Monday, 10 February 2014

குடவோலைக் காலம்

கவிதை 3



குடவோலைக் காலம்
நெருக்கடி நிலை நீடிக்கிறது
அரைஞாண் கயிற்றில் தங்கக் காசுகள்
கோர்க்கக்  கேட்கும் வாழ்க்கை!
தாலிக்கு மட்டுமே தங்கம்!
சோழர்கள் எப்போதும் பெண்ணிய வாதிகள்
அரைஞாண் கயிற்றுக்கு எப்போது?
அடுத்த தேர்தலில் கட்டாயம்
தரப் போவதாய் சூளுரைகள்
கிடந்த நிலை ரங்கநாதரோ
எழுந்து வந்து க்யூவில் நிற்கிறார்!
ஆதார் கார்ட் கேட்டவன்
அகமதாபாத் மாற்றம்
ரேஷன் கார்ட் கேட்டவன்
ரேபரேலிக்கு மாற்றம்
அரைஞாண் கயிற்றுக்கு
அரை கிராமாவது தங்கம் வேனும்
இல்லாவிட்டால் நோ பட்டன்
ரெங்க நாதரின் கோஷம் கேட்கலையோ?

No comments:

Post a Comment