Friday 26 December 2014

முடிவிலாப் பெருவெளி

Ravichandran Arumugam's photo.சாலையின் முடிவு கற்பிதம்
                                                                                  சாலையின் முடிவு கற்பிதம்
                                                                                  தொடுவானும் கற்பிதம்
                                                                                 மேகச் சிதறல்கள் கற்பிதம்
                                                                                 எது தான் நிஜம்?
                                                                                 கிளை பரப்பி நிற்கும் அந்த மரமா?
                                                                                  மரம்
                                                                                  மறைக்கும் அப்
                                                                                  பெருவெளியா? 
                                                                                  எது நிஜம்?   
                                                                                  ப்                                                                                                                                                                                                                                           
 

Thursday 25 December 2014

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு-2

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு 2
பின் எழுபதுகளில் வெளிவந்த தீவிர அரசியல் இலக்கிய இதழின் பங்கேற்பாளர்கள் மூவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்து ஓர் மாலையில் முன் கூட்டித் திட்டமிட்டபடி ஓர் ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கின்றனர். இருவர் சென்னை வாசியாகவும் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவிலும் வாசம். மூவரிலும் முதுமை கூடித் தோல் தடிப்பும் சுருக்கங்களும் தெரிகின்றன. எழுபதைத் தொட்டுவிட்ட கட்டம். வாழ்வின் வெற்றி அறுவடைகளை அசைபோட்ட காலம் போய் மூப்பில் சரிகிற பருவம். இருப்பதைக் கையில் பிடித்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மட்டிலும் உயிர்ப்புடன். அமெரிக்க வாழ் தமிழர் தனது மகனின் கல்லூரிப்படிப்பிற்குத் தேவையான ஒரு சான்றிதழ் பெற தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

தங்களது கடந்தகால தீவிர அரசியல் தத்துவ, கலை இலக்கிய லட்சிய வேகங்கள் குறித்து நினைவூட்டிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்களது ஈடுப்பாடு சிப்கோ இயக்கத்திலிருந்து, அயனெஸ்கோவரை, மாசேதுங்கிலிருந்து,சர்ரியலிஸ, க்யூபிஸ ஓவியங்கள்வரை, குரோசோவாவிலிருந்து ஃப்ரான்ஸ் ஃபேனான் வரை வியாபகம் கொண்டிருந்தது. தெரு நாடகங்களில் தங்களது நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர். இலக்கிய இதழியலில் ஆர்வம்..

இன்று மூவரும் அந்நியமாகிப் போயிருக்கிறார்கள். இப்போது விஜய் தெண்டுல்கரோ, மஹாஸ்வேதாதேவியோ, சுந்தர்லால் பஹுகுனாவோ வெறும் மங்கலான நினைவு மட்டுமே. யாரோ நடந்த தொலை தூரக் காலடிச் சுவடுகள். தினசரி பத்திரிகை வாசிப்பைத் தாண்டாத சராசரித்தனம்.

பதினெட்டுத் திருப்படிகளில் மூச்சிரைக்க பத்தில் ஏறி ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலாமல் பதினேழு வரை சரிந்தும் தளர்ந்தும் தொய்ந்தும் அடிவைக்கிற கையறு நிலை.
கடந்தகால ஆழமான இறையிலிக் கொள்கை பின்னகர்ந்து போயிருக்கிறது. மூவரும் கடவுளின் ஜீவித நியாயத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கைக்கு, அற நியதி ஒன்று அவசியம் தேவை என்பதில் மூவரிலும் உறுதி தெரிகிறது.

முதலாமவர் அரசுப்பணியில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தலைக்குச் சாயம் பூசி பழுப்பேறி இருக்கிறது. ”என் கனவுகளில் கடவுளின் அமானுஷ்ய வடிவம் தோன்றுகிறது . அவரது ஆக்ஞைக்கு நான் கட்டுப்படுகிறேன். அவர் என்னோடு பேசுகிறார். அவரது கட்டளைப்படி அடுத்தவாரம் குடும்பத்தோடு குல தெய்வ பூஜைக்குச் செல்கிறேன் காலிலிருந்து அடிக்கடி மேலேறி வரும் இழுப்பு வலிக்கும் மரத்துச் சுரணையற்றுப் போதல் நிவர்த்திக்கான வேண்டுதல்”. கழுத்தில் இடப்புறம் பெரிதாக ஒரு சதை வளர்ச்சியும் கோள வீக்கமும் தவிர்க்க இயலாத படிக்குக் கண்ணில் படுகிறது.
”நீங்கள் அனேகமாக கோனியம் ஆளுமைக்கு ஒத்திகையாட்டம்“ என்கிறார் இரண்டாமவர்.. சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார். என்னால் லட்சியங்கள் எவை குறித்தும் சிந்திக்க இயலவில்லை..என் மகன் தன்னை நிறுவிக்கொள்ள வெளி நாடு செல்கிறான். அவனது மலர்ச்சி மட்டுமே என் முன்னால் தெரிகிறது. மனைவி போனபின் நான் ஒண்டிக்கட்டை. எப்போதும் ஒரு அறைக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. மகன் லண்டன் போனதும் என் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எல்லாவற்றிலும் பயம். தெருவைக் கடக்க பயம் டையபடிக் நோய் வேறு- தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இனிப்பு எப்போதும் தேவைப்படுகிறது கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனிமை, கவலை எதற்கெடுத்தாலும் பயம் மகன் நேரங்கழித்து வந்தாலே பதட்டம் மரண பயம் அகலாது கூடவே. வயிற்றில் உப்புசம் எரிச்சல் அல்சருக்கு முந்திய கட்டமாம் போட்டோ பிடித்துக் காண்பிக்கிறான் ஸ்பெஷலிஸ்ட். எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் கொஞ்ச நேரம் தான். எதையும் முழுமையாக வாசிக்க இயலவில்லை.இடது கண்ணுள் எப்போதும் ஒரு வேதனை. வாங்கி வைத்த அஞ்ஞாடியும் கொற்கையும் அப்படியே இருக்கிறது படிக்க இயலவில்லை. கழிவிரக்கம், சுயமதிப்பில் இறக்கம், அவரது பேச்சில்.
உங்கல் தலையில் அர்ஜெண்டம் தலையை யாரோ மாற்றிப் பொருத்திவிட்டிருக்கிறார்கள் நீங்கள் மிகவும் இனிப்பானவர் என்று கொஞ்சம் தூக்கலான எள்லலோடு பேசுகிறார் முதலாமவர் இதுவரை அதிகம் பேசாமல் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மூன்றாமவர் தொண்டையைக் கணைத்துக் கொள்கிறார். பார்வை எங்கோ தொலைவில் நிலைகுத்தியிருக்கிறது.

முதலாமவர்: குமார் நீங்கள் எப்போதும் சுற்றுப்புற சூழலில் ஆய்வு நடத்திக் கொண்டிருப்பீர்களே இப்போது ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கிறீர்களா? கோ ஆதரிங் அட்லீஸ்ட்?

மூன்றாமவர்: தன் நரைத்து வெளுத்த தலையைக் கோதிக்கொண்டே” ”இல்லை அப்படி எதுவும் செய்ய இயலவில்லை. 80களுக்கு மேல் என்னில் ஆர்வம் தங்கவில்லை. நான் மிகவும் மாறியிருக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் விரைவை வேண்டுகிறது. அதனுள் லட்சிய வேட்கை எல்லாம் தோற்றுப் போய்விட்டன. வீடு , ஆஃபீஸ், கார், பாங்க் பாலன்ஸ் இவை தவிர நாட்டம் என்பது எதிலுமில்லை பிள்ளைகள் இருவரும் நன்கு படித்துவிட்டு உத்யோகத்தில் இருக்கின்றனர். இன்னும் நானும் வேலை பார்க்கிறேன். மூன்றாவது மகனின் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாகத்தான் சென்னை வந்திருக்கிறேன்.

இரண்டாமவர்: நீங்கள் தோரோவின் வால்டென் மீது தீராத மோகம் கொண்டவராயிற்றே! போய்ப் பார்த்தீர்களா அதன் மிச்ச சொச்சங்களை?

மூன்றாமவர்: இல்லை இல்லை! அமெரிக்கா சென்றபின் அந்த ஆர்வமெல்லாம் என்னில் வற்றிப்போய் விட்டது தனது வெளிறிய ஜீன்ஸை சற்றே தளர்த்திவிட்டுக் கொள்கிறார் இறுக்கம் குறைய. . நெஞ்சு வேகமாக ஏறி இறங்குகிறது

முதலாமவர்: நான் யூ ட்யூபில் ஒரு வீடியோ பார்த்தேன். மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஹோமியோ மருத்துவர் அமெரிக்கா செல்கிறார். முன் கூட்டித் திட்டமிட்டபடி ஸாண்ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் அறுபது வயதைக் கடந்த பெண்மணியை சந்திக்கிறார். இருவரும் காரில் புறப்பட்டு அப்பெண்மணியின் குடும்ப கல்லறையைக் காணச் செல்கின்றனர். கல்லறை வாசலில் டாக்டர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் என்ற வாசகம் பொறித்திருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் மலர்க்கொத்துக்கள் வைக்கிறார் இந்திய மருத்துவர். ஓரிரு நிமிடங்கள் கல்லறையின் முன் மண்டியிட்டு கண்மூடி நிற்கிறார். அந்தப் பெண்மணி திரு கெண்ட்டின் பேத்தியாம்!
மூன்றாமவர்: அந்த இந்திய மருத்துவரின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது. அவர் தனது நம்பிக்கயைத் தொடர்கிறார். அவரது லட்சியம் நீர்த்துப் போகவில்லை.

மூவரும் தங்களை சுதாரித்துக் கொள்கின்றனர். சற்றே தேநீர் குடித்தாலென்ன எனும் யோசனை வருகிறது. மூவரும் கொஞ்சம் தே நீர் அருந்துகின்றனர். தங்கள் குரலில் படிந்திருக்கும் கிலேசத்தை மறைத்துக்கொண்டு, பேசிக்கொள்கின்றனர். ஒரு கோரஸ் போல் அவர்களிடம் வெளிப்படுகிறது. ”” நாம் நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்! வருந்துவதெற்கெல்லாம் ஒன்றுமில்லை””. அடுத்த முறை சந்திக்கலாம்.

LETTING GO OF ART
LETTING GO OF IDEAS
LETING GO OF CULTURE
……………
எப்போதோ வாசித்த அயோடியத்தின் ஆளுமைப் பண்புகள் நிணைவுக்கு வருகின்றன. கலை, கருத்தியல், கலாச்சாரம் இவற்றை விட்டுவிடும் மனிதர்களில் அயோடியம் தங்கியிருக்கிறது. இவர்களது பதட்டத்தையும் படபடப்பையும் இவர்களால் இனி தாங்கிக் கொள்ள இயலாது.
  
பழைய நாட்கள் என்றால் நமக்கெல்லாம் மிகவும் பிடித்தமான, ஓடுகாலிகள், பிழைப்பு வாதிகள், ஃபிலிஸ்டைன்ஸ் என்ற சொற்களால் வசைபாடி இருக்கலாம். அவையெல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லை நாம் மிகவும் முன்னேறிவிட்டோம் என்பது ஆசுவாசம் தருகிறது..

பென்ஸீனம்

பென்ஸீனம்
கல்லூரி நாட்களில் யாரும் சரியாக வேதியல் பாடங்களை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அறிமுகப்படுத்தவேயில்லை என எண்ணத் தோன்றுகிறது.
ஆகஸ்ட் கெக்குலுக்குக் கனவில் ஒரு பாம்பு தன் வாலைத் தின்று கொண்டிருக்கும் வடிவம் தோன்ற, அதுவே பென்ஸீனின் வடிவமாகக் கட்டமைக்கப் படுகிறது. பூமியின் வெவ்வேறு நிலப் பரப்புகளில் வாழ்ந்த எல்லா ஆதி மனித இனத்தின் நம்பிக்கையான தன்னையே தின்று மீளவும் புனர்ஜென்மம் எடுத்துவரும் மாந்தனின் தொன்மமே பென்ஸீனின் வேதியல்வடிவம்.
...
ஆறு கார்பன் அணுக்களும் ஆறு ஹைட்ரஜன் அணுக்களும் அறுமுக வடிவில் கோர்க்கப்பட்டுள்ளன. கோர்க்கும் ஒற்றை இணைப்பும் இரட்டை இணைப்பும் அரை நிமிடம் ஒன்றாகவும் மறு அரை நிமிடம் பிறிதொன்றாகவும் மாறும் தன்மை கொண்டவை.
பென்ஸீன் நச்சு, எலும்பு மஜ்ஜையைத் தாக்கி அழிக்கும்..
ஹோமியோபதியில் பென்ஸீன் மருந்தாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ரத்தப் புற்று நோயின் அனைத்து வகைகளுக்கும் மருந்தாகப் பயன் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் , லிம்போமா, ஹாட்கின்ஸ் நோய், மல்டிப்ள் மைலோமா போன்ற நோய்களிலும் இதன் பயன்பாடு பேசப்படுகிறது
ஐஸ் ட்ரின்க்ஸ் அடிக்கடி பருகும் ஆசை ப்ரதானமாக உண்டு பென்ஸீனில்.
இருளிலிருந்து ஒரு வெள்ளை நிறக் கை, மாயக் கை தன்னை நோக்கி வரும் காட்சிப் பிறழ்வு அடிக்கடி தோன்றி மறையும் இம்மருந்தில்.
தான் படுத்திருக்கும் படுக்கை பூமிக்குள் அமிழ்வதாகவும் அல்லது தானே படுக்கைக்குள் அமிழ்வதாவும் கூறுணர்வு காணப்படும்.
ரத்தப் புற்றுக்கு ஹோமியோபதி பரிந்துரைக்கும் முக்கிய மருந்துகளில் ஒன்று பென்ஸீன்..
See More

மாலை நேரத்து சிறுகதை வாசிப்புக்கள்

மாலை நேரத்து சிறுகதை வாசிப்புக்கள்
இன்று மாலை தி. நகர் பனகல் பார்க்கின் வடவாயில் சிமெண்ட் பென்ச் புண்ணியம் கட்டிக்கொண்டது. இதுவரை அதில் யார் யாரேனும் உட்கார்ந்திருக்கக் கூடும். ஆனால், ஒரு மாலை நேரத்தில், தொடர்ச்சியாக மூன்று சிறு கதைகள் வாசிக்கக் கேட்கும் பாக்கியம் அதற்குக் கிடைத்திருக்கிறது. காற்றில் ஈரம் இருந்த நேரம். சுற்றிலும் அடர் வனம் போல் மரம் செடி கொடிகள். ரம்மியமான சூழல் கூட்டமும் அதிகமில்லை. நானும் நண்பர் சண்முகம் மட்டிலுமே வடவாயில் பென்ச்சில்.
தெரிவு செய்த கதைகள் ந...ீல பத்மனாபனின் ”சமூக ஜீவி”, பால் சக்காரியாவின் “ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு” மற்றும் குமார செல்வாவின் “ ஈஸ்தர் கோழி” . கால் மணி நேர இடை வெளி விட்டு ஒவ்வொன்றாய் வாசித்தோம். ஒரு கதை முடிந்ததும் நண்பர் சண்முகம் தன் மீது ஏற்பட்ட தாக்கத்தை விளக்கமாகச் சொல்லுவார். பின் நான் என் அபிப்பிராயத்தைச் சொல்லுவேன். அபிப்பிராயம் தான் எந்த இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையிலும் அது வராது. எங்களது மாலை நேரம் எங்களது வாசிப்பு அனுபவம் அவ்வளவே.
குமார செல்வா நல்ல கதை சொல்லி. தான் மிகவும் ஆசையோடு வளர்த்துவந்த கோழி- மிகவும் வாத்சல்யத்தோடு, இறந்துபோன தனது தங்கை எலிசபெத்தின் நினைவில் அவள் பெயரையே இட்டு அழைத்து வந்த செல்லக் கோழி, -க்றிஸ்துமஸ் நாளன்று விருந்துக்காக சமைக்கப் படுகிறது. கதையை நகர்த்திச் செல்லும் தம்பியின் மனம் நோகடிக்கப்படுகிறது. கதையின் முடிவில் அப்பா அவனை சாப்பிட அழைக்கையில் எலிசபெத் என ஓவென்று அலறி அழுகிறான்.
ஏனோ, குமரி வட்டார வழக்கு, வாசிக்கையில் ஒரு நெருடலை உண்டாக்கவே செய்கிறது. வரிகளின் பிடிபடல் உடனடியாய் நிகழ்வதில் தடை ஏற்படுகிறது. பூரணமாய் பாராட்ட முடியாமல் ஒரு அவஸ்தை.
நீல பத்ம நாபனின் “சமூக ஜீவி” ஒரு கையறு நிலையின் பதிவு. தன் வீட்டைச் சுற்றி மூன்று அத்து மீறல்கள். தெரு வாசலிலிருந்து சாலைவரை தான் போட்டு வைத்திருந்த மணலை போக்கிரிகள் அனுமதியின்றி அள்ளிச் செல்கிறார்கள். எதிர்ப்பைத்தான் காட்ட முடிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. பக்கத்து வீட்டை வாங்கிய கள்ள நோட்டு சாமியார் மாடி எழுப்புகிறான் இவன் வீட்டுக் குளியலறை பார்த்து ஜன்னல் திறக்கிறான்; அதையும் தடுக்க இயலவில்லை. பின் வீட்டுத் தோட்டத்தில் தன் மைத்துனனே, அதுவும் ஒரு மருத்துவன் ,முடை நாற்றமடிக்கும் குப்பைக் கூளங்களைக் கொட்டி அந்தப் பிரதேசத்தையே அசுத்தப்படுத்துகிறான் தடுக்க முடியவில்லை. கெட்ட வார்த்தைகளாய் வசவு வாங்குவது தான் மிச்சம்.எதிர்ப்பு எந்த பிரதிபலனையும் தராத அவலம் சித்திரப்படுத்தப்பட்டிருக்கிறது ஆனாலும் ஏதொ ஒரு வழக்குரைக்கான ஆவணம் போன்ற அனுபவமே மிஞ்சுகிறது.. சிறுகதை இலக்கிய தாக்கம் கிட்டவில்லை.
பால் சக்காரியாவின்“ ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு “ கே.வீ ஜெய ஷ்ரீயின் மொழிபெயர்ப்பில். இதுவும் ஒரு க்றிஸ்துமஸ் நாளன்று நடைபெறும் சம்பவமெழுப்பும் உள்மனத் தாக்கம் தாம் . எழுத்து தான் இலக்கியம் எனும் அனுபவம் வாசிக்கையில் கிடைக்கிறது. தூக்கலான எள்லலோடு எழுதப்பட்ட கதை. கிறித்துவனாய் இருப்பதன் பொருள் குறித்த சுய விசாரணை தோரணையில் சரியான பகடியோடு திட்டமிட்டு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கண்ணியமான எழுத்து. எல்லோரையும் இழுத்து தன்னை வாசிக்கச் சொல்லும் நடை.
மூன்றிலும் எங்கள் இருவரின் மனதிற்கு இதமாய் இருந்தது “ஜோசப் நல்லவனின் பாவ மன்னிப்பு. பக்குவமான இலக்கியப் பதிவாய் மிளிர்கிறது.
மொழிபெயர்த்த கே வீ ஜெயஷ்ரீக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கார்லோ மாரட்டியின்” யூரோப்பாவும் காளையும் ஓவியம்“ 1680-85

யூரோப்பா என்றால் ஒரு கண்டம், பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு என்று மட்டும் பூகோளப் பாடப் புத்தகம் அறிமுகப் படுத்தியிருந்தது. அட்லாஸ் படங்களில் யூரோப்பாவை அடையாளம் காண சிறு வயதில் எளிதாக இருந்தது.

பின்னால் இத்தாலிய ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டதும், யூரோப்பாவின் பொருள் விஸ்தாரம் கண்டது.  ஃபோயனீஷிய அரசனின் மகள் பெயர் யூரோப்பா;  அவளைக் காதலித்த ஜூபிடர் அவளை வசீகரிக்க அழகிய வெள்ளைக் காளை வடிவமெடுத்தான்.  மலர் கொய்ய வரும் யூரோப்பாவுக்காக நந்தவனத்தில் காத்துக் கிடந்தான். காளையின் வெள்ளை நிறமும் மென்மையான குணமும் அவளை வசீகரித்தன.  கொம்புகளுக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்வித்தாள் . தன் முதுகில் ஏறி அமர வசதியாக அவள் முன் மண்டியிட்டது காளை.   யூரோப்பா ஏறி அமர்ந்தது தான் சமயம் என சிட்டாய்ப் பறந்தது காளை, கடலில் நீந்தி க்ரீட் நாட்டை அடைந்தது.  அங்கு வந்த பின்னரே தான் யார் என்பதை வெளிப்படுத்தியது ஜூபிடர்.  அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.  இது இத்தாலியப் புராணிகம் ஜூபிடருக்குப் பதிலாக ஒலிம்பிக் கடவுளான ஸீயஸின் பெயர் தரித்து வருகிறது கிரேக்கப் புராணிகம்.

நான் பார்க்கக் கிடைத்த  முதல் “யூரோப்பாவும் காளையும் ஓவியம்” கார்லோ மாரட்டியால் 1680-85 களில் வரையப்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.

 அசையாமல் சுவாதீனமாக மண்டியிட்டுப் படுத்திருக்கிறது காளை  அதன் மேல் மென்மையான முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் யூரோப்பா. அவள் கைகள் கொம்பில் சூட்டியிருக்கும் மலர்ச்சரங்களைப் பற்றியிருக்கின்றன. பயமேதும் முகத்தில் தென்படவில்லை.  பாதுகாப்பிற்காய் கொம்புகளை இறுகப் பற்றியதாகவும் இல்லை. கவனம் ஈர்க்கும் மிக அழகான வண்ன ஓவியம்

ஹோமியோபதி அறிவியலில் க்ரோகஸ் சட்டைவா (குங்குமப்பூ) மருத்துவ குணங்கள் படிக்கிறபோது ஒரு சிறு குறிப்பு என் பார்வையில் பட்டது.  ஜூபிடர் காளை தனது வாயிலிருந்து க்ரோக்கஸ் சட்டிவா தூளை யூரோப்பாவின் முகத்தில் ஊதித்தான் கவர்ந்து சென்றதாம்.
 
கிரீட் மொழியில் யூரோப்பாவுக்கு பசு என்றொரு  பொருளும் உண்டாம்.  பின்னர் ஜூபிடர் தனது காளை உருவை நட்சத்திரக் கூட்டங்களாகி வானில் ரிஷபமாகத் திரிய விட்டதாகவும் புராணிகம் கூறுகிறது.

மனித வளர்ச்சிப் பரிணாமத்தில் காளையும் பசுக்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதின் வெளிப்பாடுதான் யூரோப்பா கதை. நமது புராணம் காட்டும் ரிஷபங்களும் பசுக்களும் ருத்ரனும் மனதில் வருவது தவிர்க்க முடியாததாகிறது.
யூரோப்பா என்றால் ஒரு கண்டம், பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு என்று மட்டும் பூகோளப் பாடப் புத்தகம் அறிமுகப் படுத்தியிருந்தது. அட்லாஸ் படங்களில் யூரோப்பாவை அடையாளம் காண சிறு வயதில் எளிதாக இருந்தது.
பின்னால் இத்தாலிய ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டதும், யூரோப்பாவின் பொருள் விஸ்தாரம் கண்டது. ஃபோயனீஷிய அரசனின் மகள் பெயர் யூரோப்பா; அவளைக் காதலித்த ஜூபிடர் அவளை வசீகரிக்க அழகிய வெள்ளைக் காளை வடிவமெடுத்தான். மலர் கொய்ய வரும் யூரோப்பாவுக்காக நந்தவனத்தில் காத்துக் கிடந்தான். காளை...யின் வெள்ளை நிறமும் மென்மையான குணமும் அவளை வசீகரித்தன. கொம்புகளுக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்வித்தாள் . தன் முதுகில் ஏறி அமர வசதியாக அவள் முன் மண்டியிட்டது காளை. யூரோப்பா ஏறி அமர்ந்தது தான் சமயம் என சிட்டாய்ப் பறந்தது காளை, கடலில் நீந்தி க்ரீட் நாட்டை அடைந்தது. அங்கு வந்த பின்னரே தான் யார் என்பதை வெளிப்படுத்தியது ஜூபிடர். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இது இத்தாலியப் புராணிகம் ஜூபிடருக்குப் பதிலாக ஒலிம்பிக் கடவுளான ஸீயஸின் பெயர் தரித்து வருகிறது கிரேக்கப் புராணிகம்.
நான் பார்க்கக் கிடைத்த முதல் “யூரோப்பாவும் காளையும் ஓவியம்” கார்லோ மாரட்டியால் 1680-85 களில் வரையப்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.
அசையாமல் சுவாதீனமாக மண்டியிட்டுப் படுத்திருக்கிறது காளை அதன் மேல் மென்மையான முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் யூரோப்பா. அவள் கைகள் கொம்பில் சூட்டியிருக்கும் மலர்ச்சரங்களைப் பற்றியிருக்கின்றன. பயமேதும் முகத்தில் தென்படவில்லை. பாதுகாப்பிற்காய் கொம்புகளை இறுகப் பற்றியதாகவும் இல்லை. கவனம் ஈர்க்கும் மிக அழகான வண்ன ஓவியம்
ஹோமியோபதி அறிவியலில் க்ரோகஸ் சட்டைவா (குங்குமப்பூ) மருத்துவ குணங்கள் படிக்கிறபோது ஒரு சிறு குறிப்பு என் பார்வையில் பட்டது. ஜூபிடர் காளை தனது வாயிலிருந்து க்ரோக்கஸ் சட்டிவா தூளை யூரோப்பாவின் முகத்தில் ஊதித்தான் கவர்ந்து சென்றதாம்.
கிரீட் மொழியில் யூரோப்பாவுக்கு பசு என்றொரு பொருளும் உண்டாம். பின்னர் ஜூபிடர் தனது காளை உருவை நட்சத்திரக் கூட்டங்களாகி வானில் ரிஷபமாகத் திரிய விட்டதாகவும் புராணிகம் கூறுகிறது.
மனித வளர்ச்சிப் பரிணாமத்தில் காளையும் பசுக்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதின் வெளிப்பாடுதான் யூரோப்பா கதை. நமது புராணம் காட்டும் ரிஷபங்களும் பசுக்களும் ருத்ரனும் மனதில் வருவது தவிர்க்க முடியாததாகிறது.

Wednesday 24 December 2014

காலம் காலமாய் வடக்குப் பார்த்து நின்றது வீடு!

காலம் காலமாய் வடக்குப் பார்த்து நின்றது வீடு!
சுலபமாய் எண்ண இயலாது
உள் வசித்த மனிதர்களை
ஒருவனுக்கு பத்து நிழல்கள்...
வேர் விட்டிருந்தன கால்கள்
நகரும் சாத்தியமற்று
அமாவாசையும் பௌர்ணமியும்
வித்தியாசமற்றுப் போனது
அவர்களின் மங்கிய பார்வையில்

கண்கள் இருந்தன கண் மணியும் இருந்தது!
மனிதக் குரல் கேட்டறியாக் காதுகள்
தலை சுற்றலை அறிவிக்க மட்டும்
பற்றாக்குறை நாட்களில் பவனி வருகையில்!
நீரறியாது, நிலமறியாது
வான் அறியாது வளியறியாது
ஒளியறியாது தீயறியாது சூடறியாது
வாழ்தலும் அறியாது
அந்த வடக்குப் பார்த்து நின்ற வீட்டில்
அத்துணை ஜீவன்களும் அவர்கள் நிழல்களும்

ஆறாம் வரிசைப் பொடி எழுத்தை

ஆறாம் வரிசைப் பொடி எழுத்தை
அனுமானத்தில் படித்திட அவஸ்தை
விதம் விதமாய் மாற்றி மாற்றி
மாட்டிப் பார்க்கிறான் கண்ணாடிக்காரன்
...
அண்மையோ சேய்மையோ
துல்லியம் தப்பும் கணங்கள்
திரைகள் மட்டும் நடுவில்
ஒளிபுகா மாய வண்ணத் திரைகள்!
நகர்தலின்றி நானும்
நழுவும் பொழுதுகளில்
கற்பித உண்மைகள் தூரத்திலுமாய்!

கண்முன் அலையும்

கண் முன் அலையும்
சங்கிலிப் பூரான்
கறுப்புப் புள்ளிகள்!
கவ்விப் பிடிக்க...
விழையும் மனம்

இரை கண்டதும்
ஏனோ அதிர்கிறது
இடது கண்.!
முன் தாவி
விரைவாய்அசைந்து
பக்கவாட்டில் சிதறி
மீளவும் உருக்கொண்டு!
தப்பித்தல் குறியென
நழுவும் இரை
எதிரியாதல் இயல்பே!
சுவடுகள் ஏதுமின்றி
பலி கொள்ள
தன் நாவு நீட்டும்
குள்ள மனம்!
பிடி! பிடி!
ஓடு! ஓடு!
பேச்சரவம்
கேட்கிறது
கண்ணுக்கும்
நழுவும் புள்ளிக்கும்
இடையில்!

கொடுக்கொன்று இருந்து கொட்டினால் தேள்!

கொடுக்கொன்று இருந்து
கொட்டினால் தேள்!
இருப்பில் கொட்டுதல்
தவிர்த்தால்...
அதை அடையாளப்படுத்துவது
என்ன பெயரிட்டு?

கேள் நண்பா!
மறைவாய் கொடுக்கும்
தேக்கி வைத்த விஷமும்
கூர் நுனியும்
பதுங்குதலும் கொண்டு
நான் திரிய........
எவர் திரிந்தாலும்
“தேள் நண்பா”
என முன்னொட்டு
இட்டு விளிக்க
இன்னும் தயக்கம் உனக்கேன்?

கல்லிலும் கலை வண்ணம் கண்டான்!

Ravichandran Arumugam's photo.

ஆழி சூழ் ......

Ravichandran Arumugam's photo.

பெல்லடோன்னா சிறிசுகளும் பெரிசுகளும்!

கோபம் வரும் போதெலாம்
சுவற்றில் முட்டிக்கொள்ளும்
சின்னஞ்சிறுவனாய் இன்னும் எப்படி?
பக்கத்து இருக்கைக் காரனை
தொடையில் கிள்ளித் திரும்புவது...
அடிப்பது கடிப்பது உமிழ்வது
ஒளி காண இயலாமல்
கண்சுருக்கி தலை கவிழும்
நாகரிகம் அறியா பாலகனாய்
ஏனோ பெரியவர்கள் வீழ்ச்சி?

இந்தப் பார்வை ஒன்றே போதுமே!

Ravichandran Arumugam's photo.

லட்சியம் தகர்ந்த நிலையில்.......

வாழ்வின் விழுமியங்களைக் கட்டமைப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து , சமூக மாற்றத்திற்கான பாதைகளை செப்பனிடுவதில் அதீத லட்சிய நோக்கோடு செயல்படுபவர்கள் பின்னாட்களில் லட்சியக் கோட்பாடுகள் சிதைந்து, தளர்ந்து, ஏமாற்றமடைந்து விரக்தியில் மூழ்குவதை நாளும் எதிர்கொள்கிறோம்.
லட்சியங்களை முழுமையாய் அடைந்துவிடும் நம்பிக்கையில், வாழ் நாள் முழுதும் செலவிட்டவர்கள் லட்சியக் கோட்டைகள் தகரும்போது, தோழமை இழந்து, தனித்து, அவ நம்பிக்கையும் சோர்வும் கொண்டு, மிகவும் வீழ்ச்சியுற்ற நிலையில் எல்லாவற்றிலு...ம் குற்றம் காண்பவராகவும், வலிந்து குறை சொல்வராகவும் கடும் சினமும் தோல்வியின் விரக்தியும் மனத்தில் தேக்கியவராய் வலம் வருகின்றனர்.
இனி இவர்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது இவர்களுக்கு.தாங்கள் கனவு கண்டு வந்த புனிதப் பெரும் வீடு இல்லாமல் போய் விட்டதால் இதயம் வலுவிழந்து, மூச்சுத்திணறும் நோய்ம்மையிலேயே சதா உழல்கின்றனர்.
அம்மோனியம் , பொதுவாக லட்சியங்கள் தகர்ந்த நிலையைக் குறிக்கும். அம்மோனியம் கார்ப் இந்த ஆளுமைகளுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தாகவும்..

ஏனோ சபிக்கிறேன்?

நேற்றிரவு சபித்தலும் பின்
இன்றைய வருத்தமும்
சுவற்றில் கழன்ற
உலர் வறட்டியாய்
என்னில் பதித்த தடங்கள்...
இன்னும் பசுமையாய்!

ஏனோ சபிக்கிறேன்!
சபித்தல் என் இயல்பு
சதா எச்சிலை உமிழ்வதாய்
சதா சபிக்கிறேன்
அவனை இவனை உவனை!
நான் சொன்னால் நடந்திடுமென
மிரட்டலும் கூட்டி
கடக்கிறது என்காலம்
கை நிறைய
பை நிறைய
உறுத்தும் உமியோடு!

ஹோமியோபதிப் பட்டறைச் சாத்தியப்பாடில்...1

ஹோமியோபதிப் பட்டறைச் சாத்தியப்பாட்டில்.......
ஹோமியோபதி அறிவியலில் மருந்துகளுக்கிடையேயான பொருத்தப்பாடுகள் மீதான ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. மேதை ஆர்.பீ படேல் தான் இது குறித்த பயணத்தைத் தொடங்கியவர். அவரது லைக்கோபோடியம்(ஆண்) பல்சட்டில்லா(பெண்) பொருத்தப்பாடு ஏதோ ஜாதகக் கணிப்போ என்று கூறும் அளவிற்கு இந்தியத்தன்மை கொண்டதாக விளங்கியது. பின்னாட்களில் , குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாய்வு நிறைய நூல் வடிவங்கொண்டது. கடைசியாக வந்தது லிஸ் லேலரின் நூல்.
இலக்கியப் பரிச்சயமும், ஹோமியோ அறிவியல்-மருத்துவக் களஞ்சிய நுண்ணுணர்வும், சமகால வாழ்வின் கட்டுப்பாடுகள் தளர்ந்த சமூகவியல் புரிதலும் கொண்ட ஐவர் கூடுகின்றனர். ரேமண்ட் கார்வரைப்போல் அத்து மீறல்கள் கொண்ட ஆண் பெண் உறவுகளை ஹோமியோ மருத்துவக் களஞ்சியப் பின்னனியில் எழுத முற்படுகின்றனர். சமகால வாழ்வின் அமளி குறித்த புரிதல் ஐவரிடமும் இருக்கிறது. ஒருவர் நீதிபதியாகிறார். பிறிதொருவர் சமூக ஆர்வலராகிறார். இருவரில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் தங்களை (அதுவும் திருமணமான) பாத்திரங்களாகக் கட்டமைத்துக் கொள்கின்றனர்.. ஐந்தாவது மனிதர் கதையை சுறுறுப்பாய் நடத்திச் செல்லும் பார்வையாளர் அவரது குறுக்கீடு அடிக்கடி இடையில் நிகழ்கிறது.
கதை தொடங்குகிறது. ஃப்ளூரிக் ஆசிட் ஆணும் ஹையோஸியாமஸ் பெண்ணும் இரவில் நள்ளிரவுக்குப்பின், உணர்வுகளின் உச்சத்தில் முக நூலின் உரையாடல் தளத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். கானொளிக் காட்சியும் இடம்பெறலாம் எனும் கருத்தை பார்வைவையாளர் குறுக்கிட்டுச் சொல்ல கானொளியும் தொடர்கிறது. உரையாடலின் உயிர்ப்பில் இருவரின் குடும்ப சூழல் மனப் பாதுகாப்பின்மையில் தொடங்கி, முக நூல் தரும் தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளை அலசி, பின் பாலியல் வழுவல்களில் சரிந்து, முழுமையான அத்துமீறலை நிறைவேற்றுகிறது.
பார்வையாளர் குறுக்கிட, தளம் வேறு மடைமாற்றம் கொள்கிறது. இருவருக்கும் தண்டணை ப்ரஸ்தாபிக்கப்படுகிறது.
தண்டணை நிறைவேற்றல் ஒரு நாடக ஒத்திகை போல் எழுதப்படுகிறது.
முடிவில், மன இறுக்கத்திற்கு ஆளான பெண்ணாக அவளும், ஸ்ட்ரோக் நோய்ம்மையில் அவஸ்தையுறும் ஆணாக அவனும் காட்சி தருகின்றனர். பார்வையாளர் கை தட்டி ஆர்ப்பரிக்கிறார். அவள் ஸெபியாகவும், அவன் ஓபியமாகவும் உரையாடலைக் கட்டமைக்கின்றனர்.
நீதிபதி குறுக்கிடுகிரார். இல்லை இல்லை! இத்தண்டணை போதாது என உறக்க உரைக்கிறார். எனவே தண்டணை கூட்டப்படுகிறது அடுத்த காட்சியிலொரு குட்ட ரோக ஆணும் மனச் சிதைவுக்காளான பெண்னும் உயிர் பெறுகின்றனர். ஹ்யூரா மருந்தின் ஆளுமையில் ஆணும் வெராட்ரம் ஆல்ப பெண்ணும் உரையாடலைத்தொடர்கின்றனர்.
இல்லை! இல்லை ! இப்படியான சபித்தல் வேண்டாம். தண்டனையைக் குறையுங்கள் என சமூக ஆர்வலர் இருவருக்காகவும் வாதிடுகிறார். சிறுகதையின் முடிவை மாற்றி தங்கள் அத்து மீறலுக்காய் வருந்தும் தங்கள் சரிவை எண்ணி எண்னிக் குமுறும் காலி ப்ரோமேட்டம் ஆண் , இக்னேஷியா பெண்ணின் உரையாடல் தொடர்கிறது முடிவில் சிறுகதை இன்னும் சிறப்பாகச் செய்ய இயலவில்லை எனும் அலுப்பு மேலீட்டில் எல்லோரும் கலைகின்றனர்.
இச்சிறுகதையின் சாத்தியப்பாடு, மேம்பட்டிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியும்,மருத்துவக் களஞ்சிய குணபாடுகளின் நிபுணத்துவமும், சரிவுகளும் அத்து மீறல்களும் பின் குற்ற உணர்வும், தி.ஜாவின் பாத்திரங்களின் அல்லது ரேமண்ட் கார்வரின் பாத்திரங்களின் இருப்பு சார் ப்ரச்சினைகளை அவதானிக்கும் ஒரு படைப்பாளிக்கு சாத்தியப்படலாம்.
உண்மையாகவே, ஏதோ ஒரு சிறுகதைப் பட்டறையில் எழுதித் தயாரித்து இச் சிறுகதையை ஏதேனும் ஒரு இலக்கியப் பத்திரிகையில் வெளியிட முடியுமானால் எப்படிப்பட்ட எதிர்வினைகள் உருவாகும் என்ற யோசனையும் கூட எழத்தான் செய்கிறது.
ஹோமியோபதி மருந்துகளின் ஆளுமை பின்னனி, சிறுகதையின் அபத்த தளத்திற்கு வலுவூட்டும் எனவும் தோன்றுகிறது.

Letting go of art,ideas and culture

ஹோமியோபதி பட்டறைச் சாத்தியப்பாடு 2
பின் எழுபதுகளில் வெளிவந்த தீவிர அரசியல் இலக்கிய இதழின் பங்கேற்பாளர்கள் மூவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்து ஓர் மாலையில் முன் கூட்டித் திட்டமிட்டபடி ஓர் ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கின்றனர். இருவர் சென்னை வாசியாகவும் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோவிலும் வாசம். மூவரிலும் முதுமை கூடித் தோல் தடிப்பும் சுருக்கங்களும் தெரிகின்றன. எழுபதைத் தொட்டுவிட்ட கட்டம். வாழ்வின் வெற்றி அறுவடைகளை அசைபோட்ட காலம் போய் மூப்பில் சரிகிற பருவம். இருப்பதைக் கையில் பிடித்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசை மட்டிலும் உயிர்ப்புடன். அமெரிக்க வாழ் தமிழர் தனது மகனின் கல்லூரிப்படிப்பிற்குத் தேவையான ஒரு சான்றிதழ் பெற தன் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்
தங்களது கடந்தகால தீவிர அரசியல் தத்துவ, கலை இலக்கிய லட்சிய வேகங்கள் குறித்து நினைவூட்டிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் அவர்களது ஈடுப்பாடு சிப்கோ இயக்கத்திலிருந்து, அயனெஸ்கோவரை, மாசேதுங்கிலிருந்து,சர்ரியலிஸ, க்யூபிஸ ஓவியங்கள்வரை, குரோசோவாவிலிருந்து ஃப்ரான்ஸ் ஃபேனான் வரை வியாபகம் கொண்டிருந்தது. தெரு நாடகங்களில் தங்களது நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர். இலக்கிய இதழியலில் ஆர்வம்..
இன்று மூவரும் அந்நியமாகிப் போயிருக்கிறார்கள். இப்போது விஜய் தெண்டுல்கரோ, மஹாஸ்வேதாதேவியோ, சுந்தர்லால் பஹுகுனாவோ வெறும் மங்கலான நினைவு மட்டுமே. யாரோ நடந்த தொலை தூரக் காலடிச் சுவடுகள். தினசரி பத்திரிகை வாசிப்பைத் தாண்டாத சராசரித்தனம்.
பதினெட்டுத் திருப்படிகளில் மூச்சிரைக்க பத்தில் ஏறி ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயலாமல் பதினேழு வரை சரிந்தும் தளர்ந்தும் தொய்ந்தும் அடிவைக்கிற கையறு நிலை.
கடந்தகால ஆழமான இறையிலிக் கொள்கை பின்னகர்ந்து போயிருக்கிறது. மூவரும் கடவுளின் ஜீவித நியாயத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கைக்கு, அற நியதி ஒன்று அவசியம் தேவை என்பதில் மூவரிலும் உறுதி தெரிகிறது.
முதலாமவர் அரசுப்பணியில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தலைக்குச் சாயம் பூசி பழுப்பேறி இருக்கிறது. ”என் கனவுகளில் கடவுளின் அமானுஷ்ய வடிவம் தோன்றுகிறது . அவரது ஆக்ஞைக்கு நான் கட்டுப்படுகிறேன். அவர் என்னோடு பேசுகிறார். அவரது கட்டளைப்படி அடுத்தவாரம் குடும்பத்தோடு குல தெய்வ பூஜைக்குச் செல்கிறேன் காலிலிருந்து அடிக்கடி மேலேறி வரும் இழுப்பு வலிக்கும் மரத்துச் சுரணையற்றுப் போதல் நிவர்த்திக்கான வேண்டுதல்”. கழுத்தில் இடப்புறம் பெரிதாக ஒரு சதை வளர்ச்சியும் கோள வீக்கமும் தவிர்க்க இயலாத படிக்குக் கண்ணில் படுகிறது.
”நீங்கள் அனேகமாக கோனியம் ஆளுமைக்கு ஒத்திகையாட்டம்“ என்கிறார் இரண்டாமவர்.. சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார். என்னால் லட்சியங்கள் எவை குறித்தும் சிந்திக்க இயலவில்லை..என் மகன் தன்னை நிறுவிக்கொள்ள வெளி நாடு செல்கிறான். அவனது மலர்ச்சி மட்டுமே என் முன்னால் தெரிகிறது. மனைவி போனபின் நான் ஒண்டிக்கட்டை. எப்போதும் ஒரு அறைக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. மகன் லண்டன் போனதும் என் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எல்லாவற்றிலும் பயம். தெருவைக் கடக்க பயம் டையபடிக் நோய் வேறு- தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இனிப்பு எப்போதும் தேவைப்படுகிறது கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனிமை, கவலை எதற்கெடுத்தாலும் பயம் மகன் நேரங்கழித்து வந்தாலே பதட்டம் மரண பயம் அகலாது கூடவே. வயிற்றில் உப்புசம் எரிச்சல் அல்சருக்கு முந்திய கட்டமாம் போட்டோ பிடித்துக் காண்பிக்கிறான் ஸ்பெஷலிஸ்ட். எந்தப் புத்தகத்தைத் தொட்டாலும் கொஞ்ச நேரம் தான். எதையும் முழுமையாக வாசிக்க இயலவில்லை.இடது கண்ணுள் எப்போதும் ஒரு வேதனை. வாங்கி வைத்த அஞ்ஞாடியும் கொற்கையும் அப்படியே இருக்கிறது படிக்க இயலவில்லை. கழிவிரக்கம், சுயமதிப்பில் இறக்கம், அவரது பேச்சில்.
உங்கல் தலையில் அர்ஜெண்டம் தலையை யாரோ மாற்றிப் பொருத்திவிட்டிருக்கிறார்கள் நீங்கள் மிகவும் இனிப்பானவர் என்று கொஞ்சம் தூக்கலான எள்லலோடு பேசுகிறார் முதலாமவர் இதுவரை அதிகம் பேசாமல் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மூன்றாமவர் தொண்டையைக் கணைத்துக் கொள்கிறார். பார்வை எங்கோ தொலைவில் நிலைகுத்தியிருக்கிறது.
முதலாமவர்: குமார் நீங்கள் எப்போதும் சுற்றுப்புற சூழலில் ஆய்வு நடத்திக் கொண்டிருப்பீர்களே இப்போது ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கிறீர்களா? கோ ஆதரிங் அட்லீஸ்ட்?
மூன்றாமவர்: தன் நரைத்து வெளுத்த தலையைக் கோதிக்கொண்டே” ”இல்லை அப்படி எதுவும் செய்ய இயலவில்லை. 80களுக்கு மேல் என்னில் ஆர்வம் தங்கவில்லை. நான் மிகவும் மாறியிருக்கிறேன். என் வாழ்க்கை எப்போதும் விரைவை வேண்டுகிறது. அதனுள் லட்சிய வேட்கை எல்லாம் தோற்றுப் போய்விட்டன. வீடு , ஆஃபீஸ், கார், பாங்க் பாலன்ஸ் இவை தவிர நாட்டம் என்பது எதிலுமில்லை பிள்ளைகள் இருவரும் நன்கு படித்துவிட்டு உத்யோகத்தில் இருக்கின்றனர். இன்னும் நானும் வேலை பார்க்கிறேன். மூன்றாவது மகனின் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாகத்தான் சென்னை வந்திருக்கிறேன்.
இரண்டாமவர்: நீங்கள் தோரோவின் வால்டென் மீது தீராத மோகம் கொண்டவராயிற்றே! போய்ப் பார்த்தீர்களா அதன் மிச்ச சொச்சங்களை?
மூன்றாமவர்: இல்லை இல்லை! அமெரிக்கா சென்றபின் அந்த ஆர்வமெல்லாம் என்னில் வற்றிப்போய் விட்டது தனது வெளிறிய ஜீன்ஸை சற்றே தளர்த்திவிட்டுக் கொள்கிறார் இறுக்கம் குறைய. . நெஞ்சு வேகமாக ஏறி இறங்குகிறது
முதலாமவர்: நான் யூ ட்யூபில் ஒரு வீடியோ பார்த்தேன். மத்தியப் பிரதேசத்திலிருந்து ஒரு ஹோமியோ மருத்துவர் அமெரிக்கா செல்கிறார். முன் கூட்டித் திட்டமிட்டபடி ஸாண்ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் அறுபது வயதைக் கடந்த பெண்மணியை சந்திக்கிறார். இருவரும் காரில் புறப்பட்டு அப்பெண்மணியின் குடும்ப கல்லறையைக் காணச் செல்கின்றனர். கல்லறை வாசலில் டாக்டர் ஜேம்ஸ் டெய்லர் கெண்ட் என்ற வாசகம் பொறித்திருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் மலர்க்கொத்துக்கள் வைக்கிறார் இந்திய மருத்துவர். ஓரிரு நிமிடங்கள் கல்லறையின் முன் மண்டியிட்டு கண்மூடி நிற்கிறார். அந்தப் பெண்மணி திரு கெண்ட்டின் பேத்தியாம்!
மூன்றாமவர்: அந்த இந்திய மருத்துவரின் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது. அவர் தனது நம்பிக்கயைத் தொடர்கிறார். அவரது லட்சியம் நீர்த்துப் போகவில்லை.
மூவரும் தங்களை சுதாரித்துக் கொள்கின்றனர். சற்றே தேநீர் குடித்தாலென்ன எனும் யோசனை வருகிறது. மூவரும் கொஞ்சம் தே நீர் அருந்துகின்றனர். தங்கள் குரலில் படிந்திருக்கும் கிலேசத்தை மறைத்துக்கொண்டு, பேசிக்கொள்கின்றனர். ஒரு கோரஸ் போல் அவர்களிடம் வெளிப்படுகிறது. ”” நாம் நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்! வருந்துவதெற்கெல்லாம் ஒன்றுமில்லை””. அடுத்த முறை சந்திக்கலாம்.
LETTING GO OF ART
LETTING GO OF IDEAS
LETING GO OF CULTURE
……………
எப்போதோ வாசித்த அயோடியத்தின் ஆளுமைப் பண்புகள் நிணைவுக்கு வருகின்றன. கலை, கருத்தியல், கலாச்சாரம் இவற்றை விட்டுவிடும் மனிதர்களில் அயோடியம் தங்கியிருக்கிறது. இவர்களது பதட்டத்தையும் படபடப்பையும் இவர்களால் இனி தாங்கிக் கொள்ள இயலாது.
பழைய நாட்கள் என்றால் நமக்கெல்லாம் மிகவும் பிடித்தமான, ஓடுகாலிகள், பிழைப்பு வாதிகள், ஃபிலிஸ்டைன்ஸ் என்ற சொற்களால் வசைபாடி இருக்கலாம். அவையெல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லை நாம் மிகவும் முன்னேறிவிட்டோம் என்பது ஆசுவாசம் தருகிறது..