அம்மாவின் தலையில் கிரீடம் இல்லை
குறை போக்க ஓராயிரம் சவுரிகள் இருந்தன
எல்லாம் பான்ஸாய் தான்
குட்டையாய், அடர்த்தியாய்
ஒன்றைக் கழட்டிப்போட்டு, பிரிதொன்றை
முடிவதில் வல்லவள் அம்மா
அடுத்ததன் ஆயுள் குறைகாலம் என்பதை
சவுரிகள் அறிவதில்லை
அன்று எது தலையில் இருக்கிறதோ
அது தன்னை கிரீடம் என்றே எண்ணிக்கொள்ளும்
பாவம் அந்த சவுரிகள்
நிச்சயமற்றதை அறிந்ததுமில்லை,ஏற்றதுமில்லை
வடக்கேபோனால் ஒன்று
உள்ளூரில் ஒன்று
இளைப்பாறும் எஸ்டேட்டில் வேறு
அலுவலின்போது பிறிதொன்று
அசத்தலாய் இருக்கும் வரை
ஆயுள் காலம் நீட்டிக்கும்
அடர்த்தி குறைந்தவை
ம்யூசியத்தில்
கிளியோபாட்ரா மாடத்தின்
அண்மைக் கூண்டில் பத்திரமாய்
ஒவ்வொன்றின் வரலாறும் ஆவணப்பதிவில்
நிதி குறைந்தால், பொற்குவை தரக்
கேட்டதில்லை அம்மா!
பதிலாய், மாற்றுத் திட்டமென
ஏலம் விடுவாள் சவுரிகளை
கோடிகோடியாய்
கொட்டிகொடுத்து
ஏலம் கேட்க, மண்புழுக்களும் அணிவகுக்கும்
விறைத்து நின்று சல்யூட் போட்டு
மரியாதை செய்வாள் அம்மா
ஊர்ந்து ஊர்ந்து மகிழ்ச்சியில்
ஒலி எழுப்பிக் களிப்புறும்
ஒரு நாள் சவுரி அவழ்ந்துவிட
காவல் நாயொன்று சடுதியில்
கவ்விக்கொண்டு வந்ததது
மண்புழுக்கள் பார்த்திருந்தும்
சிரிக்க மறந்து விரைவாய்க் கடந்தன
அம்மாவின் தலைக் குறைவைக்
கண்ட புழுக்கள்
ஆணை பெற்றன , நாடுகடத்தப்பட
பாவம் அந்த சவுரிகள்!
பாவன் அந்தப் புழுக்கள்!!
அறிந்ததுமில்லை, ஏற்றதுமில்லை
தங்களின் நிச்சயமின்மையை!.
குறை போக்க ஓராயிரம் சவுரிகள் இருந்தன
எல்லாம் பான்ஸாய் தான்
குட்டையாய், அடர்த்தியாய்
ஒன்றைக் கழட்டிப்போட்டு, பிரிதொன்றை
முடிவதில் வல்லவள் அம்மா
அடுத்ததன் ஆயுள் குறைகாலம் என்பதை
சவுரிகள் அறிவதில்லை
அன்று எது தலையில் இருக்கிறதோ
அது தன்னை கிரீடம் என்றே எண்ணிக்கொள்ளும்
பாவம் அந்த சவுரிகள்
நிச்சயமற்றதை அறிந்ததுமில்லை,ஏற்றதுமில்லை
வடக்கேபோனால் ஒன்று
உள்ளூரில் ஒன்று
இளைப்பாறும் எஸ்டேட்டில் வேறு
அலுவலின்போது பிறிதொன்று
அசத்தலாய் இருக்கும் வரை
ஆயுள் காலம் நீட்டிக்கும்
அடர்த்தி குறைந்தவை
ம்யூசியத்தில்
கிளியோபாட்ரா மாடத்தின்
அண்மைக் கூண்டில் பத்திரமாய்
ஒவ்வொன்றின் வரலாறும் ஆவணப்பதிவில்
நிதி குறைந்தால், பொற்குவை தரக்
கேட்டதில்லை அம்மா!
பதிலாய், மாற்றுத் திட்டமென
ஏலம் விடுவாள் சவுரிகளை
கோடிகோடியாய்
கொட்டிகொடுத்து
ஏலம் கேட்க, மண்புழுக்களும் அணிவகுக்கும்
விறைத்து நின்று சல்யூட் போட்டு
மரியாதை செய்வாள் அம்மா
ஊர்ந்து ஊர்ந்து மகிழ்ச்சியில்
ஒலி எழுப்பிக் களிப்புறும்
ஒரு நாள் சவுரி அவழ்ந்துவிட
காவல் நாயொன்று சடுதியில்
கவ்விக்கொண்டு வந்ததது
மண்புழுக்கள் பார்த்திருந்தும்
சிரிக்க மறந்து விரைவாய்க் கடந்தன
அம்மாவின் தலைக் குறைவைக்
கண்ட புழுக்கள்
ஆணை பெற்றன , நாடுகடத்தப்பட
பாவம் அந்த சவுரிகள்!
பாவன் அந்தப் புழுக்கள்!!
அறிந்ததுமில்லை, ஏற்றதுமில்லை
தங்களின் நிச்சயமின்மையை!.
No comments:
Post a Comment