Thursday, 25 December 2014

கார்லோ மாரட்டியின்” யூரோப்பாவும் காளையும் ஓவியம்“ 1680-85

யூரோப்பா என்றால் ஒரு கண்டம், பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு என்று மட்டும் பூகோளப் பாடப் புத்தகம் அறிமுகப் படுத்தியிருந்தது. அட்லாஸ் படங்களில் யூரோப்பாவை அடையாளம் காண சிறு வயதில் எளிதாக இருந்தது.

பின்னால் இத்தாலிய ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டதும், யூரோப்பாவின் பொருள் விஸ்தாரம் கண்டது.  ஃபோயனீஷிய அரசனின் மகள் பெயர் யூரோப்பா;  அவளைக் காதலித்த ஜூபிடர் அவளை வசீகரிக்க அழகிய வெள்ளைக் காளை வடிவமெடுத்தான்.  மலர் கொய்ய வரும் யூரோப்பாவுக்காக நந்தவனத்தில் காத்துக் கிடந்தான். காளையின் வெள்ளை நிறமும் மென்மையான குணமும் அவளை வசீகரித்தன.  கொம்புகளுக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்வித்தாள் . தன் முதுகில் ஏறி அமர வசதியாக அவள் முன் மண்டியிட்டது காளை.   யூரோப்பா ஏறி அமர்ந்தது தான் சமயம் என சிட்டாய்ப் பறந்தது காளை, கடலில் நீந்தி க்ரீட் நாட்டை அடைந்தது.  அங்கு வந்த பின்னரே தான் யார் என்பதை வெளிப்படுத்தியது ஜூபிடர்.  அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.  இது இத்தாலியப் புராணிகம் ஜூபிடருக்குப் பதிலாக ஒலிம்பிக் கடவுளான ஸீயஸின் பெயர் தரித்து வருகிறது கிரேக்கப் புராணிகம்.

நான் பார்க்கக் கிடைத்த  முதல் “யூரோப்பாவும் காளையும் ஓவியம்” கார்லோ மாரட்டியால் 1680-85 களில் வரையப்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.

 அசையாமல் சுவாதீனமாக மண்டியிட்டுப் படுத்திருக்கிறது காளை  அதன் மேல் மென்மையான முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் யூரோப்பா. அவள் கைகள் கொம்பில் சூட்டியிருக்கும் மலர்ச்சரங்களைப் பற்றியிருக்கின்றன. பயமேதும் முகத்தில் தென்படவில்லை.  பாதுகாப்பிற்காய் கொம்புகளை இறுகப் பற்றியதாகவும் இல்லை. கவனம் ஈர்க்கும் மிக அழகான வண்ன ஓவியம்

ஹோமியோபதி அறிவியலில் க்ரோகஸ் சட்டைவா (குங்குமப்பூ) மருத்துவ குணங்கள் படிக்கிறபோது ஒரு சிறு குறிப்பு என் பார்வையில் பட்டது.  ஜூபிடர் காளை தனது வாயிலிருந்து க்ரோக்கஸ் சட்டிவா தூளை யூரோப்பாவின் முகத்தில் ஊதித்தான் கவர்ந்து சென்றதாம்.
 
கிரீட் மொழியில் யூரோப்பாவுக்கு பசு என்றொரு  பொருளும் உண்டாம்.  பின்னர் ஜூபிடர் தனது காளை உருவை நட்சத்திரக் கூட்டங்களாகி வானில் ரிஷபமாகத் திரிய விட்டதாகவும் புராணிகம் கூறுகிறது.

மனித வளர்ச்சிப் பரிணாமத்தில் காளையும் பசுக்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதின் வெளிப்பாடுதான் யூரோப்பா கதை. நமது புராணம் காட்டும் ரிஷபங்களும் பசுக்களும் ருத்ரனும் மனதில் வருவது தவிர்க்க முடியாததாகிறது.
யூரோப்பா என்றால் ஒரு கண்டம், பல நாடுகளை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு என்று மட்டும் பூகோளப் பாடப் புத்தகம் அறிமுகப் படுத்தியிருந்தது. அட்லாஸ் படங்களில் யூரோப்பாவை அடையாளம் காண சிறு வயதில் எளிதாக இருந்தது.
பின்னால் இத்தாலிய ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டதும், யூரோப்பாவின் பொருள் விஸ்தாரம் கண்டது. ஃபோயனீஷிய அரசனின் மகள் பெயர் யூரோப்பா; அவளைக் காதலித்த ஜூபிடர் அவளை வசீகரிக்க அழகிய வெள்ளைக் காளை வடிவமெடுத்தான். மலர் கொய்ய வரும் யூரோப்பாவுக்காக நந்தவனத்தில் காத்துக் கிடந்தான். காளை...யின் வெள்ளை நிறமும் மென்மையான குணமும் அவளை வசீகரித்தன. கொம்புகளுக்கு மலர்க்கிரீடம் சூட்டி மகிழ்வித்தாள் . தன் முதுகில் ஏறி அமர வசதியாக அவள் முன் மண்டியிட்டது காளை. யூரோப்பா ஏறி அமர்ந்தது தான் சமயம் என சிட்டாய்ப் பறந்தது காளை, கடலில் நீந்தி க்ரீட் நாட்டை அடைந்தது. அங்கு வந்த பின்னரே தான் யார் என்பதை வெளிப்படுத்தியது ஜூபிடர். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இது இத்தாலியப் புராணிகம் ஜூபிடருக்குப் பதிலாக ஒலிம்பிக் கடவுளான ஸீயஸின் பெயர் தரித்து வருகிறது கிரேக்கப் புராணிகம்.
நான் பார்க்கக் கிடைத்த முதல் “யூரோப்பாவும் காளையும் ஓவியம்” கார்லோ மாரட்டியால் 1680-85 களில் வரையப்பட்டிருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.
அசையாமல் சுவாதீனமாக மண்டியிட்டுப் படுத்திருக்கிறது காளை அதன் மேல் மென்மையான முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் யூரோப்பா. அவள் கைகள் கொம்பில் சூட்டியிருக்கும் மலர்ச்சரங்களைப் பற்றியிருக்கின்றன. பயமேதும் முகத்தில் தென்படவில்லை. பாதுகாப்பிற்காய் கொம்புகளை இறுகப் பற்றியதாகவும் இல்லை. கவனம் ஈர்க்கும் மிக அழகான வண்ன ஓவியம்
ஹோமியோபதி அறிவியலில் க்ரோகஸ் சட்டைவா (குங்குமப்பூ) மருத்துவ குணங்கள் படிக்கிறபோது ஒரு சிறு குறிப்பு என் பார்வையில் பட்டது. ஜூபிடர் காளை தனது வாயிலிருந்து க்ரோக்கஸ் சட்டிவா தூளை யூரோப்பாவின் முகத்தில் ஊதித்தான் கவர்ந்து சென்றதாம்.
கிரீட் மொழியில் யூரோப்பாவுக்கு பசு என்றொரு பொருளும் உண்டாம். பின்னர் ஜூபிடர் தனது காளை உருவை நட்சத்திரக் கூட்டங்களாகி வானில் ரிஷபமாகத் திரிய விட்டதாகவும் புராணிகம் கூறுகிறது.
மனித வளர்ச்சிப் பரிணாமத்தில் காளையும் பசுக்களும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளதின் வெளிப்பாடுதான் யூரோப்பா கதை. நமது புராணம் காட்டும் ரிஷபங்களும் பசுக்களும் ருத்ரனும் மனதில் வருவது தவிர்க்க முடியாததாகிறது.

No comments:

Post a Comment