Wednesday, 24 December 2014

ஏனோ சபிக்கிறேன்?

நேற்றிரவு சபித்தலும் பின்
இன்றைய வருத்தமும்
சுவற்றில் கழன்ற
உலர் வறட்டியாய்
என்னில் பதித்த தடங்கள்...
இன்னும் பசுமையாய்!

ஏனோ சபிக்கிறேன்!
சபித்தல் என் இயல்பு
சதா எச்சிலை உமிழ்வதாய்
சதா சபிக்கிறேன்
அவனை இவனை உவனை!
நான் சொன்னால் நடந்திடுமென
மிரட்டலும் கூட்டி
கடக்கிறது என்காலம்
கை நிறைய
பை நிறைய
உறுத்தும் உமியோடு!

No comments:

Post a Comment