ஏன் இந்த பயம்?
உண்மை, சூரியனைப்போல
சுட்டுவிடும் என்றா?
வர்ஷிக்கும் மழைக்குப் பயம் உண்டா?
தாம் வீழும் இடம் குறித்து
நெடிதுயரும் குன்றறியுமா பயம்
வெடிவைத்துத் தகர்க்கப்படலாம் என!
பயமின்றி வாழ்தல் அரிதா?
பூவில் தேன் அருந்தும் வண்டுணருமோ
தான் சிக்கிக் கொள்வோம் என.
மனிதன் பயப்பட சபிக்கப்பட்டவனா?
சபித்தவர் யார்?
சௌகர்ய சல்லாத்துணி
திரையிடுமா உண்மை
ஒளி முகத்தை
மூடி மறைத்தாலும்
பயம் நீங்குமா?
நகமென சுருண்டு நீளுமே
தற்காப்பு, தலைச் சுருக்காகுமோ?
மரப்பட்டை உறை நீக்கி
காட்டிவிடலாம் தானே?
உண்மைச் சூரியனை!
உண்மை, சூரியனைப்போல
சுட்டுவிடும் என்றா?
வர்ஷிக்கும் மழைக்குப் பயம் உண்டா?
தாம் வீழும் இடம் குறித்து
நெடிதுயரும் குன்றறியுமா பயம்
வெடிவைத்துத் தகர்க்கப்படலாம் என!
பயமின்றி வாழ்தல் அரிதா?
பூவில் தேன் அருந்தும் வண்டுணருமோ
தான் சிக்கிக் கொள்வோம் என.
மனிதன் பயப்பட சபிக்கப்பட்டவனா?
சபித்தவர் யார்?
சௌகர்ய சல்லாத்துணி
திரையிடுமா உண்மை
ஒளி முகத்தை
மூடி மறைத்தாலும்
பயம் நீங்குமா?
நகமென சுருண்டு நீளுமே
தற்காப்பு, தலைச் சுருக்காகுமோ?
மரப்பட்டை உறை நீக்கி
காட்டிவிடலாம் தானே?
உண்மைச் சூரியனை!
No comments:
Post a Comment