- சுய முகம்-சுய மோகம்
கூப்பிட்ட சத்தம்
காதில் கேட்டது
திரும்பினால் ஆளில்லை
தெரு முக்கில் மறுபடி
திரும்பினால் ஆளில்லை
என்னைத் தவிர
...
அந்தத் தெருவில்
அந்த நேரம்
பிறிதொருவன் இல்லை
எப்போதும்
எங்கும் நானெ தான்
மருந்துக்குக் கூட
பிறத்தியான் இல்லை
தேனீக்களாய்
கூட்டமுண்டு
சந்தை போல்
பல முகங்கள்
எனினும்
எதிலும்
என் முகமே
பல்லாங்குழி ஆடி
துடைத்து எடுத்தது
தாயம் போட்டது
ஸிக்ஸர் அடித்தது
எல்லாம் நானெ
அடுத்தவன்
இல்லவே இல்லை
கூப்பிடும் சத்தம்
பெயர் சொல்லி
திரும்பினேன்
என் முகம் அணிந்த
வேற்றாள் எதிர் பட
என் பெயர் சொல்லி
அழைத்தேன்
என் முகம் திரும்பி
என்னைப் பாக்க…………….
அடுத்தவன் இல்லாமல்
அன்பே இல்லாமல்...............
Tuesday, 22 July 2014
சுய முகம்-சுய மோகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment