காதில் ஈயம் காய்ச்சி
அட்சரம் மாறா அரசியல் கூட்டி
ஊற்றிவிட்டார் திருவுரு!
காதில் இரைச்சல் எப்போதும்
ஒரே சமயம் இளவல்களின் அலறல்
பெரிசுகளின் அறைகூவல்!
சவ்வு கிழிந்த நேரம் சதா
சீழ் வடியுது கங்கை நெடுக!...
சிவன் சீவனற்றுப் போக
கடவுளையும் விசாரணை நடத்திய
தாடிக்காரர் பூமியெங்கும்
சுய மரியாதை பட்டங்கள்
பறக்குது வால் அறுந்து
தலை கீழாய் இலக்கற்று.
அட்சரம் மாறா அரசியல் கூட்டி
ஊற்றிவிட்டார் திருவுரு!
காதில் இரைச்சல் எப்போதும்
ஒரே சமயம் இளவல்களின் அலறல்
பெரிசுகளின் அறைகூவல்!
சவ்வு கிழிந்த நேரம் சதா
சீழ் வடியுது கங்கை நெடுக!...
சிவன் சீவனற்றுப் போக
கடவுளையும் விசாரணை நடத்திய
தாடிக்காரர் பூமியெங்கும்
சுய மரியாதை பட்டங்கள்
பறக்குது வால் அறுந்து
தலை கீழாய் இலக்கற்று.
No comments:
Post a Comment