- நான் என் உடலெங்கும்
உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
தவிட்டு நிறத்தில்
வழவழவென
அட்டை போட்டு
வெள்ளையாய் லேபிள்
ஒட்டிப் பேரெழுதி
கற்ற கல்வியும் காட்டி
வெளியெங்கும் அலைகிறேன்...
பெயரென்றால் என்னவென்று
நண்பன் கேட்கிறான்
நேற்றுக் கொட்டிய தேனீயின்
பெயரென்னவென்று அறிவாயா?
பிராது கொடுக்கப் பெயர் வேண்டுமோ?
தினமும் காலையில்
துளசிமாடம் சுற்றிவந்து
ஒரு கை உருவி
வாயில் போட்டுக்கொள்கிறாள்
உன் அம்மாவும் என் அம்மாவும்
உருவிய இருவீட்டுத் துளசிக்கு
இரு வேறு பெயருண்டா ?
எல்லா துளசியும் துளசிதான்
பாரபட்சம் நம் குலப் பெருமையாம்!!!
குரங்கில் வாலி சுக்ரீவன் பெயருண்டு
பருந்தில் ஜடாயு பாம்பில் சேஷன்
ராமர் வருடிய அணில் பெயரென்ன?
அவதார மச்சமும் வராகமும்
லேபிள் ஒட்டிக்கொண்டதா?
ப்ரம்மா டீஜீஓ,விஷ்னு எம்பீபீஎஸ்,எம்டீ
யமதர்மன் எம் ஏ.எம் எல்
ரெண்டு முறை சொல்லி
ஜெபித்துப்பாரென்றான் !
நான் முகம் சுளித்தேன்
உனக்கு மட்டும் பட்டமெதெற்கு
பட்டாபிஷேகம் தான் எதற்கென்றான்?
Sunday 1 June 2014
பட்டமெதற்கு பட்டாபிஷேகம் தானெதற்கு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment