Friday, 1 May 2015

சுதந்திரமாய்ப் பறத்தல்

சுதந்திரமாய்ப் பறத்தல் இலக்கு மட்டுமே என வாளாயிருந்துவிடமுடியாது.
ஆரம்பம் எப்படியிருந்தாலும் இறக்கைகள் வீசிப் பறக்க வேண்டும்
இங்கே ஓவியத்தில் கலைஞனின் தரிசனத்தில் இலைகளுக்குக் கூட இலக்கை எய்துவிட முடிகிறது!
...
மரம் சுருங்கி தன் இருப்பை மூளியாக்கிக் கொண்டாலும் இலைகள் பறவைகளாய் இறக்கைகள் துளிர்க்க உயர உயரப் பறத்தல் கண்டு வெம்பவில்லை
பறவையாயிரு!
சுதந்திரமாயிரு!
சந்தோஷமாயிரு!
இலை வெளியிழந்து இடைவெளி காட்டி உருவிழந்து நிற்கும்
பின்னப்பட்ட மரம் கண்டு கலங்காதிரு!

Ravichandran Arumugam's photo.
 

No comments:

Post a Comment