Wednesday, 28 May 2014

பெட்டிக்கடை நாராயணனைத் தேடிப்போனேன்

  1. பெட்டிக்கடை
    நாராயணணை
    விட்ட இடத்தில்
    தேடிப்போனேன்
    குறு நடையாய்
    நீளக் கால் போட்டு
    ஓட்டமும் நடையுமாய்
    சந்து பொந்துகளில்
    எங்கும் தேடினேன்
    அவன் அகப்படவில்லை...
    கால தூரத்தில் அவனுக்கு
    தாடி நரைத்திருக்கலாம்
    மச்சம் முகத்தில் புதிதாய்
    உன்மையைச் சொன்னால்
    எதிர் வந்தவர் பலர்
    அவன் போலவே தான்
    ஆனால் அசல் வேறு
    நகல் வேறெனப் புரிதல்
    கொஞ்ச நாளில் கூடிற்று
    இனியாவது நாராயணணைக்
    காணக் கிடைக்குமா?
    பெட்டிகடை நாராயணனை
    எத்தனை பேருக்குத் தெரியும்?

No comments:

Post a Comment