- யார்?யார்? யாரிவர் யாரோ?
இலைக்கொத்தின் நடுவில்
வன்ணப்பூக்களைச் செருகி
தினம் தினம் அலங்கரித்தவர் யார்?
புல்லின் நுனியில் ஈரம் காட்டி
பனிப்பொழிவெனச் சொன்னது யார்?
...
காட்டு மரங்களைக் காற்றால் உரசி
தீயொளி எழுப்பி தீ மிதித்தது யார்?
ஐஸ்க்ரீம் குளிர்ச்சியில் தன்னிலை மறக்க
அழகையும் ருசியையும் சேர்த்தது யார்?
யார் யாரெனக் கேட்கச் சொன்னது யார்?
அவர் இவரெனப் பதில் தந்ததும் யார்?
அரசு இலை நுனியை உற்றுப்பார்த்தேன்!
பரியையும் நரியையும் தொட்டுப் பார்த்தேன்!
அரளியின் விஷம் அறிந்து கொண்டேன்!
அடுக்களைப் பூனையாய் அடங்கியது மனம்!
பாம்பைக் கவ்வ துரத்தும் கீரியாய்
பதில்களைத் துரத்தும் கேள்விகள் சதா!
கண் இமைக்குள் உலக ஜாலம்!
ஜால வெளியில் நீந்துது காலம்!
கால வெளியில் முகம் மறையும் மாயம்
வரவேற்பறைச் சுவர் உருட்டும் தாயம்
புத்தனோ, க்றிஸ்துவோ காந்தியோ
அலங்காரச் சட்டகத்தில் ஒளியுமிழ்வர் மாறி மாறி!
கேள்வி கேட்பவர் ஒளி வேண்டுபவர்
பதில் கண்டவர் ஒளியுமிழ்பவர்!
...
கறுப்புத் தாரும் கானல் நீரும்
பரவிக் கிடக்கும்
நகர்ப்புற சாலயில்
ப்ளஸ் டூவிலிருந்து
கனவுகள் சுமக்கும்
கல்லூரி நாட்கள் வரை
இரு சக்கர வாகனம்
வேகப் பயணம்
கட் அடித்தும்
கட் அடிக்காமலும்
சாமி புறப்பாடு
விரிவாய் அடிக்கடி
மூன்றே வருடம்
இடது கை மரமரப்பு
கழுத்தில் கொட்டு வலி
சீ5 சீ 6 தேய்மானம்
காலர் , யோகாசனம்
இத்தியாதி இத்தியாதி
அப்பாவின் மெடிக்கல்
இன்ஷ்யூரஸ் கார்டும் தேய்ந்தது
எங்கள் இல்லத்தின்
சமயலறை பணிப்பெண்
நளபாகம் , வேலை சுறுசுறுப்பு
செவ்வாய், வெள்ளி விரதம்
தஞ்சாவூர்ப் பெண்
அம்மனுக்குக் கர்கம் எடுப்பாள்
அடிக்கடி நேர்ந்துகொண்டு
எனக்கு உடம்புக்கு ஏதேனும்
அதற்கும் கரகம் சுமப்பாள்
தலையில் கலசத்தோடு
ஆட்டம் போடுவாள்
குனிந்து உடலை
வில்லாய் வளைத்து
ஆண்கள் விசிறி எறிந்த
ரூபாய் தாள் எடுப்பாள்
இவ்வளவு சுமந்தும்
வில்லாய் வளைந்தும்
அவளுக்கில்லை
ஸ்பாண்டிலோஸிஸ்
நாட்கள் கழிக்கிறாள்
கலசம் சுமந்து ஆடி!
நான் என்ன செய்யனும்
கரகம் ஆட?தேய்வு போக?