Tuesday, 22 July 2014

சந்தேகப் பேய்

சந்தேகம் ஒரு பேய் போல என்று சொல்வார்கள். ஒருவரைப் பற்றிக்கொண்டால் அவ்வளவு சீக்கிரம் விலகாது. யாருக்கு சந்தேகமோ அவர்களை வாட்டி வதைக்கும். மன நிம்மதியைக் கெடுக்கும், கற்பனைக்கெட்டியவரை, கதைப்பின்னல்களை உருவாக்கி உண்மையை மூளியாக்கும். இது ஒரு பீடிப்பு. மன நோய் முற்றிய நிலையில் காதில் தன்னோடு யாரோ உரையாடுவது போல் சத்தங்கள் கேட்பதாகச் சொல்வார்கள்
 நல்ல வேளையாக ஹோமியோபதியில் சந்தேகம் ஒரு மனக்குறி. ரெபர்டரியில் இரண்டு முக்கிய மருந்துகள் சந்தேகப்படுபவர்களின் அவஸ்தைக்குப் பயன்படும். ஒன்று ஹையோஸியாமஸ், மற்றொன்று லாக்கெஸிஸ். உயர்ந்த வீரியம் தேவைப்படும்
 யாரோ தன்னைப் பின் தொடர்வதுபோல் தோன்றுவது, எல்லோரும் தன்னைப் பற்றியே பேசுவது போல் எண்ணுவது காதில் ரகசியமான உரையாடல் கேட்பது, தன் வீட்டு மனிதர் தனக்கெதிராய் செயல்படுவது, போலிஸ் தன்னைக் கைது செய்ய வீட்டுக்கு வந்துவிட்டதாக நினைப்பது ஆகிய குறிகள் சந்தேகமும் பிறழ் காட்சிகளும் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும். காலி ப்ரொமாட்டம் மிகச் சிறந்த மருந்து.
சந்தேகம், பொறாமை, வெறுப்பு, அடிக்கடி சபித்தல், வக்கிர எண்ணங்கள் எல்லாம் ஒரு அடுக்கு வரிசை போல. நோய்மையின் தீவிர வெளிப்பாடு.
அடிக்கடி சபித்தலுக்கு அனகார்டியம் நன்றாக வேலை செய்யும் மருந்து.
வக்கிர எண்ணங்கள் மெர்க் சால் உயர்ந்த வீரியத்தில் பரிந்துரைக்கப் படுகிறது.
சந்தேகப் படுபவர்கள் அதிகார அடுக்குக்குகளில் உயர்ந்த நிலைகளில் இருப்பவரானால் அவர்களிடமிருந்து நோய் விலகுவதில்லை. சாதாரண மனிதர்கள் என்றால் மருந்துகள் செயல்பாடும், வாழ்க்கைச் சூழல் மாற்றமும் மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment