- பிரிய நண்பா!
நீ பறந்திருக்கிறாயா
ஒரு நாளாவது?
இதயம் கழற்றி வைத்து
முதலை மேல் போனதுண்டா அக்கரைக்கு
பதினோறாம் வாய்ப்பாடு நடுவில் மறந்து
மூச்சு வாங்கியது நினைவில் வருகிறதா?
தீபாவளி ஓலை வெடி தெரு நாய் மேல் வீசி
கரவம் கட்டும் மிருகத்திடம் சிக்கினாயா?
பாட்டியின் சுருக்குப்பை சேமிப்பில்...
கைவைத்திருக்கிறாயா?
குடை ராட்டினம் சுற்றும் நீ
தொட்டி ராட்டினம் மேலேற அலறல் ஏன்?
என்னதான் செய்தாய் இத்தனை நாட்கள்?
உன் கவிதையை நீதான் சொல்லேன்!
நான் இழந்ததை நான் அறிய!
No comments:
Post a Comment