Wednesday, 7 August 2013

தீ தியர்  கிராண்ட் ஜார்ஜின் - துயரர் சரிதை

பத்து வயது சிறுவன் . ஆளுமைக் கோளாறு காரணமாக பள்ளியிலும் , வீட்டிலும் ஒரே  பிரச்சினை.. எல்லோருக்கும் அவனைக் கையாள்வது மிகவும் கடினம். கடும்  பொறாமை . எல்லாரோடும் வம்பு, சண்டை.  தாய் தந்தையரைக் காட்டு மிராண்டிகள் எனத் தாக்குகிறான்.

முதலில் பல மருந்துகள் மாற்றி மாற்றிக் கொடுத்தும்  பலனில்லை.
அவனுக்கு சொத்தைப்பல் இருந்தது.  அதை வைத்து  கிரியோசோட்டம்  15 சி  கொடுத்தேன்.
அதற்குப் பின் தன் தாயும், தந்தையும் கலவியில்  இருப்பதாய்க் கனவுகள் அடிக்கடி வருவதாகவும்  தான் குழ்ந்தையாய் படுக்கைக்கு மேல் கிடப்பதாகவும், பிறக்கவே விரும்பவில்லை என்றும்  சொன்னான். அவனுடைய தாயை விசாரித்தேன்   அவனுக்கு 5 வயது நடக்கும் போது ஒருமுறை  அவர்களின் படுக்கை அறைக் குள்  வந்துவிட்டதாகவும், அப்போது அவர்கள் கலவியில் இருந்ததாகவும் கூறினார்கள்.  அதிலிருந்தே அவனது கடும் சினமும்  வம்பு தும்புகளும் அதிகரித்தன என்றார்கள். 
பிறப்பதா வேண்டாமா  எனும் இருமன நிலைக்கு அனகார்டியம்  15 சி கொடுத்தேன் ;  ஒரு பயனும் இல்லை தோல்வி தான்.

கடைசியில், ஒரு நீண்ட யோசனைக்குப்பின்,    சென்ச்ரிக்ஸ்  கண்டார்ற்றிக்ஸ்  15 சி கொடுத்தபின் தான் அவனுடைய ஆளுமைக் கோளாறுகள் படிப் படியாய்க் குறைந்தன .

சென்ச்ரிக்சில் ஒரு கற்பழிப்பைக் காண்பதாய்க் கனவுகள் வரும்.  அதன் அடிப்படையில் இம்மருந்தைத் தெரிவு செய்ய முடிந்தது.  அந்த   சிறுவனின் ஓடிபஸ் சிக்கலே அவனது கோளாறுகளுக்குக் காரணம்.

  

No comments:

Post a Comment