- நெடுகிலும் விதவை மரங்கள்
மனிதக் கோடரியின் கூர் நாவில்
வெட்டுண்டு வீழ்ந்து கிடந்தன
ஊரெங்கும் பாலையாய் பசுமையற!
அனுமன் மன்னிக்கவும் என்னை
நீயே உன் எஜமானனைக் காக்க
அவர்தம் பெண்டாட்டியைக் காக்க
வேரோடு மலையையும் பெயர்த்தாய்
அசோக வனமும் கொளுத்தினாய்!...
நீ குரங்கென்றே வைத்துக்கொள்வோம்!
கதை மாற்றம் அறிந்திலையோ?
மனிதன் குல்லாயைக் கழற்றி வீச
குரங்குகளும் வீசினது நேற்றையது
நீ பெயர்த்துப் போட்டதும் வனத்தை
வெட்டி வெட்டி சாய்க்கிறான் மனிதன்
அனுமனுக்கும் நமக்கும் உறவு சொன்ன
டார்வினும் எம்மை மன்னிக்கவும்!
No comments:
Post a Comment