இன்று மாலை வாசிப்புக்கு திரு சுகுமாரன் மொழிபெயர்த்த இந்து மேனனின் ” சங்க பரிவார்” சிறு கதையை எடுத்துக்கொண்டோம். கவிஞர் சுகுமாரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்-இப்படியொரு அற்புதமான சிறுகதையை காண்பித்துக் கொடுத்ததற்கு.!
இந்தியப் பெருங்கண்டத்தையே ஆட்டிப் படைக்கிற வகுப்பு வாத வன்முறையைக் கருவாகக் கொண்டு துணிச்சலோடு சொல்லப்பட்டிருக்கிறது. கதை சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி வெகு நேரம் யோசிக்கவைப்பதாகவும் பன்முக வாசிப்புக்கும் இடமளிக்கிறது.
பெரும்பான்மை வகுப்புவாத வன்முறைக்கு ஆளாக நேரிடு...மோவென எனும் அச்சத்திலேயே -எண்ண சுழற்சியில் சிக்கிக் கொண்டு உழலும் ஒரு சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த நாவிதர் ஒருவரின் மனப்பதிவாக கதை நகர்கிறது.
இந்தியப் பெருங்கண்டத்தையே ஆட்டிப் படைக்கிற வகுப்பு வாத வன்முறையைக் கருவாகக் கொண்டு துணிச்சலோடு சொல்லப்பட்டிருக்கிறது. கதை சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி வெகு நேரம் யோசிக்கவைப்பதாகவும் பன்முக வாசிப்புக்கும் இடமளிக்கிறது.
பெரும்பான்மை வகுப்புவாத வன்முறைக்கு ஆளாக நேரிடு...மோவென எனும் அச்சத்திலேயே -எண்ண சுழற்சியில் சிக்கிக் கொண்டு உழலும் ஒரு சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த நாவிதர் ஒருவரின் மனப்பதிவாக கதை நகர்கிறது.
படைப்பாளியின் பெயர் மறந்து விட்டாலும், அந்த ருஷ்ய சிறுகதையின் தலைப்பும் மறந்துவிட்டாலும், அதன் பின்புலம் நன்கு நினைவில் இருக்கிறது. ஆக்கிரமிப்புப் படையின் கமாண்டர் உள்ளூர் சலூனில் முகச் சவரம் செய்து கொள்ள வரும் பின்புலம். கமாண்டரின் மனப்பிராந்தியும், எங்கே நாவிதன் இனத் துவேஷத்தில் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவானோ எனும் எண்ணச் சுழல் . நாவிதனின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குப் பயத்தை உண்டுபண்ணும்.
ஆக்கிரமிப்பும் இனத் துவேஷமும் அந்த ருஷ்யச் சிறுகதையில் உக்கிரம் கொள்ளும். இந்து மேனனின் சங்க பரிவாரில் வகுப்புவாதமே பிரதானம். சக மனிதனில் அவ நம்பிக்கை, வெறுப்பு, கொலை பயம், உளச் சிக்கல், எப்படியாவது தப்பித்து உயிர் பிழைத்துவிட முடியுமா எனும் ஏக்கம் எல்லாம் கதை முழுக்க. நாவிதனின் பின்புலம், அவன் கை கத்திரியின் மொழி, கேசங்களின் மொழி, மனிதத் தலைகளோடான மொழி என்று அற்புதமான பதிவு. இதுவரை படித்திராத எழுத்து.
இந்து மேனனின் இக்கதையைப் படிக்காமலிருந்தால் ஒரு மிகச் சிறந்த சிறு கதையை அறிந்துகொள்ளாமலேயே போயிருக்கும் வாய்ப்பிருக்கிறது.
கவிஞர் சுகுமாரனுக்கு மீண்டும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் -இப்படியொரு தத்ரூபமான, பின்னப்படாத மொழிபெயர்ப்புக்காக.!
ஆக்கிரமிப்பும் இனத் துவேஷமும் அந்த ருஷ்யச் சிறுகதையில் உக்கிரம் கொள்ளும். இந்து மேனனின் சங்க பரிவாரில் வகுப்புவாதமே பிரதானம். சக மனிதனில் அவ நம்பிக்கை, வெறுப்பு, கொலை பயம், உளச் சிக்கல், எப்படியாவது தப்பித்து உயிர் பிழைத்துவிட முடியுமா எனும் ஏக்கம் எல்லாம் கதை முழுக்க. நாவிதனின் பின்புலம், அவன் கை கத்திரியின் மொழி, கேசங்களின் மொழி, மனிதத் தலைகளோடான மொழி என்று அற்புதமான பதிவு. இதுவரை படித்திராத எழுத்து.
இந்து மேனனின் இக்கதையைப் படிக்காமலிருந்தால் ஒரு மிகச் சிறந்த சிறு கதையை அறிந்துகொள்ளாமலேயே போயிருக்கும் வாய்ப்பிருக்கிறது.
கவிஞர் சுகுமாரனுக்கு மீண்டும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் -இப்படியொரு தத்ரூபமான, பின்னப்படாத மொழிபெயர்ப்புக்காக.!
No comments:
Post a Comment