Tuesday, 22 July 2014

மில்லிஃபோலியம்


மில்லிஃபோலியம் என்றால்” ஆயிரம் இலைகள்” என்று பொருள்..

கிரேக்க புராணத்தில் போரின்போது தளகர்த்தன் ஏகில்ஸ் தனது சேனை வீரர்களின் விழுப்பு ண்களிலிருந்து ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த இந்த இலைகளையே பயன்படுத்தியதாக ஐதீகம் அதன்படியே இதன் தாவரப்பெயர் ஏகில்ஸ் மில்லிஃபோலியம் என்று அழைக்கப்படுகிறது.

பளீரென்ற சிவப்பு ரத்தப் பெருக்கு உடலின் எந்த துவாரத்தினின்று வெளிப்பட்டாலும் இந்த இலைகளை மென்றால் ரத்தப்போக்கு நிற்கும்.

இதையே ஹோமியோபதியில் மருந்தாக மெய்ப்பித்திருக்கிறார்கள். தாய்த் திரவமாகவும் வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிறார்களின் மூக்கிலிருந்து ரத்தம் வடியும் ”எபிஸ்டாக்ஸிஸ்” நோயை உடனடியாக நலப்படுத்தும். பொது வழக்கில் இத்தாவரத்தை “யாரோ” என அழைக்கிறார்கள். வயலெட் நிற நட்சத்திரங்களாய் இதன் மலர்க்கொத்துக்கள் மனம் கவரும்.
 

No comments:

Post a Comment