சிவப்பெறும்பொன்று விரைத்துக்கிடந்தது
வரிசை வரிசையாய் நூற்றெறும்புகள்
வந்தன, பார்த்தன , முகர்ந்தன முகமொட்டி
சங்கிலி கோர்த்தார்போல் ஓரிழையில்
தோழமையின் அணிவகுப்பில் ஊர்ந்தன
ஒலியறியோம், மொழியறியோம்
விரைத்தவனை விட்டொழியாது
கடமையாய்க் கொண்டுசெல்லும்
காட்சி நம் முன்னர் கண்ணிமைப்பில்
அரிது அரிது எறும்பாயிருத்தலரிது

No comments:
Post a Comment