காலம் காலமாய் வடக்குப் பார்த்து நின்றது வீடு!
சுலபமாய் எண்ண இயலாது
உள் வசித்த மனிதர்களை
ஒருவனுக்கு பத்து நிழல்கள்...
வேர் விட்டிருந்தன கால்கள்
நகரும் சாத்தியமற்று
அமாவாசையும் பௌர்ணமியும்
வித்தியாசமற்றுப் போனது
அவர்களின் மங்கிய பார்வையில்
சுலபமாய் எண்ண இயலாது
உள் வசித்த மனிதர்களை
ஒருவனுக்கு பத்து நிழல்கள்...
வேர் விட்டிருந்தன கால்கள்
நகரும் சாத்தியமற்று
அமாவாசையும் பௌர்ணமியும்
வித்தியாசமற்றுப் போனது
அவர்களின் மங்கிய பார்வையில்
கண்கள் இருந்தன கண் மணியும் இருந்தது!
மனிதக் குரல் கேட்டறியாக் காதுகள்
தலை சுற்றலை அறிவிக்க மட்டும்
பற்றாக்குறை நாட்களில் பவனி வருகையில்!
நீரறியாது, நிலமறியாது
வான் அறியாது வளியறியாது
ஒளியறியாது தீயறியாது சூடறியாது
வாழ்தலும் அறியாது
அந்த வடக்குப் பார்த்து நின்ற வீட்டில்
அத்துணை ஜீவன்களும் அவர்கள் நிழல்களும்
மனிதக் குரல் கேட்டறியாக் காதுகள்
தலை சுற்றலை அறிவிக்க மட்டும்
பற்றாக்குறை நாட்களில் பவனி வருகையில்!
நீரறியாது, நிலமறியாது
வான் அறியாது வளியறியாது
ஒளியறியாது தீயறியாது சூடறியாது
வாழ்தலும் அறியாது
அந்த வடக்குப் பார்த்து நின்ற வீட்டில்
அத்துணை ஜீவன்களும் அவர்கள் நிழல்களும்
No comments:
Post a Comment