- காற்றின் கலகம்
இலையை அசைத்துப் போடும்
இழை ஊஞ்சலாடித்
தரையிறங்கும் புழு
இலக்கு மாறிட
சபித்தபடி நெளியும்
வழிப் போக்கன் தோளில்
சதா அலையும் காற்று...
போக்கிடம் மறந்து!
உள்ளிழுக்கும் சிறைக்குள்
நெஞ்சின் முஸ்தீபுகள்
தோற்றுப் போகும்
போன வேகம்
திரும்பும் வளி
குகை வாயில் கடந்து
விடுதலை தேடி!
ஒழுங்கின் எதிரி
ஒற்றைக் கண அமளி
காட்சிப்படும் சுளுவாய்
No comments:
Post a Comment