராயணணை
    விட்ட இடத்தில்
    தேடிப்போனேன்
    குறு நடையாய்
    நீளக் கால் போட்டு
    ஓட்டமும் நடையுமாய்
    சந்து பொந்துகளில்
    எங்கும் தேடினேன்
    அவன் அகப்படவில்லை...
    கால தூரத்தில் அவனுக்கு
    தாடி நரைத்திருக்கலாம்
    மச்சம் முகத்தில் புதிதாய்
    உன்மையைச் சொன்னால்
    எதிர் வந்தவர் பலர்
    அவன் போலவே தான்
    ஆனால் அசல் வேறு
    நகல் வேறெனப் புரிதல்
    கொஞ்ச நாளில் கூடிற்று
    இனியாவது நாராயணணைக்
    காணக் கிடைக்குமா?
    பெட்டிகடை நாராயணனை
    எத்தனை பேருக்குத் தெரியும்?

அதிர்ச்சிக்கும் ஹோமியோ சிகிச்சை

  1. எனது நெருங்கிய நண்பர் ராஜாஜி. க்ரிக்கெட்டர். அலுவலகம் சேர்ந்த நாளிலிருந்து இன்று வரை நான் எடுக்கும் எனது குடும்ப சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளிலும் அவரது ஆலோசனை இருக்கும். அவ்வளவு நெருக்கமானவர். 80 களில் அடூரின் எலிப்பத்தாயம் திரைப்படம் பார்த்துவிட்டு டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு கார சாரமாக விமர்சித்ததும் விவாதித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது. நான் பரீக்ஷாவில் பங்கேற்றபோது அவரும் மற்ற நண்பர...்களும் நவீன நாடகம் பார்ப்பார்கள் விமர்சிப்பார்கள் கூத்துப் பட்டரையின் எல்லா தயாரிப்புக்களுக்கும் அவர்கள் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் நான் நாடகம் போட்டால் ராஜாஜி தான் முன்னனி நடிகர் .

    1996 ல் நான் ஹோமியோபதி சிகிச்சை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என விரும்பிய போது, ராயப் பேட்டையில் எங்கள் இருவரது பொது நண்பரான கோபியின் வீட்டின் முன்னறை எனக்காகத் தத்தம் செய்யப்பட்டது. ஒரு நல்ல நாள் பார்த்துத் துவங்கினோம். வெற்றிவேலும், சந்திர சேகரும் (பழைய பரீக்ஷா நடிகர்) நான் பரிந்துரைக்கும் மருந்துகளை முறைப்படி தயார் செய்து வினியோகிப்பார்கள் .கோபியின் அப்பா, அம்மா, மனைவி, மகன்கள் இருவர் என எல்லோரது பங்களிப்போடும் சிகிச்சை துவங்கியது.

    ராஜாஜி தான் முதல் துயரர். அவரது இடப்புற இடுப்புப் பகுதியில் வலி. மருந்து தரப் பட்டதும் தட்சினை வைத்து ஆசீர்வாதம். இரண்டாவது துயரர் ஷண்முகம்; அவரும் பரீக்ஷா நடிகர். அவரது ஆசீர்வாதம். இப்படியாக நாங்கள் நமக்கு நாமே என வளர்வதற்கு ஹோமியோபதியைப் பயன் படுத்திக் கொண்டோம்.

    ஒருமுறை ராஜாஜி தனது, மாமனார் வீட்டிற்குக் குடும்ப சகிதம் சென்றார். அவர் பஹூ குடும்பி. அண்ணண் குடும்பம் எல்லாம் சேர்த்து பெரிய யூனிட். கும்பகோணத்திற்கு வேனில் போனார்கள். மறு நாள் காலையில் 8 மணிக்கு ராஜாஜியிடமிருந்து போன். ஒரே பதட்டம் “காலை 4 மணி வாக்கில் வான் அணைக்கரைப் பாலம் கடந்தபோது இருட்டில் பாலச் சுவற்றில் முட்டி மோதியது எல்லோரும் தூக்கக் கலக்கம் நல்ல வேளையாக வேன் நின்றுவிட்டது; கரணம் தப்பினால் கொள்ளிடத்திற்குள் விழுந்திருக்கும். எல்லோருக்கும் அடி காயம், குறைந்த பட்சம் சிராய்ப்பு. எப்படியோ சமாளித்துக்கொண்டு வேறு வாகனம் பிடித்துக் கும்பகோணம் போய் அரசு மருத்துவமனையில் முதலுதவி. ஓரிருவருக்குத் தையல் போட வேண்டியிருந்தது. எதோ ஒருவழியாய் எல்லா இடர்பாடுகளையும் சமாளித்துவிட்டேன். ஆனால் என் மனைவி இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை இங்கே மருத்துவர் ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுக்கிறார் ஒருவர் ஸ்கான் சொன்னால் இன்னொருவர் எம் ஆர் ஐ என்கிறார். நான் என்ன செய்யனும் இப்போ? ” இதுதான் ராஜாஜியின் பதட்டம்.

    “எல்லோரையும் கூட்டிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர். நான் பார்த்துக் கொள்கிறேன். உன் மனைவிக்கு அதிர்ச்சிதான். அவர்களைப் பேச வைப்பது எனது பொறுப்பு” என்றும் உறுதி சொன்னேன்.

    அடுத்த நாள் மாலை குடும்பம் சென்னை வந்தது. தாம்பரம் சானடோரியத்திலுள்ள ராஜாஜியின் வீட்டுக்குப் போய், சரிதைப் பதிவை ஆரம்பித்தேன். நரம்பியல் சம்பந்தப்பட்ட குறிகள் எல்லாவற்றையும் பரிசோதனை செய்து ஸ்கான் எம் ஆர் ஐ அவசியமில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டேன்.
    ஓபியம் 200 9 டோஸஸ் எழுதிக்கொடுத்தேன் 2மணிக்கொரு முறை ஒரு பொட்டலம் அப்படியே வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிடச் சொன்னேன்.

    மறு நாள் மாலை போனில் ராஜாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் மனைவியே பேசினார். குரலில் பிசிறு இல்லை பயம் போய்விட்டது. ஷாக்கிலிருந்து விடுபட ஓபியம் உதவி செய்து அவரது குரல் நாண்களை பழுது பார்த்துச் சரி செய்திருக்கிறது.

    பாப்பாவரேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஒபியத்திற்கு இந்த அற்புதக் குணம் உண்டு எனப் படித்திருக்கிறோம். ஆனால் நேரில் அற்புதம் நிகழ்வதைக் காண என் நண்பர் ராஜாஜியே துணை புரிந்தார்.

    மே மாத இறுதியில் அக்கௌண்டண்ட் ஜெனரல் தணிக்கை அலுவலகப் பணியிலிருந்து ராஜாஜி ஓய்வு பெறுகிறார். அவரும் அவரது குடும்பத்தாரும், உடல் நலத்தோடும், உல்லாசத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

கருப்பைக் கட்டி-ஹோமியோபதி சிகிச்சை

  1. எனக்கு மனவளக்கலை தவ மையங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தவர் திரு நந்தகுமார். அனேகமாக, சென்னை நகரில் செயல்படும் 6 அல்லது 7 செண்டர்களில் ஹோமியோபதி வகுப்புகள் எடுத்திருக்கிறேன். சைதாப்பேட்டை செண்டரில் வகுப்பு எடுக்கும்போது நிறைய துயரர்கள் என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்தார்கள்.

    திருமதி ராஜேஸ்வரி வயது 45. தன் உபாதைகளை எனக்கு ஒவ்வொன்றாகக் கூறினார். வீட்டு வேலைகளில் நாட்டமில்லை. இரண்டு பெண் குழந்...தைகள். மூத்தவர் எம்பீபீஎஸ் படிக்கிறார். அடுத்தவர் பள்ளிப் படிப்பின் இறுதிக் கட்டம் அவரும் அல்லோபதி மருத்துவக் கல்வி கற்பதிலே நாட்டம். குழந்தைகளைக், கணவரை சரியாகக் கவனிக்க முடியவில்லை. விட்டேத்தியாக இருக்கத் தோன்றுகிறது. தன் கணவரின் சகோதர் குடும்பமும் சேர்ந்து ஜாகை. பெரிய வீடு. மாமனார் மாமியார் எல்லோரும் ஒன்றாக.. தன்னால் சுறுசுறுப்பாய் வேலை செய்ய முடிவதில்லை. கெட்ட பெயர்தான் மிச்சம்.

    கைகளைக் காண்பிக்கிறார். விரல்கள் எங்கும் வெடிப்பு. பாளம் பாளமாக. கால்களிலும் வெடிப்பு. பாதம் முழுதும். காலை ஊன்றவே சிரமம். அதும் காலையில் எழுந்ததும் நடக்கவே முடியாதபடிக்குக் குதிகால் வலி. ஃபைலைக் கொடுக்கிறார். மாத விடாய் மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு தடவை தான் ரத்தப் பெருக்கு பெரும்பாடு. வலியும் அதிகம். அல்ட்ரா சௌண்ட் ஸ்கான் ரிப்போர்ட் கருப்பைக் கட்டி 4 செ.மீ அளவு, பல்க்கீ யூடிரஸ். நல்ல வேளையாகக் கருப்பையின் கழுத்துப் பகுதியில் seedling fibroid இரண்டு. ஆனால் புண்ணோ, அடைபடும் அளவுக்கோ இல்லை. இருந்தாலும், கைனக்காலஜிஸ்ட் கருப்பையை அகற்றிவிடலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். எளிமையான ஆலோசனை. முதல் மகள் எம்பீபீஎஸ் படிக்கிறவர். மருத்துவ விழிப்புணர்வு உள்ளவர். கருப்பை அகற்றும் முடிவுக்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை.
    கருப்பைக் கட்டியைக் கரைக்க முடியுமா? ரொம்ப ஸிம்பிளாகக் கேட்கிறார்? முயற்சிப்போம். அறுவை சிகிச்சைக் கடைசி ஆப்ஷன்.
    துயரர் சரிதையைப் பதிவு செய்தேன். ஸெபியா 30 4 உருண்டைகள் இரண்டு வேளை தினமும் முதல் வாரம் பின்னர் மூன்று நாளைக்கொருமுறை.

    ஆறு வாரங்கள் கழித்து வந்தார். கை கால் விரல் வெடிப்புகள் கணிசமாகக் குறைந்திருந்தன. மாத விலக்கும் வந்திருக்கிறது அவ்வளவாக பெரும்பாடு இல்லை வலி சுத்தமாக இல்லை
    இம்முறை ஆரம் ம்யூரியாட்டிக்கம் நேட்ரோனேட்டம் 6x வீரியத்தில் மாத்திரைகள். மூன்று வேளை. தினமும் 2 மாதங்கள்
    தூஜா 1எம் மாதம் ஒரு டோஸ்.

    நல்ல முன்னேற்றம். இன்னும் இரண்டு மாதங்கள் செபியா 200. 15 நாளைக்கொருமுறை ஒரு டோஸ்
    6 மாதங்கள் கழித்து ஸ்கான் மீண்டும். ரிப்போர்ட் முன்னேற்றத்தைக் காட்டுகிறது, seedling fibroids கரைந்துவிட்டன. பெரிய ஸைஸ் கட்டி ஒரு செ.மீ அளவிற்கு சுருங்கிவிட்டது. பல்க்கி யூட்ரஸ் அப்படியே இருக்கிறது.

    ஃராக்ஸீனஸ் அமெரிக்கானா தாய்த் திரவம் இரு வேளை 10 சொட்டுக்கள் தினமும். இரண்டு மாதம் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தினேன்.

    அதன் பின் அவருக்குப் ப்ரச்சினைகள் இல்லை. மனக் குறிகளில் நல்ல முன்னேற்றம், சுறுசுறுப்பாகக் குடும்ப வேலைகளில் ஈடுபட முடிகிறது. விரல் வெடிப்புக்கள் போய்விட்டன. குதிகால் வலி இல்லை செபியா ஆளுமையே மாற்றும் பலம் கொண்டது. ஆழ்ந்து வேலை செய்யும். சர்ஜரி தேவையற்றும் போனது

    இரண்டாவது மகளும் எம்பீபீஎஸ் படிக்கிறார் இப்போது. இந்த ஐந்து வருடங்களில் குடும்ப நண்பர்களாகி விட்டனர். புது வீடு கட்டி, ஜூன் 2 ஆம் தேதி காலை கிரகப் பிரவேசம். அழைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தம்பதி சமேதராக வந்து.
    மனதில் நிறைவு புலப்படுகிறது.

அடர்வனத்தில் பலத்து வீசியது காற்று

  1. அடர்வனத்தில் பலத்து வீசியது காற்று
    இலைக்குள் நுழைந்தன பல நிறங்கள்
    உல்லாசத்தின் கனவில் மிதந்தது இலை
    வானவில்லைப் பின்னி ஒளிரவைப்பேன்!
    சோகைப் பூவே! நீ சிவப்பை பூசிக்கொள்!
    ஏ சிறகுதிர்த்த மயிலே! நீலம் எடுத்துக்கொள்!
    மரமல்லியே நீ ஏன் வெள்ளையாய் இருக்கனும்?
    குயிலே! காகத்தின் கறுப்பில் மஞ்சள் கலந்திடு!
    அலுப்பூட்டும் கறுப்பு உனக்கு வேண்டாம்!
    ஆணைக்கு யாரும் ஆமோதிக்கவில்லை...
    பாவம்,இலைக்கு நல்ல மனசென நம்பினர்
    நிறம் மருவி இலக்கற்று துள்ளித் திரிந்த
    வெட்டுக்கிளியின் கோபத்தில் மூளியானது இலை
    துளிர்க்காத இலைக் குறைக்காய் அழுது புலம்பி
    நிறக் குறை ஒரு குறையே இல்லை என்றது.இலை
    அதனதன் நிறத்தில் நிரந்தரம் கண்டனர் யாவரும் !

பித்தப்பை கற்களைக் கரைப்பதெப்படி?

  1. திரு. பால சுப்ரமணியம்- எனது நண்பர் ஒருவர் அனுப்பிய துயரர். வயது 54 . மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் வந்தார். ஃபைல் ஒன்றும் கொண்டு வந்தார். நீங்கள் உங்களுடைய உபாதையை சொல்லுங்கள் குறித்துக்கொள்கிறேன் பின்னர் ஃபைல் பார்க்கிறேன் என்றேன்
    அவருக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் இரவு 10 மணிபோல் மேல் வயிற்றில் வலி கொஞ்சம் கடுமையான வலி. குமட்டிகொண்டே இருந்து அரை மணி நேரத்தில் இரு முரை மஞ்சளாய் வாந்தி .செரிமா...னம் ஆகாதது எல்லாம் வந்திருக்கிறது. வாந்தி எடுத்தும் வலி குறையவில்லை அருகிலிருந்த மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஸைக்ளோபாம், பனாப்ரஸோல் மாத்திரை, ஊசியோடு பொழுது விடிந்தது. மாத்திரை சாப்பிட்டால் வலி குறைகிறது. ஊசி போட்டால் 3 அல்லது 4 மணி நேரம் வலி இல்லை. பின்னர் வரத்தான் செய்கிறது. வாந்தி நின்றுவிட்டது. மறு நாள் முறையாக அல்ட்ராசௌண்ட் ஸ்கான் படம் எடுத்திருக்கிறார்கள். பித்தப்பையில் இரு கற்கள் ஒன்று 5 எமெம் இன்னொன்று 7 எமெம்.

    மாத்திரை 2 வாரத்திற்கு எழுதிக்கொடுத்து சாப்பிட்டு வாருங்கள் வலி அதிகமாயிருந்தால் வந்து அட்மிட் ஆகிவிடுங்கள். வலி மட்டுப்பட்டால் மாத்திரை முடிந்ததும் மறு பரிசீலனைக்கு வாருங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    அவரது நண்பர் என்னைப் பார்க்கச் சொன்னாராம் ஃபைலோடு வந்துவிட்டார். கோப்பை வாங்கிப் பார்த்தேன். ரத்தப் பரிசோதனை அளவுகள் குறித்துக்கொண்டேன். அவருக்கு ரத்த அழுத்த நோய் இருக்கிறது அல்லோபதி மருந்து எடுக்கிறார். நல்ல வேளையாக சர்க்கரை நோய் இல்லை.அவ்வப்போது மேல் வயிற்றிலும் நேர் பின்னால் முதுகிலும் வலி வருவதும் போவதுமாக இருக்கிறது.
    அவரது, பசி, ருசி, தாகம், வேர்வை, மலச்சிக்கல் கேள்விகளுக்கு பதில் சேகரித்தேன்.

    இனிப்பில் நாட்டம் அதிகம் பால் பிடிக்காது
    பயந்த சுபாவம். கொஞ்சம் சுமாராய் பூசின மாதிரி உடலமைப்பு. வேர்வைப் பிசிபிசுப்பு எப்போதும். தலையில் ரொம்பவே ஜாஸ்தி. அடிக்கடி ஜலதோஷம். நெஞ்சில் இரங்கிக்கொண்டு ப்ராங்கைட்டீஸ் உபத்திரவம் அதிகம். வயிற்றில் எப்போதும் வாயுத்தொல்லை; உப்புசம்.

    இரண்டு மருந்துகள் எழுதிக் கொடுத்தேன். கல்காரியா கார்ப் 200 தினமும் முன்று வேளை 4 உருண்டைகள் சாப்பிடுமுன். 15 நாட்கள்.
    பின்னால் முதல் மருந்தை நிறுத்திவிட்டு இரண்டாம் மருந்தை ஆரம்பிக்கணும். கொலெஸ்டெரினம் 200 காலை , இரவு இரு வேளை 4 உருண்டைகள் 15 நாட்கள் 1 மாதம் கழித்து மறு பரிசீலனை. ஒரு வேளை வலி அதிகமாய் வந்தால் கல்காரியா கார்ப் 1 எம் 4 உருண்டைகள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை. 3 அல்லது 4 தடவை போட்டுக்கொள்ளுங்கள் என்று எஸ்.ஓ.எஸ் மருந்தும் சொல்லி அனுப்பி வைத்தேன்.

    ஒரு வாரம் கழித்து வந்தார் வலி உபத்திரவம் ஏதும் இல்லை. வாந்தி, குமட்டல் இல்லை. வாயுப்பொருமல். பிரிவது அதிகம் வாயில் புளிப்பு சுவை இருக்கிறது என்றார். லைக்கோபோடியம் 200 தினமும் இரண்டு வேளை 4 உருண்டைகள். 15 நாட்கள். பின்னர் கொலெஸ்டெரினம்200 மீண்டும் இருவேளை தினமும்.

    மீண்டும் 1 மாதம் கழித்து வந்தார். இந்த முறை கல்காரியா கார்ப் 1 எம் 4 டோஸஸ் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ஒரு டோஸ் காலையில் மட்டிலும். அடுத்த மாதம் வரும்போது அல்ட்ரா சௌண்ட் ஸ்கான் எடுத்துக்கொண்டு வரச் சொன்னேன்.

    ஸ்கான் ரிசல்ட் வந்ததும் சந்தோஷத்தோடு வந்தார். அவர் சேர்த்து வைத்திருந்த இரண்டு புஷ்பராகங்களையும் காணவில்லை.
    செரிமானக் கோளாறுகள் இல்லை. வாயுத்தொந்தரவுகள் நன்கு குறைந்துவிட்டன. வலி இல்லை.

    மேற்கொண்டு மருந்து தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன் நன்றிப் பெருக்கோடு சென்றார்.