Tuesday, 22 July 2014

Are we sane?


நவீன வாழ்வு நம் எல்லோரையுமே துயரராக்கியிருக்கிறது. உடல் சார்ந்த குறிகளோ அல்லது மனம் சார்ந்த குறிகளோ எல்லோரையும் வதைக்கிறது. சந்தையும் விளம்பரங்கள் கட்டமைக்கும் நுகர்வுகளும் ஒவ்வொருவரையும் உபாதைக்குள்ளாக்குகிறது.
ஹோமியோபதி உடல் மனம் எனப் பிரித்துப் பார்க்க இயலாத தொடர்மமாகவேக் கருதுகிறது. ஒருவரது நலம் தோராயமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதுவரை விளக்கப்பட்ட” சந்தோஷம்” கருத்தாக்கத்தின் போதாமை நன்கு புரிகிறது.

நவீன ஹோமியோபதி உளவியலிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவுக்கூர்மை அதிகம்.

Are we sane? எனும் கேள்வியை நம்முள் ஆழ்ந்து எழுப்பிய உளவியலாளர் திரு எரிக் ஃப்ராம் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டியவர். Art of loving எனும் நூலின் மூலம் அவர் தொடங்கி வைத்திருக்கிற விவாதங்கள் நேசம் குறித்த ஒரு தனிமனிதப் புரிதலையோ அல்லது சமூகம் கட்டமைத்துள்ள அர்த்தத்தையோ அறிவார்ந்த தளத்தில் மடை மாற்றும் தன்மை கொண்டவை.

மார்க்ஸ் மனிதனை தன் இனத்துக்காக வாழ்பவன் எனும் பொருளில் விளக்க முற்படுவார். எரிக் ஃப்ராமின் நேசம் குறித்த விளக்கம் மார்க்ஸின் விளக்கத்தோடு இயைந்து செல்லக்கூடியதாகவே இருக்கிறது.

மனிதன் தன் இனத்தையே நேசிப்பவன் அதற்காகவே வாழ்பவன் அவனது உழைப்பும் படைப்பும் சமூக முழுமைக்குமானது. நேசம் என்பது, Respect, Regard,Attention, Care towards all என்பதாகவே சாராம்சத்தில் பொருள் கொள்ளும். ஏனைய விளக்கங்கள் எல்லாம் குறைபாடுடையன; குறுக்கல் வாதத் தன்மை கொண்டவை.

ஹோமியோபதி அறிவியலைக் கற்றவர்கள்/ கற்பவர்கள் எரிக் ஃப்ராமின் நூல்களைக் கற்பது மிகவும் அவசியம்.
ஏவுகணைத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் சர்வ சாதானண நிகழ்வுகளாகிவிட்ட இன்றைய சூழலில் Are we sane ? எனும் விவாதம் எல்லாத் தளங்களிலும் தொடங்கப் படவேண்டியதே!








No comments:

Post a Comment