Wednesday, 7 August 2013




ஜேன்  சிக்கெட்டியின் ஒரு நலமாக்கல் .


 லிண்டா  46 வயது  உளவியல் நிபுணர் .ஹோமியோ  சிகிச்சைக்காக  வந்தார் . தலை முழுக்க சொட்டையாய் இருந்தது. இரண்டு வருடங்களுக்கும்  மேல்  அவர் இந் நோயால் கஷ்டப் படுகிறார் .  பாதி தலை வழுக்கை . முடியே  இல்லை.     ஸ்டீராய்ட்ஸ்  சிகிச்சை எடுத்துக்கொண்டும் முன்னேற்றம் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் தம்பி இறந்து போனான் அப்போது ஆரம்பித்த தொல்லை.   அவர் சொல்கிறார் .

""என் குடும்பத்தில் எட்டு குழந்தைகள்.  நான் பார்க்க அழகாக இருப்பேன் . எப்போதும் நன்றாக வேலை செய்வேன் .யாருக்கும் சுமையாய் இருந்து எனக்குப் பழக்கம் இல்லை. அம்மாவை அவ்வளவாக நான் உணரவில்லை.  எங்களுக்குள் இடைவெளி எப்போதும் அதிகம் உண்டு.

சிறுமியாக இருந்த போது ஒரு தகாப் புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டேன் . அது  அறியாத வயதில் நடந்தது என்றாலும் குற்ற உணர்வு என்னை அரித்துத் தின்கிறது,  எப்போதும் மனத்தில் ஒரு குழப்பம்.  எனக்கென்று உறவுகள் இல்லை.  வீடென்றும் ஒன்றுமில்லை.   வேலைப் பளு கூடினால்  இக்குழப்பமும் அதிகரிக்கிறது. மற்றவர்களிடமிருந்து  தனித்தே இருக்கிறேன். யாருடனும் சேர முடியவில்லை. எப்போதும் வேளையில் மும்முரமாய் இருக்கிறேன். என்னைக் குறித்த எனது புரிதல் இதுதான்.

குழப்பம்
குற்ற உணர்வு
அடையாளச் சிக்கல்
தனிமை
அலுமினா  சீ எம் 1 டோஸ்

2 மாதத்திற்குப்பின்
 அவரது தலையில் கேசம் வளர ஆரம்பித்தது.
சொட்டைகள் மறைந்தன.
வழுக்கைத் தலை என்று யாரும் சொல்ல இனி முடியாது.

ஒரு வருட இடைவெளிக்குப்பின்  மீண்டும் வந்தார். குழப்பம் எதுவும் இல்லை.  நல்ல தன்னம்பிக்கை.

மீண்டும் கிளினிக்கை ஆரம்பித்து உளவியல் சிகிச்சை தருகிறார்.
தனக்கு நேர்ந்தது   ஈகோ -ஸெல்ப் அச்சில் இணைவுக் கோளாறு  என அவரால் நன்கு விளக்க முடிந்தது.  
 

No comments:

Post a Comment