Tuesday 22 July 2014

மறதி

  1. ஞாபக மறதி கடுமையாம்
    முனகினார் வந்தவர் கவலையோடு
    எதையெல்லாம் மறந்தாய் ?
    நாக்கை நீட்டிக் கேட்டார் மற்றவர்

    வீட்டிலக்கம் சொல்ல இயலாதா?
    சம்பள பில்லில் ஸ்டாம்ப் ஒட்டுமிடம்?
    வங்கிக் கணக்கு, பாஸ் புக் மீதம்?காதலியின் பழைய வாழ்விடம்?...

    எல்லாம் சுவற்றில் விறட்டி ஒட்டி
    பசுமையாய் ஞாபகத்தில் பதிவோடு
    மூப்பு உண்மைதான் ஆனாலும்
    நினைக்க விரும்பியது இருக்கிறது
    அல்லது மறக்கிறது முழுசாய்

    நேற்றுக் காலை தூங்கி எழுகையில்
    யார் முகத்தில் விழித்தேன்?
    நேற்று இரவு படித்ததின் சாராம்சம்
    காலை உண்ட உணவின் ருசி
    எப்போதோ நண்பனுக்கிட்ட ஷ்யூரிட்டி
    மின்வாரிய அட்டை வைத்த இடம்

    ஆச்சரியம் என்ன? மறத்தல் இயல்பே
    என்றார் மீளவும் தெளிவாய் அடுத்தவர்!
    எல்லோரும் கலைந்தனர் விரைவாய்
    சின்னத்திரை தொடர் நேரம் நெருங்கியதால்!

டார்வினும் எம்மை மன்னிக்கவும்

  1. நெடுகிலும் விதவை மரங்கள்
    மனிதக் கோடரியின் கூர் நாவில்
    வெட்டுண்டு வீழ்ந்து கிடந்தன
    ஊரெங்கும் பாலையாய் பசுமையற!

    அனுமன் மன்னிக்கவும் என்னை
    நீயே உன் எஜமானனைக் காக்க
    அவர்தம் பெண்டாட்டியைக் காக்க
    வேரோடு மலையையும் பெயர்த்தாய்
    அசோக வனமும் கொளுத்தினாய்!...

    நீ குரங்கென்றே வைத்துக்கொள்வோம்!
    கதை மாற்றம் அறிந்திலையோ?
    மனிதன் குல்லாயைக் கழற்றி வீச
    குரங்குகளும் வீசினது நேற்றையது
    நீ பெயர்த்துப் போட்டதும் வனத்தை
    வெட்டி வெட்டி சாய்க்கிறான் மனிதன்

    அனுமனுக்கும் நமக்கும் உறவு சொன்ன
    டார்வினும் எம்மை மன்னிக்கவும்!

தொட்டிலில் உறங்கும் குழந்தை

தொட்டிலில் உறங்கும் குழந்தை
 கனாக்கண்டு சிரிக்கும் தானாய்
 பாம்பில்லை அதன் கனவில்
 பஞ்சு மிட்டாயும் வந்ததில்லை
 என்னவென்று புரியாமல் சிரிக்கும்
 எப்படியும் எதாவது கிடைத்துவிடும்
 தொட்டிலில் உறங்கிச் சிரிக்க
 கருப்பைப் புறவெளி வியாபகம்
 பிஞ்சுக்கை முறித்துத் திமிறும்
 கால் நீட்டித் துழாவும் ஆனாலும்
காதில் இரைச்சல்கள் இல்லை
 புறச்சத்தம் ஏதும் பாதிப்பில்லை
 அகச்சத்தம் இல்லவே இல்லை
 ஊமைப்படமாய் எல்லாக் காட்சியும்
 ஒருவேளை தொட்டில் மொழி
 சத்தமற்ற, சலனமற்ற காட்சியோ?
திரிசங்கு நிலையில் ஊஞ்சல்
 மேலே மட்டிலும் இணைப்பு
 கீழென்று ஏதுமற்ற வெளி
 மேன்மை நோக்கிய பயணம்போல்!

குறுந்தகடுகள்

  1. குறுந்தகடுகள் வந்தது வசதி தான்
    இடம் ஆக்கிரமிப்புக் குறைவு
    ஒரு தண்டில் நூறு அடுக்கலாம்
    லாவகமாய்க் கையாளலாம்

    கிராம்போன் ரெக்கார்டுகள்
    நிரம்ப சேகரம் பரிபாலித்தல் கடினம்
    தூக்கிக் கொடுத்துவிட மனமில்லை
    கறுப்பு ரெக்கார்டைக் கண்டாலே
    குடும்பத்தில் அனைவரும் சீற்றம்...

    சிறு பிராயம் தொட்டுக் கூடவே வளர்ந்த
    கிரம்போன் நட்பு பிரிவது எளிதல்ல

    பதினாறு சுற்று முப்பத்து மூன்று சுற்று
    குறுந்தகடு அளவிலே நாற்பத்தைந்து சுற்று
    முன்று ரகமும் தட்டில் வைத்து சொடுக்கினால்
    நளினமாய் அசைந்து நர்த்தனம் புரியும்

    மேடு பள்ளம் ஏறி இறங்கி ஊசி தொட
    கறுப்பு மறைந்து கானம் பிறக்கும்

    குனிந்து உட்கார்ந்து உற்றுக் கேட்கும்
    அந்த ஹெச் எம் வீ நாய் நண்பனுக்கும்
    என்னைப்போலவே அகவை அறுபது.

பள்ளிக் கூடம் வெகு தூரம்

  1. பள்ளிக்கூடம் வெகு தூரம்
    ஐந்து மைல் குறையாது
    நடந்தே போகனும்
    ஒருகையில் புத்தகப்பை
    மற்றதில் பித்தளைத் தூக்கு
    கொஞ்சம் பழையது மோரூற்றி

    புதாற்றுக் கரை நெடுக
    விண்ணுயர தேக்கு மரம்
    ஐந்து கண்ணுப் பாலம் தாண்டி...
    ஆறு வளைந்து போக்குக் காட்டும்
    தினமும் துணைக்கு வருவது ஆறு
    போகும் வழியெங்கும் தீனி தரும்

    சடை சடையாய் கொடுக்காய்ப்புளி
    ஒரு கல் விட்டால் நூறு விழும்
    ஈச்சம்பழம் முந்திரிப் பழம் ,மூக்குசளிப் பழம்
    யத்தனிப்பு இல்லாமல் கைக்கு வரும்
    மைனா சிட்டு பழந்தின்னி வௌவால்
    எல்லாம் அன்போடு பங்கு கேட்டு
    பரிபாஷை பேசும் கலகலப்பாய்

    அரக்கு நிறத்தில் பட்டுப்பூச்சிக்கு
    நெருப்பெட்டி கூடாரம் வளையவர
    மூச்சிரைக்க ஓடினாலும்
    பிடிபாடாமல் தப்பும் வெட்டுக்கிளி

    தாவரவியல் விலங்கியல் தானாய் விளங்க
    தமிழாசிரியர் ஐந்துவகைப் பா கேட்பார்
    கலிப்பா, வெண்பா ஆசிரியப்பா அடுத்தது
    சொல்ல திக்கித் திணற நக்கலாய்ச் சொல்லுவார்
    நீ இனிமேல் தூங்கப்பா வென. !

அந்தக் கிராமத்தில் அந்தக் காலத்தில்

  1. அந்தக் கிராமத்தில்
    அந்தக் காலத்தில்
    மாடுகள் வசித்தன

    முகர்ந்து பார்த்தே
    தெரிவு செய்து
    தாய் மாடு தின்னும்
    கன்றுகளும் அப்படியே

    இது ஆகாது...
    தின்றால் கழிச்சல்
    சடுதியில் வருமென
    தாயறியும் கன்றுக்கும்
    ஞானம் கடத்தும்
    கல்லூரிக்குப் போனதில்லை
    கல்வி கற்க கால் நடைகள்

    என்றைக்கோ அடாவடியாய்
    தின்று கழிந்தால்
    பெத்தய்யா வைத்தியர்
    முண்டாசுக் கட்டி
    கழுத்தில் வஸ்திரம் தரித்து
    பச்சிலை மருந்து தர
    பறந்து போகும் கழிச்சல்

    கொம்புக்கு வர்ணம் பூசி
    கழுத்தில் நெட்டிமாலை சகிதம்
    மாட்டுப் பொங்கலன்று
    மாடவிழ்க்கும் நேரம்
    முதல் மரியாதை
    பெத்தய்யா வைத்தியருக்கே!

    இந்தக் காலத்தில்
    இந்தக் கிராமத்தில்
    மாடும் இல்லை
    வைக்கோலும் இல்லை
    வைத்தியர் பெத்தய்யன்
    வருவதும் இல்லை!

அவளே கைனக் அவளே டையட்டீஷியன்

  1. கூட்டுக் குடும்ப முன்னறையில்
    செவ்வகமாய் போர்வைத்தடுப்பு
    அதுவே பிரசவவெளி!
    பெரியப்பாவின் மூத்த மகள்
    பெண் குழந்தை பெற்றிருந்தாள்!

    ஒரு பிராந்தி பாட்டிலில்
    சுகப்பிரசவம் நடத்தினாள் முசுடு ஆயா
    ஊரில் எல்லார் தொப்புள் அறுத்த
    கத்தியும் அவளிடம் தானாம்!...
    முகமெங்கும் சுருக்கம்
    சிறுபிள்ளை சாக்பீஸ் கிறுக்கலாய்
    அவளே கைனக் அவளே டையட்டீஷியன்!

    ப்ரசவத்தின் மூன்றாம் நாள்
    பத்தியக் குழம்பு செய்கிறாள் முசுடு
    சாயந்தரம் பிடித்த கொறவை மீன்கள்
    அன்னக்கூடையில் வளைய வரும்
    தேங்காய்ப்பால் சாறெடுத்து சேர்ப்பாள்
    காலையில் மீன்கள் மயக்கத்தில்

    பூண்டுரிக்க ரெண்டுபேர் மிளகிடிக்க ரெண்டுபேர்
    அவள் அதட்டல் உருட்டல் அட்டகாசம்
    ஒரு பிள்ளைத்தாய்ச்சிப் பத்தியக் குழம்பு
    ஊரெல்லாம் மணக்கும் முசுடின் கைராசி
    எல்லோரும் நினைப்பர் தம் வீட்டுப்
    பிரசவக் கொறவைப் பத்தியக் குழம்பை!

    குலதெய்வ பூஜையில் என்னைக் கண்டதும்
    எரவானத்தில் தேடுகிறாள் என் தொப்புள்
    அறுத்த கத்தியை மறதியாய் வைத்தவள் போல்!
    கதை சொல்லிகள் ஊரில் அதிகம்
    என் பிறப்பின் கதை சொல்ல
    ஆயாவால் மட்டும் முடிகிறது
    ஊருக்கே ப்ரசவம் பார்த்த அவள் கதையை
    முக நூலில் பதியலாம் பகிரலாமென்றால்
    யார் வீட்டிலும் இல்லை அந்த தெய்வத்தின் படம்.!

என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?

  1. பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு!

    அகவை அறுபது
    மூத்த குடிமகனென
    அரசு சொல்லிற்று!
    இனி வேலை இல்லை!

    வங்கிக் கணக்கில்
    ஓய்வூதியம் சேமிப்பில்!
    ...
    ஆரமும் அட்டிகையும்
    மனைவி கேட்கிறாள்
    மகளுக்கு சீதனமாய் கார்
    தானப் பத்திரம் மகனுக்கு
    வீட்டை மாற்றி அவன் பெயரில்!

    பேரன் பேத்திக்கு ஆளுக்கு
    அரை க்ரௌண்ட் மனை
    புதுச்சேரி போகும் வழியிலாவது!

    என்செய்வது?
    நேர்மையாய் சம்பாத்யம்!
    லஞ்சம் லாவண்யம் கை சுத்தம்!

    ஈ.சீ.ஜீ யில் எழும்பி வாய் பிளந்து
    எகிறுது எஸ்.டீ வேவ்!
    இடது வெண்ட்ரிக்கிள் டிஸ்ஃபன்க்ஷன்!

    நெஞ்சை அழுத்தும் வலி
    நாக்கடி மருந்து நாலு நிமிஷமே தாங்குது!
    சின்ன வயசில் பலூன் ஆசை
    என் நெஞ்சுக்குள் பலூன் விடனுமாம்!

    இன்ஷ்யூரன்ஸ் கார்ட் தேய்க்கலாம்
    கார்ப்பரேட் ரேட்டுக்குக் காணாது
    சேமிப்பும் தேயும் முழுசாய்!

    மனசுக்குள் வெம்பி
    மற்றவர் முன் புன்முறுவல்
    மனம் மறை பொருள் சொல்ல
    அக்ரிமனி போல் அலையலாம்!

    உயிலும் இல்லை! தானமும் இல்லை!
    டீ-மாட் கணக்கு,ஷேர் தகவல்
    யாருக்கும் இல்லை!

    என்னாகுமோ? ஏதாகுமோ?
    மரண பயம் துரத்த
    ஒரு மாதமோ? ரெண்டு மாதமோ?
    இறுதித் தீர்ப்பு வந்தே தீரும்!
    ஆர்ஸெனிக் பதட்டம் அனு தினமும்!

    தன்னைச் சுற்றி சுவரெழுப்பி
    தனிமையைப் போர்த்திய உடலாய்
    தாளிட்ட கதவின் பின் ஓவெனெ
    அழலாம் இக்னேஷியாவாய்!

    சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
    விட்டேத்தியாய் ஸெபியாபோல்
    பாட்டும் பாடலாம்!
    பாட்டும் கேட்கலாம்!

    ஒரு மாத தாடி வளர்ந்தபின்
    புல், பூ, புள் , உதிரும் இறகெழுதி
    முக நூலில் லைக்ஸ் வாங்கலாம்!

    சொத்து, சொந்தம், சுமை, சுகவீனம் இல்லா
    சுதந்திரம் தேட
    என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?

பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு

பொய்யாவணம் தவிர்த்த எள்ளலோடு!

அகவை அறுபது
 மூத்த குடிமகனென
 அரசு சொல்லிற்று!
இனி வேலை இல்லை!

வங்கிக் கணக்கில்
 ஓய்வூதியம் சேமிப்பில்!

ஆரமும் அட்டிகையும்
 மனைவி கேட்கிறாள்
 மகளுக்கு சீதனமாய் கார்
 தானப் பத்திரம் மகனுக்கு
 வீட்டை மாற்றி அவன் பெயரில்!

பேரன் பேத்திக்கு ஆளுக்கு
 அரை க்ரௌண்ட் மனை
 புதுச்சேரி போகும் வழியிலாவது!

என்செய்வது?
நேர்மையாய் சம்பாத்யம்!
லஞ்சம் லாவண்யம் கை சுத்தம்!

ஈ.சீ.ஜீ யில் எழும்பி வாய் பிளந்து
 எகிறுது எஸ்.டீ வேவ்!
இடது வெண்ட்ரிக்கிள் டிஸ்ஃபன்க்ஷன்!

நெஞ்சை அழுத்தும் வலி
 நாக்கடி மருந்து நாலு நிமிஷமே தாங்குது!
சின்ன வயசில் பலூன் ஆசை
 என் நெஞ்சுக்குள் பலூன் விடனுமாம்!

இன்ஷ்யூரன்ஸ் கார்ட் தேய்க்கலாம்
 கார்ப்பரேட் ரேட்டுக்குக் காணாது
 சேமிப்பும் தேயும் முழுசாய்!

மனசுக்குள் வெம்பி
 மற்றவர் முன் புன்முறுவல்
 மனம் மறை பொருள் சொல்ல
 அக்ரிமனி போல் அலையலாம்!

உயிலும் இல்லை! தானமும் இல்லை!
டீ-மாட் கணக்கு,ஷேர் தகவல்
 யாருக்கும் இல்லை!

என்னாகுமோ? ஏதாகுமோ?
மரண பயம் துரத்த
 ஒரு மாதமோ? ரெண்டு மாதமோ?
இறுதித் தீர்ப்பு வந்தே தீரும்!
ஆர்ஸெனிக் பதட்டம் அனு தினமும்!

தன்னைச் சுற்றி சுவரெழுப்பி
 தனிமையைப் போர்த்திய உடலாய்
 தாளிட்ட கதவின் பின் ஓவெனெ
 அழலாம் இக்னேஷியாவாய்!

சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
விட்டேத்தியாய் ஸெபியாபோல்
 பாட்டும் பாடலாம்!
பாட்டும் கேட்கலாம்!

ஒரு மாத தாடி வளர்ந்தபின்
 புல், பூ, புள் , உதிரும் இறகெழுதி
 முக நூலில் லைக்ஸ் வாங்கலாம்!

சொத்து, சொந்தம், சுமை, சுகவீனம் இல்லா
 சுதந்திரம் தேட
 என்ன செய்யலாம் இந்த மிச்சப் பொழுதை?

பிரியு நண்பா

  1. பிரிய நண்பா!
    நீ பறந்திருக்கிறாயா
    ஒரு நாளாவது?
    இதயம் கழற்றி வைத்து
    முதலை மேல் போனதுண்டா அக்கரைக்கு
    பதினோறாம் வாய்ப்பாடு நடுவில் மறந்து
    மூச்சு வாங்கியது நினைவில் வருகிறதா?
    தீபாவளி ஓலை வெடி தெரு நாய் மேல் வீசி
    கரவம் கட்டும் மிருகத்திடம் சிக்கினாயா?
    பாட்டியின் சுருக்குப்பை சேமிப்பில்...
    கைவைத்திருக்கிறாயா?
    குடை ராட்டினம் சுற்றும் நீ
    தொட்டி ராட்டினம் மேலேற அலறல் ஏன்?
    என்னதான் செய்தாய் இத்தனை நாட்கள்?
    உன் கவிதையை நீதான் சொல்லேன்!
    நான் இழந்ததை நான் அறிய!

துரிதமாய்ப் போகனும்

  1. துரிதமாய்ப்
    போகனும்
    எல்லைக்கல்
    தாண்டி
    எல்லைக்கப்பால்
    அப்பாலுக்கப்பால்
    கற்பித சொர்க்கம்

    வண்டி இழுப்பது
    சண்டி மாடுகள்...
    தார்க்குச்சி
    கூடாதாம்
    ஜன நாயகத்தில்
    வால் திருகல்
    ஆகாது
    ம்ருக வதை!

    கீழிறங்கி
    சக்கரம் தாங்கி
    ஓடலாம்
    இலக்கு நோக்கி

    ஓட ஒட
    நகரும்
    எல்லைக்கல்

    வண்டிவேகம்
    மிஞ்சிய வேகத்தில்

சுய முகம்-சுய மோகம்

  1. சுய முகம்-சுய மோகம்

    கூப்பிட்ட சத்தம்
    காதில் கேட்டது
    திரும்பினால் ஆளில்லை

    தெரு முக்கில் மறுபடி
    திரும்பினால் ஆளில்லை
    என்னைத் தவிர
    ...
    அந்தத் தெருவில்
    அந்த நேரம்
    பிறிதொருவன் இல்லை

    எப்போதும்
    எங்கும் நானெ தான்
    மருந்துக்குக் கூட
    பிறத்தியான் இல்லை

    தேனீக்களாய்
    கூட்டமுண்டு
    சந்தை போல்
    பல முகங்கள்
    எனினும்
    எதிலும்
    என் முகமே

    பல்லாங்குழி ஆடி
    துடைத்து எடுத்தது
    தாயம் போட்டது
    ஸிக்ஸர் அடித்தது
    எல்லாம் நானெ

    அடுத்தவன்
    இல்லவே இல்லை

    கூப்பிடும் சத்தம்
    பெயர் சொல்லி
    திரும்பினேன்

    என் முகம் அணிந்த
    வேற்றாள் எதிர் பட

    என் பெயர் சொல்லி
    அழைத்தேன்
    என் முகம் திரும்பி
    என்னைப் பாக்க…………….

    அடுத்தவன் இல்லாமல்
    அன்பே இல்லாமல்...............

நல்ல ரத்தம் நான்கு வகை

    1. முதன் முதலாய்
      மூக்கில் வழிந்த
      தன் ரத்தத்தைத்
      தன் கையில்
      பார்க்கையில்
      அவனுக்கு
      வயது எட்டு!

      ரத்தத்தின் மணம் என்ன?
      சுவை எதுவோ?...
      சிவப்பில் எந்த நிறம்?

      ரத்தம் சிந்தும் மனிதன்
      காயம் உணர்ந்தவன்
      வலி அறிந்தவன்

      அட்டைகளைக் கண்டால்
      அருவருப்பு வரும்
      அவனுக்கு
      அடுத்தவர் ரத்தம்
      அதன் ருசி
      நல்ல வேளை
      அவை மனிதனல்ல!

      மனித ரத்தம்
      எந்த வகை?
      பேரனின் நோட்புக் குறிப்பு:

      நல்ல ரத்தம்
      நான்கு வகை:
      யேசு ரத்தம்
      காந்தி ரத்தம்
      லிங்கன் ரத்தம்
      மார்க்ஸ் ரத்தம்

      கெட்ட ரத்தம்”
      ஹிட்லர் ரத்தம்
      கம்ப்யூட்டர் வைரஸ் ரத்தம்
      ஸ்பைடர் மேன் ரத்தம்
      ட்யூஷன் வாத்தியார் ரத்தம்

      ரத்தம் அதிகமானால்
      ஹாலிவுட் வால்ட் டிஸ்னி
      படங்களில் நடிக்கலாம்
      ரத்த சோகையென்றால்
      அடுத்தவன் ரத்தம் உறிஞ்ச
      அரசியலில் நடிக்கலாம்

விழி பிதுங்கும் காலம்

  1. பழையது
    நீராகாரம்
    கலப்பை
    எருது
    வரப்பு
    பித்தளைத் தூக்கு
    எருக்குழி
    களம்
    உரல்
    உலக்கை...
    கைகுத்தல்
    குத்தகை
    சாட்டையடி
    சாணிப்பால்
    ஐந்தாம் நமூனா
    ரெண்ட் கோர்ட்

    அகராதிகள் நீக்கிய
    அடையாளங்கள்

    யூரியா
    ட்ராக்டர்
    ஃபுட் மார்ட்
    பீடீ ப்ரிஞ்சால்
    தற்கொலை
    கோக்
    பெப்ஸி
    இத்யாதிகள்
    நவீன பீடிப்புகள்
    பேய்கள்

    விழி பிதுங்கும்
    காலம்

Are we sane?


நவீன வாழ்வு நம் எல்லோரையுமே துயரராக்கியிருக்கிறது. உடல் சார்ந்த குறிகளோ அல்லது மனம் சார்ந்த குறிகளோ எல்லோரையும் வதைக்கிறது. சந்தையும் விளம்பரங்கள் கட்டமைக்கும் நுகர்வுகளும் ஒவ்வொருவரையும் உபாதைக்குள்ளாக்குகிறது.
ஹோமியோபதி உடல் மனம் எனப் பிரித்துப் பார்க்க இயலாத தொடர்மமாகவேக் கருதுகிறது. ஒருவரது நலம் தோராயமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதுவரை விளக்கப்பட்ட” சந்தோஷம்” கருத்தாக்கத்தின் போதாமை நன்கு புரிகிறது.

நவீன ஹோமியோபதி உளவியலிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவுக்கூர்மை அதிகம்.

Are we sane? எனும் கேள்வியை நம்முள் ஆழ்ந்து எழுப்பிய உளவியலாளர் திரு எரிக் ஃப்ராம் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டியவர். Art of loving எனும் நூலின் மூலம் அவர் தொடங்கி வைத்திருக்கிற விவாதங்கள் நேசம் குறித்த ஒரு தனிமனிதப் புரிதலையோ அல்லது சமூகம் கட்டமைத்துள்ள அர்த்தத்தையோ அறிவார்ந்த தளத்தில் மடை மாற்றும் தன்மை கொண்டவை.

மார்க்ஸ் மனிதனை தன் இனத்துக்காக வாழ்பவன் எனும் பொருளில் விளக்க முற்படுவார். எரிக் ஃப்ராமின் நேசம் குறித்த விளக்கம் மார்க்ஸின் விளக்கத்தோடு இயைந்து செல்லக்கூடியதாகவே இருக்கிறது.

மனிதன் தன் இனத்தையே நேசிப்பவன் அதற்காகவே வாழ்பவன் அவனது உழைப்பும் படைப்பும் சமூக முழுமைக்குமானது. நேசம் என்பது, Respect, Regard,Attention, Care towards all என்பதாகவே சாராம்சத்தில் பொருள் கொள்ளும். ஏனைய விளக்கங்கள் எல்லாம் குறைபாடுடையன; குறுக்கல் வாதத் தன்மை கொண்டவை.

ஹோமியோபதி அறிவியலைக் கற்றவர்கள்/ கற்பவர்கள் எரிக் ஃப்ராமின் நூல்களைக் கற்பது மிகவும் அவசியம்.
ஏவுகணைத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் சர்வ சாதானண நிகழ்வுகளாகிவிட்ட இன்றைய சூழலில் Are we sane ? எனும் விவாதம் எல்லாத் தளங்களிலும் தொடங்கப் படவேண்டியதே!








சந்தேகப் பேய்

சந்தேகம் ஒரு பேய் போல என்று சொல்வார்கள். ஒருவரைப் பற்றிக்கொண்டால் அவ்வளவு சீக்கிரம் விலகாது. யாருக்கு சந்தேகமோ அவர்களை வாட்டி வதைக்கும். மன நிம்மதியைக் கெடுக்கும், கற்பனைக்கெட்டியவரை, கதைப்பின்னல்களை உருவாக்கி உண்மையை மூளியாக்கும். இது ஒரு பீடிப்பு. மன நோய் முற்றிய நிலையில் காதில் தன்னோடு யாரோ உரையாடுவது போல் சத்தங்கள் கேட்பதாகச் சொல்வார்கள்
 நல்ல வேளையாக ஹோமியோபதியில் சந்தேகம் ஒரு மனக்குறி. ரெபர்டரியில் இரண்டு முக்கிய மருந்துகள் சந்தேகப்படுபவர்களின் அவஸ்தைக்குப் பயன்படும். ஒன்று ஹையோஸியாமஸ், மற்றொன்று லாக்கெஸிஸ். உயர்ந்த வீரியம் தேவைப்படும்
 யாரோ தன்னைப் பின் தொடர்வதுபோல் தோன்றுவது, எல்லோரும் தன்னைப் பற்றியே பேசுவது போல் எண்ணுவது காதில் ரகசியமான உரையாடல் கேட்பது, தன் வீட்டு மனிதர் தனக்கெதிராய் செயல்படுவது, போலிஸ் தன்னைக் கைது செய்ய வீட்டுக்கு வந்துவிட்டதாக நினைப்பது ஆகிய குறிகள் சந்தேகமும் பிறழ் காட்சிகளும் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும். காலி ப்ரொமாட்டம் மிகச் சிறந்த மருந்து.
சந்தேகம், பொறாமை, வெறுப்பு, அடிக்கடி சபித்தல், வக்கிர எண்ணங்கள் எல்லாம் ஒரு அடுக்கு வரிசை போல. நோய்மையின் தீவிர வெளிப்பாடு.
அடிக்கடி சபித்தலுக்கு அனகார்டியம் நன்றாக வேலை செய்யும் மருந்து.
வக்கிர எண்ணங்கள் மெர்க் சால் உயர்ந்த வீரியத்தில் பரிந்துரைக்கப் படுகிறது.
சந்தேகப் படுபவர்கள் அதிகார அடுக்குக்குகளில் உயர்ந்த நிலைகளில் இருப்பவரானால் அவர்களிடமிருந்து நோய் விலகுவதில்லை. சாதாரண மனிதர்கள் என்றால் மருந்துகள் செயல்பாடும், வாழ்க்கைச் சூழல் மாற்றமும் மிகவும் அவசியம்.

மில்லிஃபோலியம்


மில்லிஃபோலியம் என்றால்” ஆயிரம் இலைகள்” என்று பொருள்..

கிரேக்க புராணத்தில் போரின்போது தளகர்த்தன் ஏகில்ஸ் தனது சேனை வீரர்களின் விழுப்பு ண்களிலிருந்து ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த இந்த இலைகளையே பயன்படுத்தியதாக ஐதீகம் அதன்படியே இதன் தாவரப்பெயர் ஏகில்ஸ் மில்லிஃபோலியம் என்று அழைக்கப்படுகிறது.

பளீரென்ற சிவப்பு ரத்தப் பெருக்கு உடலின் எந்த துவாரத்தினின்று வெளிப்பட்டாலும் இந்த இலைகளை மென்றால் ரத்தப்போக்கு நிற்கும்.

இதையே ஹோமியோபதியில் மருந்தாக மெய்ப்பித்திருக்கிறார்கள். தாய்த் திரவமாகவும் வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிறார்களின் மூக்கிலிருந்து ரத்தம் வடியும் ”எபிஸ்டாக்ஸிஸ்” நோயை உடனடியாக நலப்படுத்தும். பொது வழக்கில் இத்தாவரத்தை “யாரோ” என அழைக்கிறார்கள். வயலெட் நிற நட்சத்திரங்களாய் இதன் மலர்க்கொத்துக்கள் மனம் கவரும்.
 

காற்றின் கலகம்

  1. காற்றின் கலகம்
    இலையை அசைத்துப் போடும்

    இழை ஊஞ்சலாடித்
    தரையிறங்கும் புழு
    இலக்கு மாறிட
    சபித்தபடி நெளியும்
    வழிப் போக்கன் தோளில்

    சதா அலையும் காற்று...
    போக்கிடம் மறந்து!

    உள்ளிழுக்கும் சிறைக்குள்
    நெஞ்சின் முஸ்தீபுகள்
    தோற்றுப் போகும்
    போன வேகம்
    திரும்பும் வளி
    குகை வாயில் கடந்து
    விடுதலை தேடி!

    ஒழுங்கின் எதிரி
    ஒற்றைக் கண அமளி
    காட்சிப்படும் சுளுவாய்
மனிதர்களின் தேவைகள் குறித்த விவாதம் 1920 களிலிருந்து
தொடர்கிறது.சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் அதிக
பங்களிப்பு செய்திருக்கிறார்கள். குடும்ப வருமானம் கூடக்கூட, உணவுக்கென்று
செலவழிக்கும் தொகை அதே விகிதத்தில் கூடுவதில்லை என கோட்பாடு தந்த
எர்னஸ்ட் எங்கெல்ஸ் தொடங்கி தேவைகளின் படி நிலை தயாரித்தளித்த ஆபிரஹாம் மாஸ்லோ
வரை ஆரம்ப நிலை புரிதல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இக் கருத்துக்களின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் பின்னாட்களில் கூடினாலும் முழுமை பெறாமலே இருக்கிறது. 
மார்க்ஸியரல்லாத பொருளாதார நிபுணர் தார்ன்ஸ்டன் வெப்ளனின் ஓய்வு விரும்பிகளின் வர்க்கம் மற்றும்
பகட்டு நுகர்வு ஆகிய இரண்டு கருத்தாக்கங்களும்  காலத்தில் முந்தியதால், தேவைகளின் படி நிலைக் கோட்பாட்டின் மீது ஒரு பொருத்தமான எதிர்வினையை விதைக்காமலே இருந்துவிட்டது.
50 களில்  முதலாளித்துவமும் தொழில் நுட்பமும் இணைந்து நுகர்வுக் கலாச்சாரம் கட்டமைக்கப் படுகிற போது தனது தேவையை உணராத தலைமுறை உருவாவதையும், சந்தையின் பலிகடாக்களாக மனிதர்கள் விழிப்புணர்வற்று மரத்துப் போனதையும் கோட்பாடாக ஹெர்பர்ட் மார்க்யூஸ் முன்மொழிந்தும், இன்றுவரை, தேவைகளின் படி நிலையில் மேலிரண்டு அடுக்குகளான, சுய மதிப்புத் தேவைகளும், சுய மேம்பாட்டுத் தேவைகளும் இன்னும் சரியான தளத்தில் விவாதிக்கப் படாமலேயே இருக்கிறது. ஏறக்குறைய இப்படி நிலைகள் வெப்ளனின் பகட்டு நுகர்வாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  மார்க்யூஸும், வெப்ளனும் இணையும் தளம் மாஸ்லோவ் மற்றும் ஆல்டர்ஃபெரால் சுருக்கியளிக்கப்பட்ட  பிழைப்பின் தேவைகள், சார்ந்திருத்தலின் தேவைகள், வளர்ச்சியின் தேவைகள் மீதான விமர்சனமாகவே அமையும் .
சந்தையின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தலை முறையின் வாழ்வியல் தேவைகள் மீதான சரியான கணிப்பு மிகவும் அவசியம்.

தேவைகள் –பகட்டு நுகர்வு கட்டமைக்கும்-வேட்கை தொடர்மம் குறித்த அவதானிப்பும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.