என் பிரிய தாமிரமே! நாகரிக மோஸ்தரில் கட்டப் பெற்ற தனிம அட்டவணை மாளிகையில், 4ஆம் அவென்யூவில், 11 ஆம் குறுக்குத்தெரு விலாசம், உனது நவீன இருப்பிடம். எத்தனை மெடல்கள், பதக்கங்கள் உன்னை அலங்கரிக்கின்றன.! உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏனோ சிலி நாட்டின் ராணுவ ஜெனரல் பினோஷெ நினைவு தவிர்க்க இயலாமல் வருகிறது. ஆளப்பிறந்தவனாகவே உன்னை எண்ணிக்கொண்டிருக்கிராய் நீ! கிஞ்சித்தும் பிறத்தியானை, அவன் சுதந்திரத்தை மதியாமல் உன் கனத்த பூட்சுக்களின் கீழ் போட்டு மிதிப்பவன் நீ!
சிறார் பருவத்தைத் தாண்டாத நாளிலிருந்தே உன்னை நான் அறிவேன்.
சொல் ! உன் இடுப்பில் சுற்றியிருக்கும் கயிற்றில் செப்புத் தாயத்தைக் கட்டிவிட்டது யார்?
பிறிதொரு நண்பணான சிறிய புங்கக் கொட்டைக்கு அருகில் ஊஞ்சலாடியபடி செப்பு மினுங்கிக் கொண்டிருந்தது. இருவரும் சேர்ந்து ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து, எந்த நோய் அரக்கனையும் அண்டவிடாது காத்துவிடுவீர்கள் என்பதாக ஐதீகம்.
இருக்கலாம். சரியாய் இருக்கலாம். இருமல் என்றால் சாதாரண இருமலா அது? பிசாசு பிடித்தது போலத்தான். இருமி இருமி, கேவிக் கேவி, நடு நிசியில் மூச்சடைத்து, கண்கள் செருகி, நாடி மெலிந்து மூச்சற்று பேச்சற்று…… வாந்தி எடுத்து, முகம் நீலம் பாரித்து…….குளிர்ந்த நீர் பருகி உன் இருமல் தணிக்க நீ பட்ட அவஸ்தைகள் சொல்லிலடங்கா!
ஐதீகம் அன்றைக்கு , கேவும் இருமல் அமளிக்கு நடுவே ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
நீ வளர்ந்து விட்டாய்! பெரியவனாய், ஆகிருதியோடு, கட்டு மஸ்த்தாய்! உன்னைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. என்ன ஜோலி? எங்கே?
டெல்லியில், மிகப் பெரிய முக்கியஸ்தன். உன் அலுவலகத்தில் நீயே முக்கிய முடிவுகள் எடுக்கிறாய். சும்மாவா? உன் தேர்வை இதுவரை எந்த அமைச்சரும் மாற்றியதில்லை.
நீ எப்போதும் தளகர்த்தன்!. கமாண்டர்,! ஜெனரல்!. நீ தும்மினால் ஆயிரம் பேர் உன் கீழ் பணியாளர்கள் தும்மிக் கொண்டிருப்பர் என ஒரு வேடிக்கைக்கு விளையாட்டாய்ச் சொன்னால் தப்பில்லை
.
எங்கு சென்றாலும் என்ன முடிவெடுத்தாலும் நீயே வெற்றியாளன். வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் நீ செய்யக் கூடியவன். வெற்றி நோக்கம், வெறியாய்…. பேராசையோடு….. உன் கண்கள் மிளிறும் நீ சுய மோகி! நீ வெல்வதற்காய் அடுத்தவனைக் கால் வாரத் தயங்காதவன். உன்னோடு போட்டி போட எவனும் புலப்படக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கண்னாவது போகவேண்டும். அவன் –உன் போட்டியாளன், வீழ்ச்சியடைய, அதைக்கண்டு உள்ளம் பூரிப்பவன் நீ!
வெற்றி வெறிகொண்டு, சுய மோகியாய், சமூகக் காரியங்களில் உலா வருகிறாய், ஆபத்தான தாக்குதல் நீ எதிர்பார்த்துக் காத்திருக்கிராய்! வளர்கிறபோதே ஜூடோ, கராத்தே என தற்காப்பு வித்தைகள் பயின்றவனாச்சே! உன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறாய், எல்லா முஸ்தீபுகளும் உன்னிடத்தில் ஆயத்த நிலையில்
. ஒன்று! இரண்டு! மூன்று! எதிர்த்துத் தாக்கு! தாக்கு! வியூகங்கள் அறியாத அபிமன்யுவல்ல நீ! வெற்றியாளன் நீ!
உன் அண்ணணேயாயினும், மாம்பழம் அவனுக்கு போகக் கூடாது. தாயானால் என்ன? தந்தையானால் என்ன! தூக்கியெறிவாய்! உன் செயல் வலிப்பான செயல்பாடுதான் எப்போதும். உன் அகந்தைக்குத் தீனி வேண்டும். அடுத்தவன் பாதிக்கப் படுவது குறித்தெல்லாம் நீ அக்கறைப் பட முடியாதவன். நீ ! நீதான் எங்கும்! எதிலும்!
சுத்த சுயம்புத் தாமிரம் நீ! உன் பளபளப்பில் உனக்குப் பெருமிதம் உன் அகந்தை! சிறப்பான வெப்பக் கடத்தி!
நன்றாக வளர்ந்துவிட்டாய். உன்னைச் சிறப்பாக பொருளாதார ரீதியில் கட்டமைத்துக்கொண்டிருக்கிறாய்! தன்னிறைவு எதிலும்..... குறையொன்றுமில்லை. சேகரத்தை இழந்துவிடக் கூடாதவன் நீ!. எளிதாக ஏறிவந்த வெற்றிப் படிக்கட்டில் சரியக் கூடாதவன் நீ! அசாதாரண தைரியத்துடன் , நம்பிக்கையுடன் பக்க பலங்களோடு உலா வருகிறாய். இப்போதும் உன் எண்னமெல்லாம் வெற்றி ஈட்டுவதில் மென்மேலும். !
வலிப்புகளோடு தான் வளர்ந்தாய். சிசு வயிற்ரோட்டத்தில், காலராவில், சுண்டி இழுக்கும் வலியோடுவதும் களைப்பில் சோர்வில் மயங்கி வீழ்ந்ததையும் நினைத்துப்பார்க்கிறேன்
என் பிரிய தாமிரமே! உன் உலோக ருசி நானறிவேன்.!
சிறார் பருவத்தைத் தாண்டாத நாளிலிருந்தே உன்னை நான் அறிவேன்.
சொல் ! உன் இடுப்பில் சுற்றியிருக்கும் கயிற்றில் செப்புத் தாயத்தைக் கட்டிவிட்டது யார்?
பிறிதொரு நண்பணான சிறிய புங்கக் கொட்டைக்கு அருகில் ஊஞ்சலாடியபடி செப்பு மினுங்கிக் கொண்டிருந்தது. இருவரும் சேர்ந்து ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து, எந்த நோய் அரக்கனையும் அண்டவிடாது காத்துவிடுவீர்கள் என்பதாக ஐதீகம்.
இருக்கலாம். சரியாய் இருக்கலாம். இருமல் என்றால் சாதாரண இருமலா அது? பிசாசு பிடித்தது போலத்தான். இருமி இருமி, கேவிக் கேவி, நடு நிசியில் மூச்சடைத்து, கண்கள் செருகி, நாடி மெலிந்து மூச்சற்று பேச்சற்று…… வாந்தி எடுத்து, முகம் நீலம் பாரித்து…….குளிர்ந்த நீர் பருகி உன் இருமல் தணிக்க நீ பட்ட அவஸ்தைகள் சொல்லிலடங்கா!
ஐதீகம் அன்றைக்கு , கேவும் இருமல் அமளிக்கு நடுவே ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
நீ வளர்ந்து விட்டாய்! பெரியவனாய், ஆகிருதியோடு, கட்டு மஸ்த்தாய்! உன்னைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது. என்ன ஜோலி? எங்கே?
டெல்லியில், மிகப் பெரிய முக்கியஸ்தன். உன் அலுவலகத்தில் நீயே முக்கிய முடிவுகள் எடுக்கிறாய். சும்மாவா? உன் தேர்வை இதுவரை எந்த அமைச்சரும் மாற்றியதில்லை.
நீ எப்போதும் தளகர்த்தன்!. கமாண்டர்,! ஜெனரல்!. நீ தும்மினால் ஆயிரம் பேர் உன் கீழ் பணியாளர்கள் தும்மிக் கொண்டிருப்பர் என ஒரு வேடிக்கைக்கு விளையாட்டாய்ச் சொன்னால் தப்பில்லை
.
எங்கு சென்றாலும் என்ன முடிவெடுத்தாலும் நீயே வெற்றியாளன். வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் நீ செய்யக் கூடியவன். வெற்றி நோக்கம், வெறியாய்…. பேராசையோடு….. உன் கண்கள் மிளிறும் நீ சுய மோகி! நீ வெல்வதற்காய் அடுத்தவனைக் கால் வாரத் தயங்காதவன். உன்னோடு போட்டி போட எவனும் புலப்படக்கூடாது. அப்படி வந்தால் உனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கண்னாவது போகவேண்டும். அவன் –உன் போட்டியாளன், வீழ்ச்சியடைய, அதைக்கண்டு உள்ளம் பூரிப்பவன் நீ!
வெற்றி வெறிகொண்டு, சுய மோகியாய், சமூகக் காரியங்களில் உலா வருகிறாய், ஆபத்தான தாக்குதல் நீ எதிர்பார்த்துக் காத்திருக்கிராய்! வளர்கிறபோதே ஜூடோ, கராத்தே என தற்காப்பு வித்தைகள் பயின்றவனாச்சே! உன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கிறாய், எல்லா முஸ்தீபுகளும் உன்னிடத்தில் ஆயத்த நிலையில்
. ஒன்று! இரண்டு! மூன்று! எதிர்த்துத் தாக்கு! தாக்கு! வியூகங்கள் அறியாத அபிமன்யுவல்ல நீ! வெற்றியாளன் நீ!
உன் அண்ணணேயாயினும், மாம்பழம் அவனுக்கு போகக் கூடாது. தாயானால் என்ன? தந்தையானால் என்ன! தூக்கியெறிவாய்! உன் செயல் வலிப்பான செயல்பாடுதான் எப்போதும். உன் அகந்தைக்குத் தீனி வேண்டும். அடுத்தவன் பாதிக்கப் படுவது குறித்தெல்லாம் நீ அக்கறைப் பட முடியாதவன். நீ ! நீதான் எங்கும்! எதிலும்!
சுத்த சுயம்புத் தாமிரம் நீ! உன் பளபளப்பில் உனக்குப் பெருமிதம் உன் அகந்தை! சிறப்பான வெப்பக் கடத்தி!
நன்றாக வளர்ந்துவிட்டாய். உன்னைச் சிறப்பாக பொருளாதார ரீதியில் கட்டமைத்துக்கொண்டிருக்கிறாய்! தன்னிறைவு எதிலும்..... குறையொன்றுமில்லை. சேகரத்தை இழந்துவிடக் கூடாதவன் நீ!. எளிதாக ஏறிவந்த வெற்றிப் படிக்கட்டில் சரியக் கூடாதவன் நீ! அசாதாரண தைரியத்துடன் , நம்பிக்கையுடன் பக்க பலங்களோடு உலா வருகிறாய். இப்போதும் உன் எண்னமெல்லாம் வெற்றி ஈட்டுவதில் மென்மேலும். !
வலிப்புகளோடு தான் வளர்ந்தாய். சிசு வயிற்ரோட்டத்தில், காலராவில், சுண்டி இழுக்கும் வலியோடுவதும் களைப்பில் சோர்வில் மயங்கி வீழ்ந்ததையும் நினைத்துப்பார்க்கிறேன்
என் பிரிய தாமிரமே! உன் உலோக ருசி நானறிவேன்.!