அந்த ஊரின் மையத்தில்
கிடந்த கேணியிலிருந்து
புறப்படும் பாம்புப் பாதைகள்
ஒன்றுக்கொன்று இணைய முடியா
இணைகோடுகளாய்
எதன் நிமித்தம் இவை இப்படி?
எவர் நாவும் நீண்டதில்லை கேள்விகேட்டு.
ஊரின் புறத்தே புளியம் விதைகளாய்
தவளைகள் எப்போதும் இரைந்தபடி
ஒன்றையும் விட்டதில்லை
பேசிப் பேசித் தீர்த்துவிடும்!
குல்லாய்தான் வேண்டுமென்று…
காவிக் கத்தியும் குங்குமமும் போதுமென்று
குன்றிமணி இரட்டை வண்ண
ராஜ பாட்டையில்
சுகமாய் தாம்பூலம் பூட்டி
ஜல் ஜல் என சலங்கை ஓசையில்
பயணம் செய்யும் தவளைகள்.
வான வில்லின் நிறப் பிரிகையில்
தன் முகம் காண விழையும்.
ஏனோ கானல் நீர் கண்டு
கரைந்தபடி உலவித் திரியும்.
உண்டும் உடுத்தியும்
பெண்டு சுகத்திலும், பகலிரவென.
சூரியன் உதித்தும், மறைந்தும்.
ஆனாலும் அவை விலகியதில்லை
தம் தூசிப் பாதை விட்டு
பாசிக் குளங்கள் எங்கும்
பரவி நிலைக்கும் விதம் விதமாய்
மேலைக் காற்றில் முதுகு காட்டி
இதமாய்ச் சொறிந்து
காத்திருக்கும் மலட்டுத் தவளைகள்!
கிடந்த கேணியிலிருந்து
புறப்படும் பாம்புப் பாதைகள்
ஒன்றுக்கொன்று இணைய முடியா
இணைகோடுகளாய்
எதன் நிமித்தம் இவை இப்படி?
எவர் நாவும் நீண்டதில்லை கேள்விகேட்டு.
ஊரின் புறத்தே புளியம் விதைகளாய்
தவளைகள் எப்போதும் இரைந்தபடி
ஒன்றையும் விட்டதில்லை
பேசிப் பேசித் தீர்த்துவிடும்!
குல்லாய்தான் வேண்டுமென்று…
காவிக் கத்தியும் குங்குமமும் போதுமென்று
குன்றிமணி இரட்டை வண்ண
ராஜ பாட்டையில்
சுகமாய் தாம்பூலம் பூட்டி
ஜல் ஜல் என சலங்கை ஓசையில்
பயணம் செய்யும் தவளைகள்.
வான வில்லின் நிறப் பிரிகையில்
தன் முகம் காண விழையும்.
ஏனோ கானல் நீர் கண்டு
கரைந்தபடி உலவித் திரியும்.
உண்டும் உடுத்தியும்
பெண்டு சுகத்திலும், பகலிரவென.
சூரியன் உதித்தும், மறைந்தும்.
ஆனாலும் அவை விலகியதில்லை
தம் தூசிப் பாதை விட்டு
பாசிக் குளங்கள் எங்கும்
பரவி நிலைக்கும் விதம் விதமாய்
மேலைக் காற்றில் முதுகு காட்டி
இதமாய்ச் சொறிந்து
காத்திருக்கும் மலட்டுத் தவளைகள்!
No comments:
Post a Comment