Tuesday, 22 July 2014

மறதி

  1. ஞாபக மறதி கடுமையாம்
    முனகினார் வந்தவர் கவலையோடு
    எதையெல்லாம் மறந்தாய் ?
    நாக்கை நீட்டிக் கேட்டார் மற்றவர்

    வீட்டிலக்கம் சொல்ல இயலாதா?
    சம்பள பில்லில் ஸ்டாம்ப் ஒட்டுமிடம்?
    வங்கிக் கணக்கு, பாஸ் புக் மீதம்?காதலியின் பழைய வாழ்விடம்?...

    எல்லாம் சுவற்றில் விறட்டி ஒட்டி
    பசுமையாய் ஞாபகத்தில் பதிவோடு
    மூப்பு உண்மைதான் ஆனாலும்
    நினைக்க விரும்பியது இருக்கிறது
    அல்லது மறக்கிறது முழுசாய்

    நேற்றுக் காலை தூங்கி எழுகையில்
    யார் முகத்தில் விழித்தேன்?
    நேற்று இரவு படித்ததின் சாராம்சம்
    காலை உண்ட உணவின் ருசி
    எப்போதோ நண்பனுக்கிட்ட ஷ்யூரிட்டி
    மின்வாரிய அட்டை வைத்த இடம்

    ஆச்சரியம் என்ன? மறத்தல் இயல்பே
    என்றார் மீளவும் தெளிவாய் அடுத்தவர்!
    எல்லோரும் கலைந்தனர் விரைவாய்
    சின்னத்திரை தொடர் நேரம் நெருங்கியதால்!

No comments:

Post a Comment