ஹோமியோபதிப் பட்டறைச் சாத்தியப்பாட்டில்.......
ஹோமியோபதி அறிவியலில் மருந்துகளுக்கிடையேயான பொருத்தப்பாடுகள் மீதான ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. மேதை ஆர்.பீ படேல் தான் இது குறித்த பயணத்தைத் தொடங்கியவர். அவரது லைக்கோபோடியம்(ஆண்) பல்சட்டில்லா(பெண்) பொருத்தப்பாடு ஏதோ ஜாதகக் கணிப்போ என்று கூறும் அளவிற்கு இந்தியத்தன்மை கொண்டதாக விளங்கியது. பின்னாட்களில் , குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாய்வு நிறைய நூல் வடிவங்கொண்டது. கடைசியாக வந்தது லிஸ் லேலரின் நூல்.
இலக்கியப் பரிச்சயமும், ஹோமியோ அறிவியல்-மருத்துவக் களஞ்சிய நுண்ணுணர்வும், சமகால வாழ்வின் கட்டுப்பாடுகள் தளர்ந்த சமூகவியல் புரிதலும் கொண்ட ஐவர் கூடுகின்றனர். ரேமண்ட் கார்வரைப்போல் அத்து மீறல்கள் கொண்ட ஆண் பெண் உறவுகளை ஹோமியோ மருத்துவக் களஞ்சியப் பின்னனியில் எழுத முற்படுகின்றனர். சமகால வாழ்வின் அமளி குறித்த புரிதல் ஐவரிடமும் இருக்கிறது. ஒருவர் நீதிபதியாகிறார். பிறிதொருவர் சமூக ஆர்வலராகிறார். இருவரில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் தங்களை (அதுவும் திருமணமான) பாத்திரங்களாகக் கட்டமைத்துக் கொள்கின்றனர்.. ஐந்தாவது மனிதர் கதையை சுறுறுப்பாய் நடத்திச் செல்லும் பார்வையாளர் அவரது குறுக்கீடு அடிக்கடி இடையில் நிகழ்கிறது.
கதை தொடங்குகிறது. ஃப்ளூரிக் ஆசிட் ஆணும் ஹையோஸியாமஸ் பெண்ணும் இரவில் நள்ளிரவுக்குப்பின், உணர்வுகளின் உச்சத்தில் முக நூலின் உரையாடல் தளத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். கானொளிக் காட்சியும் இடம்பெறலாம் எனும் கருத்தை பார்வைவையாளர் குறுக்கிட்டுச் சொல்ல கானொளியும் தொடர்கிறது. உரையாடலின் உயிர்ப்பில் இருவரின் குடும்ப சூழல் மனப் பாதுகாப்பின்மையில் தொடங்கி, முக நூல் தரும் தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளை அலசி, பின் பாலியல் வழுவல்களில் சரிந்து, முழுமையான அத்துமீறலை நிறைவேற்றுகிறது.
பார்வையாளர் குறுக்கிட, தளம் வேறு மடைமாற்றம் கொள்கிறது. இருவருக்கும் தண்டணை ப்ரஸ்தாபிக்கப்படுகிறது.
தண்டணை நிறைவேற்றல் ஒரு நாடக ஒத்திகை போல் எழுதப்படுகிறது.
முடிவில், மன இறுக்கத்திற்கு ஆளான பெண்ணாக அவளும், ஸ்ட்ரோக் நோய்ம்மையில் அவஸ்தையுறும் ஆணாக அவனும் காட்சி தருகின்றனர். பார்வையாளர் கை தட்டி ஆர்ப்பரிக்கிறார். அவள் ஸெபியாகவும், அவன் ஓபியமாகவும் உரையாடலைக் கட்டமைக்கின்றனர்.
நீதிபதி குறுக்கிடுகிரார். இல்லை இல்லை! இத்தண்டணை போதாது என உறக்க உரைக்கிறார். எனவே தண்டணை கூட்டப்படுகிறது அடுத்த காட்சியிலொரு குட்ட ரோக ஆணும் மனச் சிதைவுக்காளான பெண்னும் உயிர் பெறுகின்றனர். ஹ்யூரா மருந்தின் ஆளுமையில் ஆணும் வெராட்ரம் ஆல்ப பெண்ணும் உரையாடலைத்தொடர்கின்றனர்.
இல்லை! இல்லை ! இப்படியான சபித்தல் வேண்டாம். தண்டனையைக் குறையுங்கள் என சமூக ஆர்வலர் இருவருக்காகவும் வாதிடுகிறார். சிறுகதையின் முடிவை மாற்றி தங்கள் அத்து மீறலுக்காய் வருந்தும் தங்கள் சரிவை எண்ணி எண்னிக் குமுறும் காலி ப்ரோமேட்டம் ஆண் , இக்னேஷியா பெண்ணின் உரையாடல் தொடர்கிறது முடிவில் சிறுகதை இன்னும் சிறப்பாகச் செய்ய இயலவில்லை எனும் அலுப்பு மேலீட்டில் எல்லோரும் கலைகின்றனர்.
இச்சிறுகதையின் சாத்தியப்பாடு, மேம்பட்டிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியும்,மருத்துவக் களஞ்சிய குணபாடுகளின் நிபுணத்துவமும், சரிவுகளும் அத்து மீறல்களும் பின் குற்ற உணர்வும், தி.ஜாவின் பாத்திரங்களின் அல்லது ரேமண்ட் கார்வரின் பாத்திரங்களின் இருப்பு சார் ப்ரச்சினைகளை அவதானிக்கும் ஒரு படைப்பாளிக்கு சாத்தியப்படலாம்.
உண்மையாகவே, ஏதோ ஒரு சிறுகதைப் பட்டறையில் எழுதித் தயாரித்து இச் சிறுகதையை ஏதேனும் ஒரு இலக்கியப் பத்திரிகையில் வெளியிட முடியுமானால் எப்படிப்பட்ட எதிர்வினைகள் உருவாகும் என்ற யோசனையும் கூட எழத்தான் செய்கிறது.
ஹோமியோபதி மருந்துகளின் ஆளுமை பின்னனி, சிறுகதையின் அபத்த தளத்திற்கு வலுவூட்டும் எனவும் தோன்றுகிறது.
ஹோமியோபதி அறிவியலில் மருந்துகளுக்கிடையேயான பொருத்தப்பாடுகள் மீதான ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. மேதை ஆர்.பீ படேல் தான் இது குறித்த பயணத்தைத் தொடங்கியவர். அவரது லைக்கோபோடியம்(ஆண்) பல்சட்டில்லா(பெண்) பொருத்தப்பாடு ஏதோ ஜாதகக் கணிப்போ என்று கூறும் அளவிற்கு இந்தியத்தன்மை கொண்டதாக விளங்கியது. பின்னாட்களில் , குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் இவ்வாய்வு நிறைய நூல் வடிவங்கொண்டது. கடைசியாக வந்தது லிஸ் லேலரின் நூல்.
இலக்கியப் பரிச்சயமும், ஹோமியோ அறிவியல்-மருத்துவக் களஞ்சிய நுண்ணுணர்வும், சமகால வாழ்வின் கட்டுப்பாடுகள் தளர்ந்த சமூகவியல் புரிதலும் கொண்ட ஐவர் கூடுகின்றனர். ரேமண்ட் கார்வரைப்போல் அத்து மீறல்கள் கொண்ட ஆண் பெண் உறவுகளை ஹோமியோ மருத்துவக் களஞ்சியப் பின்னனியில் எழுத முற்படுகின்றனர். சமகால வாழ்வின் அமளி குறித்த புரிதல் ஐவரிடமும் இருக்கிறது. ஒருவர் நீதிபதியாகிறார். பிறிதொருவர் சமூக ஆர்வலராகிறார். இருவரில் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் தங்களை (அதுவும் திருமணமான) பாத்திரங்களாகக் கட்டமைத்துக் கொள்கின்றனர்.. ஐந்தாவது மனிதர் கதையை சுறுறுப்பாய் நடத்திச் செல்லும் பார்வையாளர் அவரது குறுக்கீடு அடிக்கடி இடையில் நிகழ்கிறது.
கதை தொடங்குகிறது. ஃப்ளூரிக் ஆசிட் ஆணும் ஹையோஸியாமஸ் பெண்ணும் இரவில் நள்ளிரவுக்குப்பின், உணர்வுகளின் உச்சத்தில் முக நூலின் உரையாடல் தளத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். கானொளிக் காட்சியும் இடம்பெறலாம் எனும் கருத்தை பார்வைவையாளர் குறுக்கிட்டுச் சொல்ல கானொளியும் தொடர்கிறது. உரையாடலின் உயிர்ப்பில் இருவரின் குடும்ப சூழல் மனப் பாதுகாப்பின்மையில் தொடங்கி, முக நூல் தரும் தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளை அலசி, பின் பாலியல் வழுவல்களில் சரிந்து, முழுமையான அத்துமீறலை நிறைவேற்றுகிறது.
பார்வையாளர் குறுக்கிட, தளம் வேறு மடைமாற்றம் கொள்கிறது. இருவருக்கும் தண்டணை ப்ரஸ்தாபிக்கப்படுகிறது.
தண்டணை நிறைவேற்றல் ஒரு நாடக ஒத்திகை போல் எழுதப்படுகிறது.
முடிவில், மன இறுக்கத்திற்கு ஆளான பெண்ணாக அவளும், ஸ்ட்ரோக் நோய்ம்மையில் அவஸ்தையுறும் ஆணாக அவனும் காட்சி தருகின்றனர். பார்வையாளர் கை தட்டி ஆர்ப்பரிக்கிறார். அவள் ஸெபியாகவும், அவன் ஓபியமாகவும் உரையாடலைக் கட்டமைக்கின்றனர்.
நீதிபதி குறுக்கிடுகிரார். இல்லை இல்லை! இத்தண்டணை போதாது என உறக்க உரைக்கிறார். எனவே தண்டணை கூட்டப்படுகிறது அடுத்த காட்சியிலொரு குட்ட ரோக ஆணும் மனச் சிதைவுக்காளான பெண்னும் உயிர் பெறுகின்றனர். ஹ்யூரா மருந்தின் ஆளுமையில் ஆணும் வெராட்ரம் ஆல்ப பெண்ணும் உரையாடலைத்தொடர்கின்றனர்.
இல்லை! இல்லை ! இப்படியான சபித்தல் வேண்டாம். தண்டனையைக் குறையுங்கள் என சமூக ஆர்வலர் இருவருக்காகவும் வாதிடுகிறார். சிறுகதையின் முடிவை மாற்றி தங்கள் அத்து மீறலுக்காய் வருந்தும் தங்கள் சரிவை எண்ணி எண்னிக் குமுறும் காலி ப்ரோமேட்டம் ஆண் , இக்னேஷியா பெண்ணின் உரையாடல் தொடர்கிறது முடிவில் சிறுகதை இன்னும் சிறப்பாகச் செய்ய இயலவில்லை எனும் அலுப்பு மேலீட்டில் எல்லோரும் கலைகின்றனர்.
இச்சிறுகதையின் சாத்தியப்பாடு, மேம்பட்டிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியும்,மருத்துவக் களஞ்சிய குணபாடுகளின் நிபுணத்துவமும், சரிவுகளும் அத்து மீறல்களும் பின் குற்ற உணர்வும், தி.ஜாவின் பாத்திரங்களின் அல்லது ரேமண்ட் கார்வரின் பாத்திரங்களின் இருப்பு சார் ப்ரச்சினைகளை அவதானிக்கும் ஒரு படைப்பாளிக்கு சாத்தியப்படலாம்.
உண்மையாகவே, ஏதோ ஒரு சிறுகதைப் பட்டறையில் எழுதித் தயாரித்து இச் சிறுகதையை ஏதேனும் ஒரு இலக்கியப் பத்திரிகையில் வெளியிட முடியுமானால் எப்படிப்பட்ட எதிர்வினைகள் உருவாகும் என்ற யோசனையும் கூட எழத்தான் செய்கிறது.
ஹோமியோபதி மருந்துகளின் ஆளுமை பின்னனி, சிறுகதையின் அபத்த தளத்திற்கு வலுவூட்டும் எனவும் தோன்றுகிறது.
No comments:
Post a Comment