இந்தியப் பொது வெளியில் இரு முக்கிய தளங்களில் பாதுகாப்பின்மை நிலவி வருகிறது. 1. மதம். 2.உணவு
மதம் என்றாலே இணைந்துகொள்ளுதல் தான். சேர்ந்து வாழ்தல். இதன் எதிர் நிலை மதத்தை விட்டு வெளியேறுதல் அல்லது வெளியேற்றப் படுதல். விருப்பத்தின் அடிப்படையில் வேறொரு மதத்தில் இணைதல், மதமாற்றத்தை எதிர்த்தல்-- ஆக மதம் இங்கு ஒரு நிலையான நிறுவனம். இந்திய அரசியல் வெளியில் செயல்பட்ட பெரும் அறிவுஜீவிகள் எல்லோருமே மதத்தோடு இணக்கம் கண்டவர்கள்.தான்.(திரு ஈவேரா பெரியாரும் மற்றும் சில கம்யீனிஸ்டுகளும் வ
...ிதிவிலக்கு)
மதம் சார்ந்த செயல்பாடுகளில் பிறரது ஒழுங்கின்மை இங்கு கவனக்குவிப்புக்கு உள்ளாகும் விஷயமாக இருக்கிறது.
மதம் என்பதும் மதத்தின் சடங்காச்சாரங்களோடு இணைந்து வாழ்தலும், மதப் பிரஷ்டப் பயமும் ஒழுங்கீனங்களை அனுமதிக்க முடியாத நிலைமைகளும் லில்லியேசியே தாவரக் குடும்பத்தின் பிரதான கருப்பொருளாகும்
கோல்ச்சிக்கம் ஆட்டம்னேல் ஆசியாமைனர், கருங்கடல் பிரதேச தாவரம். பழைய மருத்துவத்தில் கௌட் நோய்க்கு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து
மாஸ்டர் ஹானெமனால் 1805ல் மெய்ப்பிக்கப்பட்ட மருந்து.
இதன் முக்கிய கருப்பொருள் உணவு . எல்லோருக்கும் தேவையான உணவு இங்கு எதிர் நிலையில் பேசப்படுகிறது. உணவைக் கண்டாலோ அல்லது சமையற்கட்டிலில் உணவு தயாரிக்கும் மணம் வீசினாலோ அடி வயிற்றிலிருந்து ஒரு குமட்டல்-வாந்தி. குறிப்பாக அதிகம் அவசியம் என்று சொல்லப்படுகிற மீன், முட்டை, இறைச்சி, கொழுப்பு உணவு தாங்கிக்கொள்ளமுடியாத ஒரு ப்ரச்சினையாகிவிடுகிறது. உணவு ஏற்பின்மை உணவு பாதுகாப்பின்மையாக கோல்ச்சிக்கத்தில் வெளிப்படுகிறது.
லில்லியேசி குடும்பத்தின் ப்ரதான கருப்பொருளான மதவுணர்வும்- விலகல்கள் ஒழுங்கினங்களின் சகிப்பின்மையும், உணவு-குமட்டல் -வாந்தி போன்ற கருப்பொருளையும் ஒருங்கே கொண்டிருப்பதால் கோல்ச்சிக்கம் இந்திய வெளியில் முக்கியம் தேவைப்படுகிற, புரிந்துகொள்ளப்படவேண்டிய மருந்தாகும்,
வெப்ப நாடுகளின் நோயான வயிற்றோட்டம், ரத்த சீதபேதி, குமட்டல் வாந்தி, காலரா, வயிற்றுப்புண், எரிச்சல் வலி, உப்புசம் எல்லம் கோல்ச்சிக்கத்தில் உண்டு.
முக்கியமாக, யூரிக் ஆசிட் ரத்தஓட்டத்தில் அதிகமாகி, மூட்டுக்களின் மெல்லிய சவ்வுகளில் சோடியம் மோனோயூரேட் படிவதால், கௌட் நோய் அதிகம் கானப்படுவதும், ருமாட்டிஸமும், அதன் பின்விளைவுகலான, தசை மூட்டுச் செயலிழப்பும் இருதய வால்வுகளின் கோளாறுகளும் கோல்ச்சிக்கத்தில் கவனம் பெறுகிறது.
வயிறு, மூட்டுக்கள் இருதயம் ஆகியன அதிகம் நோயேற்கும் இந்தியப் பெருவெளியில் கோல்ச்சிக்கம் முக்கியத்துவம் பெறும் ஒரு ஹோமியோபதி மருந்தாகும்