Wednesday, 14 May 2014

அரிது அரிது எறும்பாயிருத்தலரிது




சிவப்பெறும்பொன்று விரைத்துக்கிடந்தது
 வரிசை வரிசையாய் நூற்றெறும்புகள்
 வந்தன, பார்த்தன , முகர்ந்தன முகமொட்டி
 சங்கிலி கோர்த்தார்போல் ஓரிழையில்
 தோழமையின் அணிவகுப்பில் ஊர்ந்தன
 ஒலியறியோம், மொழியறியோம்
விரைத்தவனை விட்டொழியாது
 கடமையாய்க் கொண்டுசெல்லும்
 காட்சி நம் முன்னர் கண்ணிமைப்பில்
 அரிது அரிது எறும்பாயிருத்தலரிது

No comments:

Post a Comment