எட்டயபுரத்திலிருந்து விஷ்ணுபுரம் வரை
எட்டயபுரத்திலிருந்து-----விஷ்னுபுரம் வரை!
ஆரம்பத்தில் எட்டயபுரத்திற்கு அருகிலேயே கைலாசபுரம் இருந்தது. மின்னலைச் சிக்கலெடுத்து உதறுகிற கடவுள் வர்க்கமும் , இனிக்கிற பிரியமான ஞானச் சரக்குகளை, வேற்று அங்காடிகளிலும் விநியோகித்திருந்தது.
அழகிய நம்பியாபிள்ளை போய், பரமசிவம் பிள்ளை என எல்லாம்- நேர் அனுபவ-அனுபவ சூன்யக் கருத்துக்கள் எல்லாம்- நான், என்னுடைய - என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் ...கட்டிடம் எழுப்ப ஆரம்பித்தது.கைலாசபுரத்து மருத மரம் நிழல் கொடுத்தது.மரம் பூத்துக், காய்த்துப், பழுத்தது. வரட்சியும் வரத்தான் செய்தது; வீடு ஒத்திக்கு. விட்டமற்றுப்போனால் வீடும் வெளியாகியது. மனற்கூண்டில், மணல் விரைவாய் சரிகையில், கடைசிப் பொடி மணல் மிகவிரைவாய்....கங்கையின் வெள்ளம் போல் காலம் என்ற ஜீவ நதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது எனும் யதார்த்தத்தோற்றம், பின்னால், நான் ஓடினால் காலம் ஓடும், நான் அற்றால் காலம் அற்றுப்போகும் ; காலம் ஒரு கயிற்றரவு ! “ என ஞானப் புரிதலாயிற்று.
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய்தாமோ? காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? என்ற எட்டயபுரத்துக் கேள்விகள், கைலாசபுரத்தில் புதுமைப்பித்தனின் வீட்டுச் சுவற்றில் பட்டு எதிரொலிக்கவே செய்தது!
பின்னால் ’ பள்ளிகொண்டபுரம் “ வரலாறு பிரமிக்க வைத்தது. அனுபவச் சரக்கு தான். கொஞ்சம் யதார்த்தத் தளத்தில் மனம் புரிதலை நிரப்பிக்கொண்டது. பிறிதொரு அங்காடியில்” கபாடபுரம்”, வரலாறு, விற்பனை செய்யப்பட்டது. பொன்னும், மணியும், புரவியும், தேரும் என கற்பனை விண்ணைத்தொட்டது.
கற்பனைகள் நொறுங்கி, அதிகாரம், கழுத்தை நெரிக்கையில் புரிதலை, கற்பனைகளிலிருந்து விடுவித்து,” தருமபுரம்” தேங்கிபோன விஷயத்தைச் சூசகமாகச் சொன்னார் ஓ.வி. விஜயன். பின்னால் ”பார்வதிபுரம்” வந்தது. சமூகப் பிரஞையின் தீவிர பிரதிபலிப்பாக, மனிதரின் இழிவிற்கு, அவலத்தின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும், நம்பிக்கைகள் அதிகாரம் தாங்கியாய், குவிமையம் கொள்ளும் சாதீயம், மதம், கோவில் எதுவாயினும், அவற்றைக் கெல்லி எறியும் அவசியயத்தை உணர்த்தியது பார்வதிபுரம்.
இந்தியப் பழம்பெருமை சனாதனங்கள் சினுங்கின. எதிர்மறைப் பாடத்திட்டங்களின் அவசியம் சில முகாம்களில் உணரப்பட்டன.மீள் வாசிப்பாய், கற்பனையாய், விஷ்னுபுரம் வந்தது. பெருந்தொகுப்பு. கருத்துக்களின் அணிவகுப்பாய். மீண்டும், தளகர்த்தர்கள். பிரதம மந்திரிகள், புரவிகள், யானைகள், சிற்பிகள், நிமித்திகர்கள்.,கணிகையர்கள். வேதாந்திகள் சேர்ந்து விஷ்னுபுரம் சமைத்தனர்.
எத்தனை “புரங்கள்”? நமது மனங்களில் கூட்டுப்பதிவாய் இவ்விலக்கியங்கள் செயல் படுகின்றன என்று சொல்லமுடியுமா? இலக்கிய வெளி வேறு, சமூகவியல் வெளி வேறு என்று சமாதானம் நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமோ எனும் கேள்வி உதிப்பதைத் தவிர்க்கமுடியவில்லை. இருப்பினும், இன்னொரு முறை எட்டய புரத்திலிருந்து, விஷ்னுபுரம் வரை பயணிக்க மனம் விழைகிறது. இடப்படும் இலக்கிய வெளியைத்துழாவித் துழாவி என்ன சேகரம் ஆகிறது என்று பார்க்கத்தான்
ஆரம்பத்தில் எட்டயபுரத்திற்கு அருகிலேயே கைலாசபுரம் இருந்தது. மின்னலைச் சிக்கலெடுத்து உதறுகிற கடவுள் வர்க்கமும் , இனிக்கிற பிரியமான ஞானச் சரக்குகளை, வேற்று அங்காடிகளிலும் விநியோகித்திருந்தது.
அழகிய நம்பியாபிள்ளை போய், பரமசிவம் பிள்ளை என எல்லாம்- நேர் அனுபவ-அனுபவ சூன்யக் கருத்துக்கள் எல்லாம்- நான், என்னுடைய - என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் ...கட்டிடம் எழுப்ப ஆரம்பித்தது.கைலாசபுரத்து மருத மரம் நிழல் கொடுத்தது.மரம் பூத்துக், காய்த்துப், பழுத்தது. வரட்சியும் வரத்தான் செய்தது; வீடு ஒத்திக்கு. விட்டமற்றுப்போனால் வீடும் வெளியாகியது. மனற்கூண்டில், மணல் விரைவாய் சரிகையில், கடைசிப் பொடி மணல் மிகவிரைவாய்....கங்கையின் வெள்ளம் போல் காலம் என்ற ஜீவ நதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது எனும் யதார்த்தத்தோற்றம், பின்னால், நான் ஓடினால் காலம் ஓடும், நான் அற்றால் காலம் அற்றுப்போகும் ; காலம் ஒரு கயிற்றரவு ! “ என ஞானப் புரிதலாயிற்று.
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய்தாமோ? காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? என்ற எட்டயபுரத்துக் கேள்விகள், கைலாசபுரத்தில் புதுமைப்பித்தனின் வீட்டுச் சுவற்றில் பட்டு எதிரொலிக்கவே செய்தது!
பின்னால் ’ பள்ளிகொண்டபுரம் “ வரலாறு பிரமிக்க வைத்தது. அனுபவச் சரக்கு தான். கொஞ்சம் யதார்த்தத் தளத்தில் மனம் புரிதலை நிரப்பிக்கொண்டது. பிறிதொரு அங்காடியில்” கபாடபுரம்”, வரலாறு, விற்பனை செய்யப்பட்டது. பொன்னும், மணியும், புரவியும், தேரும் என கற்பனை விண்ணைத்தொட்டது.
கற்பனைகள் நொறுங்கி, அதிகாரம், கழுத்தை நெரிக்கையில் புரிதலை, கற்பனைகளிலிருந்து விடுவித்து,” தருமபுரம்” தேங்கிபோன விஷயத்தைச் சூசகமாகச் சொன்னார் ஓ.வி. விஜயன். பின்னால் ”பார்வதிபுரம்” வந்தது. சமூகப் பிரஞையின் தீவிர பிரதிபலிப்பாக, மனிதரின் இழிவிற்கு, அவலத்தின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும், நம்பிக்கைகள் அதிகாரம் தாங்கியாய், குவிமையம் கொள்ளும் சாதீயம், மதம், கோவில் எதுவாயினும், அவற்றைக் கெல்லி எறியும் அவசியயத்தை உணர்த்தியது பார்வதிபுரம்.
இந்தியப் பழம்பெருமை சனாதனங்கள் சினுங்கின. எதிர்மறைப் பாடத்திட்டங்களின் அவசியம் சில முகாம்களில் உணரப்பட்டன.மீள் வாசிப்பாய், கற்பனையாய், விஷ்னுபுரம் வந்தது. பெருந்தொகுப்பு. கருத்துக்களின் அணிவகுப்பாய். மீண்டும், தளகர்த்தர்கள். பிரதம மந்திரிகள், புரவிகள், யானைகள், சிற்பிகள், நிமித்திகர்கள்.,கணிகையர்கள். வேதாந்திகள் சேர்ந்து விஷ்னுபுரம் சமைத்தனர்.
எத்தனை “புரங்கள்”? நமது மனங்களில் கூட்டுப்பதிவாய் இவ்விலக்கியங்கள் செயல் படுகின்றன என்று சொல்லமுடியுமா? இலக்கிய வெளி வேறு, சமூகவியல் வெளி வேறு என்று சமாதானம் நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமோ எனும் கேள்வி உதிப்பதைத் தவிர்க்கமுடியவில்லை. இருப்பினும், இன்னொரு முறை எட்டய புரத்திலிருந்து, விஷ்னுபுரம் வரை பயணிக்க மனம் விழைகிறது. இடப்படும் இலக்கிய வெளியைத்துழாவித் துழாவி என்ன சேகரம் ஆகிறது என்று பார்க்கத்தான்
No comments:
Post a Comment