சதாசிவம் எனது நெருங்கிய நண்பர்
டீ.எஸ்.சதாசிவம் எனது நெருங்கிய நண்பர். பெங்களூரில் சமுதாய நாடகக் குழுவில் பங்கேற்றவர். தனது தொலைபேசித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றபின் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அவருக்கு மிகவும் பிடித்த, நாடக செயல்பாட்டிற்காக, ’பரீக்ஷா’ வைத் தெரிவு செய்தார். விஜய் டெண்டுல்கரின் ‘கமலா’, இ.பா.வின் மழை, பாதல் சர்க்காரின் தமிழ் மொழிபெயர்ப்பு நாடகமான ‘பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்’ மேலும் ப்ரெக்டின் ’வெள்ளை வட்டம்’ ஆகிய நாடகங்களில் திறம்பட நடித்தார். நாடகத் தயாரிப்பில், அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி, ஞாநியின் வலது கரமாகத் திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
எப்போதும் நல்ல திரைப்படத்திற்கான தேடல் அவரிடம் இருந்தது. மற்ற நண்பர்களுடன் இணந்து தமிழ் நாடு திரைப்படக் கழகத்தில் ஒரு இயக்கமாகவே இயங்கினார். மொழிபெயர்ப்பு அவரது விருப்பம். தனக்கு மிகவும் பரிச்சயமான, கன்னட இலக்கியத்தின், மிகப்பெரும் ஆளுமைகளான, திரு. யு.ஆர். அனந்தமூர்த்தி, சந்திர சேகர கம்பார், தேஜஸ்வீ ஆகியோரின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். சம்ஸ்காரா’ ஏற்கனவே ஆங்கில வழி வாசித்திருந்தாலும் தமிழில் படிக்கும்போதுதான், ப்ரனேஷாச்சார்யா, நாரணப்பா, சாந்த்னி ஆகியோரது இருத்தலியல் பின்புலம் தெளிவாகப் புரிந்தது. ப்ளேக் கொள்ளை நோய் ஒரு பாத்திரமாகவே வியாபித்திருப்பதன் புரிதல் கூடிற்று. சதாவுக்கு, மொழிபெயர்ப்புக்காக, விருது வழங்கி, சாகித்ய அகாடெமி தன்னை கௌரவப்படுத்திக்கொண்டது.
’திசையெட்டும்’ இதழில் அவரது ரசனையை வெளிப்படுத்தும் விதம் பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் சதா தந்திருந்தார். நாடகம், திரைப்படம்,இலக்கியம், கவிதை, மொழிபெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்டவர் சதா.
வெள்ளையான மனம், வெளிப்படையான பேச்சு, எந்த இலக்கியக் கூட்டத்திலும், அனேகமாக அவரது கூர்மையான கேள்விக்கணைகள் இருக்கும். சதாவின் மூலம் கிடைத்தது திரு. பாரதி மணியின் நட்பு.
40 வருட ஆஸ்த்மா தொந்தரவு, இடையறா உறிஞ்சல் மருந்துகள் அவரது கல்லீரலை செயலிழக்கச் செய்தன. ஸிர்ரோஸிஸ் நோயை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவர்கள் கைவிட்டனர். சதாவுக்கு, ஹோமியோபதியில் அதீத நம்பிக்கை. மூன்றரையாண்டுகள் சிரமங்கள் குறைந்து, செயல்பட்டார். ஒவ்வொரு மாதமும் அசோக் நகரில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை எங்களது இலவச சிகிச்சை முகாமுக்கு வந்து மருந்து வாங்கிச் செல்வார். சில சமயங்களில் பாரதி மணியும் கூட வருவார். பேசும்போது கூட மூச்சு வாங்கினாலும், இலக்கியம் குறித்து பேசியே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கம்.
ஒரு நாள் மாலை ஞாநியிடமிருந்து சதாவின் மறைவுச் செய்தி வந்தது. பரீக்க்ஷாவின் உறுப்பினர்களும் நண்பர்களுமான சந்த்ருவும், ஷண்முகமும், நானும் சென்று அஞ்சலி செலுத்தினோம். ஓராண்டில் அவரது மனைவியும் காலமானார். சதாவின் மகன்கள் சேகர், செழியன் மற்றும் பேரனோடும் எங்கள் நட்பு தொடர்கிறது. எங்கள் பேச்சிலும், வாசிப்பிலும் சதா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எப்போதும் நல்ல திரைப்படத்திற்கான தேடல் அவரிடம் இருந்தது. மற்ற நண்பர்களுடன் இணந்து தமிழ் நாடு திரைப்படக் கழகத்தில் ஒரு இயக்கமாகவே இயங்கினார். மொழிபெயர்ப்பு அவரது விருப்பம். தனக்கு மிகவும் பரிச்சயமான, கன்னட இலக்கியத்தின், மிகப்பெரும் ஆளுமைகளான, திரு. யு.ஆர். அனந்தமூர்த்தி, சந்திர சேகர கம்பார், தேஜஸ்வீ ஆகியோரின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார். சம்ஸ்காரா’ ஏற்கனவே ஆங்கில வழி வாசித்திருந்தாலும் தமிழில் படிக்கும்போதுதான், ப்ரனேஷாச்சார்யா, நாரணப்பா, சாந்த்னி ஆகியோரது இருத்தலியல் பின்புலம் தெளிவாகப் புரிந்தது. ப்ளேக் கொள்ளை நோய் ஒரு பாத்திரமாகவே வியாபித்திருப்பதன் புரிதல் கூடிற்று. சதாவுக்கு, மொழிபெயர்ப்புக்காக, விருது வழங்கி, சாகித்ய அகாடெமி தன்னை கௌரவப்படுத்திக்கொண்டது.
’திசையெட்டும்’ இதழில் அவரது ரசனையை வெளிப்படுத்தும் விதம் பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் சதா தந்திருந்தார். நாடகம், திரைப்படம்,இலக்கியம், கவிதை, மொழிபெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்டவர் சதா.
வெள்ளையான மனம், வெளிப்படையான பேச்சு, எந்த இலக்கியக் கூட்டத்திலும், அனேகமாக அவரது கூர்மையான கேள்விக்கணைகள் இருக்கும். சதாவின் மூலம் கிடைத்தது திரு. பாரதி மணியின் நட்பு.
40 வருட ஆஸ்த்மா தொந்தரவு, இடையறா உறிஞ்சல் மருந்துகள் அவரது கல்லீரலை செயலிழக்கச் செய்தன. ஸிர்ரோஸிஸ் நோயை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவர்கள் கைவிட்டனர். சதாவுக்கு, ஹோமியோபதியில் அதீத நம்பிக்கை. மூன்றரையாண்டுகள் சிரமங்கள் குறைந்து, செயல்பட்டார். ஒவ்வொரு மாதமும் அசோக் நகரில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை எங்களது இலவச சிகிச்சை முகாமுக்கு வந்து மருந்து வாங்கிச் செல்வார். சில சமயங்களில் பாரதி மணியும் கூட வருவார். பேசும்போது கூட மூச்சு வாங்கினாலும், இலக்கியம் குறித்து பேசியே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கம்.
ஒரு நாள் மாலை ஞாநியிடமிருந்து சதாவின் மறைவுச் செய்தி வந்தது. பரீக்க்ஷாவின் உறுப்பினர்களும் நண்பர்களுமான சந்த்ருவும், ஷண்முகமும், நானும் சென்று அஞ்சலி செலுத்தினோம். ஓராண்டில் அவரது மனைவியும் காலமானார். சதாவின் மகன்கள் சேகர், செழியன் மற்றும் பேரனோடும் எங்கள் நட்பு தொடர்கிறது. எங்கள் பேச்சிலும், வாசிப்பிலும் சதா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment