Wednesday 4 June 2014

சக்கரவர்த்தி கோமகன்களிடன் கடன் கறந்து

  1. எனக்கு தெரிந்த ஆறும் படுகையும் போல்
    பட்டாமணியமும் கணக்குப் பிள்ளையும்
    நானானறிந்த பெரிய மனிதர்கள் கை நீளமாய்
    பாக்கெட் பெரிதாய் எப்போதும் ஜமாபந்தி.

    வல்லவனுக்கும் வல்லவன் உண்டுதானே
    இன்னும் பெரிய மனிதர்கள் பார்த்தேன்
    குரல் நாண்களில் பாரீச வாயு தாக்கியவராய்
    தவளைக் குரலில் இழுத்துப் பேசுவார்
    ...
    மெல்லிய ரப்பர் குழாயில் காற்றடைத்து
    சுற்றிலும் முரட்டு டயர் உடுத்தியவராய்
    ஊதிய பெருக்கம் எப்போதும் பேச்சில்
    சக்கரவர்த்தி கோமகன்களிடம் கடன் கறந்து
    நம்மூரில் பால் உரைக்கூத்தத் தெரிந்தவர்

    எப்போதும் அடுத்தவன் பணமே குறி
    பணம் வந்துவிட்டால் மணலைத் திரித்து…….
    மாட்டு மூத்திரம் கறந்து ஏற்றுமதி
    இயற்கை உரம் தயாரிக்க வெளியூரில்

    உள்ளூரில் பத்துகிலோ ஒரு கத்திரிக்காய்
    செயற்கை விதை இறக்குமதி மாயமாம்

    கூடு விட்டுக் கூடுபாயும் கலை விற்பன்னர்
    இவர் ஒபாமா உடலுக்குள் போவார்
    அவரும் இவர் உடலில் புகுவார்
    எல்லாம் ஒரே கணத்தின் அற்புதம்
    பேச்சு மட்டும் அவரவர் சொந்தக் குரலில்.

    இவர் போல் பேச எவராலும் ஆகாது
    திருஷ்டி சுத்திப்போட மண் தான் கிடையாது
    எல்லாப் படுகையும் விற்பனைக்கே போச்சே
    இருக்கவே இருக்கு ஆலை சாம்பல்
    இனி சாம்பல் சுற்றினால் கெட்ட கண் போகும் திட்டம்.

No comments:

Post a Comment