Tuesday, 11 February 2014

அந்த செவிட்டு ஞாயிறு

அந்த செவிட்டு ஞாயிறு
எதையும் காதில் வாஙிக்கொள்ளவில்லை
சூரியன் கிளை பரப்பியதும், எழுந்து
தான் எழுதிய உயிலைக் கிழவன்
பிள்ளைகளுக்கு வாசித்தான்
கீழ்க் குறிப்பிட்ட சொத்துக்கள் அனைத்தும்
சொல்லாமல் விடுபட்டனவும், எல்லாம்
என் மூன்று முட்டாள் பிள்ளைகளுக்கே
ஸ்விஸ் வங்கி சேமிப்பு
மூடர் தலைவனுக்கு
செவ்வாயில் வாங்கிய தோட்டம்
மூடர் செயலருக்கு
பாக்தாதின் குண்டு துளைக்கா மாளிகை
கடை மூடனுக்கு
உயிலின் மூலப்பிரதி ராஜபக்சே கையில்
நகல்,, கேரள ******* ராஜா நிலவரையில்.
எவ்வித துர் நபர் தூண்டலும் இல்லாமல்
சுயம்புவாய் நான் பதிந்தது
கையொப்பம்----- நர இந்த்ர பேடி
சாட்சி 1  பூரண மூடர்கோன்
சாட்சி2------சுயம்புலிங்கக்கோன்
******* இவ்விடத்தில் உங்கள் இஷ்டப்பெயரை இட்டு நிரப்ப
 உங்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment