Wednesday, 23 April 2014

தப்பி வந்த புறா

  1. தெருவில் ஆடும்
    விடலைக் க்ரிக்கெட்டர்கள்
    வேகமாய் அடிக்க
    இரண்டாம் மாடிவரை’
    ஏவுகணையாய் வந்து
    என் வீட்டு பாத்ரூம்
    ஜன்னலில் ஆலமரப்
    பொந்தொன்று
    விட்டுச் செல்ல
    ...
    தப்பி வந்த புறா
    நுழைந்து ஏகதேசமாய்
    பயத்தில் தங்கிவிட
    சிறகடிப்பின் அதிர்வில்
    எல்லோர் மனமும்
    அதிர்ந்து நடுங்க
    தாளிடப்பட்டது கதவு
    நாள் முழுதும் பாத்ரூம்
    பயனற்றுப் போனதே பேச்சாய்!

    இரவில் அடைய வீடு வந்த
    நான் கதவைத் திறக்க
    அனுமதி மறுப்பு
    மீறல் எனக்கோ சாசுவதம்!
    தாள் திறவாய் பாடி
    உள் நுழைந்தால்
    சின்னஞ்சிறிசாய்
    புறா குஞ்சொன்று
    தனிமையில்
    நடுங்கி விரைத்து
    கழிவிரக்கத்துடன்
    ஒடுங்கிக் கூனிக்குறுகி
    படபடப்போடு
    சிறகில் நடுக்கம்

    நான் பிடிக்கும்
    முஸ்தீபுகள்
    எடுபடாமல் கொஞ்சம்
    போக்குக் காட்டிப்பின்
    கையில் யாசிக்கும்
    அன்போடு வந்தமர
    புறாவை முத்தமிட
    உயரத் தூக்கியதும்
    ஜன்னல் பொந்தில்
    விடுதலையாகும்…..

    நாள் முழுதும்
    பட்டினி போட்ட
    அனைவரும்
    சிறைபட்டு
    நின்றனர்
    பச்சாபத்தோடு
    பகலில் பட்ட
    மல ஜல உபாதைகள்
    நினைவை உறுத்த

    சதுரமாய் அட்டை வெட்டி
    பொந்தை அடைக்கும்
    புத்திசாலித்தனத்தோடு
    என் பேரன் ஆர்வம் காட்ட
    நீங்களும் இருக்கீங்களே!
    வசவுகள் மறு நாள் வரை…....

No comments:

Post a Comment