Wednesday, 14 May 2014

கொல் அல்லது கொல்லப்படுவாய்

உன் வெள்ளை அணுக்களுக்கு
 நன்றி சொல் இது நாள் வரை
 உன்னைக் கவசமாய் காத்ததற்கு

 குரல் வளைப்பெட்டியின் ஸ்ருதி
 கக்குவானில் அடைபடக் கணைக்கிறாய்
 உன் ஆரவாரத்தின் சீவாளியை
 துருத்தியாய் மாற்றி ஒலிக்கிறாய்

 என்ன மந்திர உச்சாடனம் தினமும்
சாப அகழியில் யாரைத் தள்ளிவிட
 குருட்டு நிறங்கள் வாரி இறைத்து
 தப்பிக்கலாமென தந்திரம் போடுகிறாய்

 இஸ்திரி மடிப்பின் ஒழுங்கில்
 உடல் நுழைத்து உருப்பெருக்கும்
 உன் ஆன்மா அரை ஜீபி தரவுகள்
 தருமா தந்திரங்கள் கழித்தால்?

இட பிங்கள மூச்சடக்கலில்
 தைமஸ் பான்ஸாய் துளிர்த்ததா?
யோக யாக வாணவெடிகள்
 டெஸிபல் வலுவில் சிதைந்ததோ?

அகங்கார ஒடுக்கலை உபதேசித்தே
 ஆக்கிரமிப்பின் விஸதாரம் நாளும்
 கொல் அல்லது கொல்லப்படுவாய்
 உன் மந்திர அஸ்திரம் இவைதாமே?

No comments:

Post a Comment