Saturday, 15 February 2014


1 மன சாட்சியின் உறுத்தல்

மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின்

சில ஆண்டுகள் ஆங்கில மருத்துவ சிகிச்சை.

சிகிச்சையின் பால் அதிருப்தி தோன்றுகிறது

புழக்கத்தில் இருந்த மருந்துகள் பற்றி

தனக்கு அதிகம் தெரியவில்லை எனும் எண்ணம்

தொல்லை தரும் நோய்கள் குறித்துத்

தான் ஏதும் கற்பிக்கப்படவில்லை என வருத்தம் வேறு

அடிப்படையான ஆராய்ச்சிகள் இல்லாமல்

சிகிச்சை இனி இல்லை என உறுதி கொண்டார்.

அப்படி செய்தால் அது கொலைத் தொழிலுக்கு ஒப்பாகும்

எனக் கருதினார்.
2

மொழி பெயர்ப்புகள் 

திருமணம் ஆகிக் குழந்தைகள் இருந்தன.

குடும்பப் பொறுப்பை முன்னிட்டுப் பல

மொழிகளிலிருந்தும் மருத்துவ நூல்களை

மொழி பெயர்த்தார்.

பல மொழி நிபுணத்துவம் இருந்தது

ஆங்கிலம்,ஃப்ரென்ச் லத்தீன் கிரேக்கம் போன்ற

மொழிகளிலிருந்து மருத்துவ வரலாற்றையும்

கருத்தாக்கங்களையும் கசடறக் கற்றறிந்தார். 

3 கொய்னா சோதனை 

1790ல் மக் கெல்லனின் மருத்துவக் களஞ்சியத்தை

மொழி பெயர்க்கையில் ஒரு அடிக்குறிப்பு அவரது

கவனத்தை ஈர்த்தது.

மலேரியாக் காய்ச்சலுக்கு கொய்னாவே சிறந்த மருந்து

தனக்கே மலேரியாக் காய்ச்சல் அடிக்கடி வந்ததால்

தானெ 20 கிரெய்ன் மரப் பட்டையை

அரைத்து உட்கொண்டார். மக் கெல்லன் பரிந்துரைத்தபடி.

அரை மணியில் அவருக்கு மலேரியா சுரத்தையொத்த

குறிகள் தோன்றின. கடுங்குளிர், விட்டு விட்டு சுரம்

சுத்தியால் அடிப்பது போன்ற தலைவலி.

இப்பரிசோதனை சரித்திரப் புகழ் பெறலாயிற்று. 

 4 புதிய கொள்கை 

ஏமாற்றமும் குழப்பமும் உடனடி எதிர்வினைகளாயின.

இங்கிலாந்தில் கொய்னா மலேரியாவைப் போக்கும்.

ஆனால் ஜெர்மனியில் தோற்றுவிக்குமா?

மக் கெல்லனோ மகா மேதை

அவரது கருத்து பொய்யாகாது;

தனக்கு நேர்ந்ததோ கண்கண்ட உண்மை

காமம் செப்பாது கண்டது மொழிந்தால்-

அப்படியானால் கொய்னாவுக்கு மலேரியா நோய்க் குறிகளைத்

தோற்றுவிக்கவும் முடியும்

அக் குறிகளைக் குணப்படுத்தவும் முடியும்

இக் கண்டுபிடிப்பு இதுவரை மனிதகுலம் அறியாதது.

ஒரு சுருங்கிய வடிவில் 2000 ஆண்டுகளுக்கு முன்

ஹிப்பொக்கிரேட்டஸ் பேசியது-பின் வழக்கொழிந்து போனது

மீண்டும் அரியாசனத்தில் ஏற்றினார் இக்கொள்கையை ஹானெமன். 

5 ஸிமிலியா ஸிமிலிபஸ் க்யூரெண்டர் 

கொய்னாவை ஆரோக்கியமானவருக்குக் கொடுத்தால்

குறிகள் தோன்றும்.  அதே மருந்தை அக்குறிகள்

கொண்ட துயரருக்குக் கொடுத்தால் குறிகள் மறையும்

ஒத்ததை ஒத்தது நலமாக்கும்

குறிகளைத் தோற்றுவிக்கும் பண்பு இருந்தால் மட்டுமே

அவற்றைப் போக்கவும் முடியும்.

அப்போதுதான் ஹோமியோபதியில் மருந்தாகவும்

அங்கீகாரம் கிடைக்கும்.

இது ஹோமியோபதியின் அடிப்படை விதி.
 

6 மெய்ப்பித்தல் மனித உடலில் மட்டுமே 

அவரது இல்லத்தின் அருகில் முயல் பண்ணையொன்று.

தினமும் கடந்து செல்கையில் முயல்களுக்கு பெல்லடோன்னா

இலைகளைத் தீனியாய்த் தருவதை அடிக்கடி பார்த்திருந்தார்

முயல்கள் கொழுத்து செழிப்பாய் துள்ளியோடி

விளையாடுவதைப் பார்த்திருந்தார்.

தான் ஒரு நாள் ஒரு இலையைத் தின்றார்

10 நிமிடத்தில் அருக்குக் கிறக்கம் தோன்றியது

விண் விண்ணெண்று தலைவலி

சுரம் போன்ற சூடு, அதீத கோபம், கடும்

நோய்க் குறிகள் தோன்றுவதைக் கண்டார்.
பெல்லடோன்னா இலயைத் தின்னும்

முயல்கள் கொழுக்கின்றன, துள்ளுகின்றன

மனிதனின் அனுபவம் வேறு, தீவிரமான நோய்க்குறிகள் தாக்குதல்

எனவே மருந்துகள் மனிதனில் மட்டுமே மெய்ப்பிக்கபடுவதே சரி

விலங்குகளில் மெய்ப்பிப்பதை அங்கீகரிப்பதில்லை

ஹோமியோபதியில் இதுவும் அடிப்படையான விதி  

7 வீரியப் படுத்தப்பட்ட மருந்துகள் மட்டுமே
 
ஸ்கார்லெட் சுரம் கொள்ளை நோயாய்

ஐரோப்பாவெங்கும்

உடலெங்கும் சிவப்புத் திட்டுக்கள்

வீக்கம் பரவலாய்; உறுப்புக்கள் செயலிழந்த நிலையில்

பெல்லடோனாவில் இக் குறிகள் காணப் படுவதால்

பெர்யவர்களுக்கு தாய் திரவம் 10 சொட்டுக்கள்

குழந்தைகளுக்கு 5 சொட்டுக்கள்

எங்கும் சிகிச்சை வெற்றி, ஹானெமன் புகழ் ஐரோப்பவெங்கும் பரவியது.

எனினும் 20% துயரர்கள் மரிக்கின்றனர்.

ஹானெமன் மீண்டும் பரிசோதனை

பெல்லடோனா தாய் திரவத்தை 30ஆம் வீரியம் வரை

 நீர்க்கச் செய்கிறார்..  அதையே துயரர்களுக்குப் பரிந்துரைக்கையில்

இறப்பு விழுக்காடு மீளவும் குறைவதைக் காண்கின்றனர்.

1816 லிருந்து வீரியப்படுத்தப்பட்ட மருந்தையே

பயன்படுத்துகிறார்

இக்கொள்கையும் அடிப்படை விதியாகிறது  

 8 தூய மருத்துவக் களஞ்சியம் 

தன் வாழ் நாளில் 90 மருந்துகளுக்கும் மேலாக

தன் உடலிலும், மெய்பிப்பவர் குழுவிலும் நிரூபிக்கின்றார்.

தூய மருத்துவக் களஞ்சியம் பதிப்பிக்கிறார்

ஐரோப்பவெங்கும் புழங்கி வந்த மருந்துகள் பாட்டி வைத்தியம்

எனும் நி;லை தாண்டிவிஞ்ஞான ரீதியில் மெய்ப்பிக்கப்படுகின்றன

ஒவ்வொரு மருந்தும் தனித்தனியாய் மெய்ப்பிக்கப்பட்டு

குறிகள் தலையிலிருந்து கால் வரைத் தொகுக்கப் படுகின்றன’
இதுவே ஹானெமனின் தூய மெட்டீரியா மெடிக்கா! 

9 ஒரு சமயம் ஒரே மருந்து 

ஹோமியோபதி மருந்துகள் தனித்தன்மை பெற்றவை

ஆளுமையாகப் புரிதல் கொண்டவை

தனித்தனியாகவே நிரூபிக்கப்பட்டவை

எனவே கலக்கப்படுவதில்லை

அதாவது ஒரு சமயம் ஒரே மருந்து தாம் கொடுக்கப்பட வேண்டும்

ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் கலக்கப் படக் கூடாது.

இக்கொள்கை மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment