Tuesday, 11 February 2014

அந்த மரத்தில் குடியிருந்தது ஒரு நீள மூக்கன்

அந்த மரத்தில் குடியிருந்தது
ஒரு நீள மூக்கன்
வெகு நாளாய்
ஆறுகள் வற்றுவதும்
மீன்கள் படும்பாடும்
பின் நீர் வரத்தும்
கரையோரத் தவளைகளின்
கொர்க் கொர்க் சத்தங்களுக்கும்
சாட்சியாய்  நீள மூக்கன்.
சுறுசுறுப்பு துறந்த சோர்வோடு
இரைதேடும் நாட்களிலும்
ஓரிரு இரைகள் கிடைத்தன
பட்டினி அறியாதபடி.
ஒற்றைக்காலில் நின்று
நித்தம் தவம் செய்யும்.
ஆதார் அட்டைக்காரன்
சென்ஸஸ் கணக்கெடுப்பாளன்
கடவுச்சீட்டுக்காரன்
குடி நீர் வரிக்காரன்
எவன் தொல்லையும் இல்லாதபடி..
சிறகுகளில் வண்ணங்கள்
கலைந்துவிடுமென்றோ
சதை இழப்பில் தளர்ந்து
மெலிகிறோமென்றோ
கழிவிரக்கம் கொள்வதில்லை
முதுமையோ,சாவோ
அதன் சிந்தையில் இல்லை
மரத்திற்கருகில் விசால்மாய்
இருப்பிடம்  எனது
சதா தொல்லைகள்
சிந்தையில்.
கூடுதலாய் இரைதேடி
சுவாசித்து, எதிர் நீச்சலிட்டு
கைகளை வீசிப்போட்டும்,
பறக்கவே இல்லை நான்
என் ஓரக்கண் பார்வையில்
நீளமூக்கன் உயரத்தில்
அதன் பறவைப் பார்வையில்
குள்ளமாய் நான்.…..
 

No comments:

Post a Comment