Monday, 10 February 2014

சாலையோரத்தே அழுக்குத் தலையும்

சாலையோரத்தே அழுக்கு உடையும்
பரட்டைத் தலையுமாய்
தனக்குள் பேசியபடி
தனிமையில் சிரித்தும்,அழுதும்
சிலரைப் பார்த்ததுண்டு.
பழகிய படிமம் இது
மனத்தில் பத்திரமாய்
ரட்சிக்கப்பட்டு பொதிந்து கிடக்கிறது
பித்துக்குளி எனப் பிறரைப்
பல முறை ஒரே நாளில் பழிப்பதுண்டு
அவர் மனம் நோக
அவர் முகத்தெதிரேயும்
ஒரு நாளாவது அப்படியொருவன்
எனக்குள் உண்டா என
விசாரித்ததில்லை

No comments:

Post a Comment