Monday, 18 August 2014

உலகத்தையும் நாடகத்தையும்

உலகத்தையும் நாடகத்தையும்
மேதைகள் ஒப்பிட்டப் போய்
வேஷங்கள் முக்கியமாயின!
ஒரே கணத்தில் பல வேஷம்!
இறைவனுக்குப் பிடித்த
நான்கு முகங்களாய்!...

சாவி கொடுத்து
சுருள் வில் முடுக்கியதும்
கேசம் அடர்ந்த பொம்மை
தத்தித் தத்தி நடக்கும் வேஷம்
சகலருக்கும் பிடித்த ஒன்று!

திகட்டும் வேஷங்களாய்
மருத்துவர், காவலர், போராளி
நீதியரசர், படிப்பாளி எல்லாம்!

உம்ம் போடு! உம்ம் போடு!
எல்லா முடிவுக்கும் உம்ம் போடும்
பொம்மையாயிரு!
பொம்மையாய் நட!
வேடிக்கை காட்டு!
பல்லிளிக்கும் தொழில் நுட்பகாலம்
இதையும் விட நல்ல வேஷம்
இனி என்றைக்கும் கிடக்காது

விதம் விதமாய் பொம்மைகள்
முடுக்கிவிடப்பட்டு உம் போட்டபடி
நடந்து போகட்டும், நாடக உலகில்!
Ravichandran Arumugam's photo.

No comments:

Post a Comment