Saturday, 2 May 2015

MASSACRE OF THE INNOCENTS
மனித சிந்தனையில், அப்பாவி மக்களைக் கொல்லுதலுக்கெதிரான கலைஞர்களின் ஓவியப் பதிவுகள் பல நூற்றாண்டுகளாக எழுச்சி பெற்று வந்திருக்கிறது.
யேசு கிறிஸ்துவின் பிறப்போடு நடந்ததாகச் சொல்லப்படும் கொலைகளில் ஆரம்பித்து இக்கருத்தானது , வெவ்வேறு நூற்றாண்டுகளில் பல ஓவியர்களால் பதியப்பட்டிருக்கிறது.
...
நான் ஆறிந்தவரையில் ஜியாட்டோ டீ பாண்டன், பீடர் ப்ரூகல் தெ எல்டர் 1567, பீட்டர் பால் ரூபென்ஸ் 1608, கைடோ ரெனி 1611,குஸெப்பே மாரியா க்ரெஸ்பி, ஃப்ரான்காய்ஸ்ஜோசெஃப் நாவெஸ் 1817, என பலரது ஓவியங்கள் இணைய தளத்தில் காணக் கிடைக்கின்றன.
இவைகளை மட்டும் தெரிவு செய்து அப்பாவி மக்களைக் கொல்லுதலுக்கெதிரான கலைஞர்களின் கண்டனமாக உலகெங்கும் ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது அறச்செயல்பாடாக இருக்குமெனத் தோன்றுகிறது.
மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், அரசியல் காரணங்களால் நாளும் நடைபெறும் எண்ணற்ற படுகொலைகளுக்கு எதிரான முழக்கங்களின் ஆரம்பமாக இருக்கும்.
See More

No comments:

Post a Comment