Friday, 1 May 2015

என் மண் புழு

கடல் மணல் காலை அறுக்கவும்
காற்று புறந்தள்ளவும்
வெளி என்னை உமிழ்ந்த வேகமும்
ஒளி விரட்டுமென் நிழலும்
தூர விழுந்ததும், தாங்குவாரின்றி,...
மண்டியிட்டுத் தவழ்ந்து
மீண்டும் மண்ணுள் புக
நீண்டு சுருண்டு
நகர்கிறது
என் மண்புழு!

No comments:

Post a Comment